Sunday 17 November 2013

காதல் - 2 பாகம் 3

கணவனும் புள்ளயும் இருக்கறதாலதான் அவ என் கூட வரமாட்டேங்கறா. அவளை எப்படி வழிக்குக் கொண்டுவரணும்னு எனக்குத் தெரியும் என்று கரட்டாண்டியிடம் சொல்கிறான். அப்படியெல்லாம் எதுவும் செஞ்சிடாதீங்கண்ணே என்று அறிவுரை சொல்கிறான். நீயெல்லாம் எனக்கு யோசனை சொல்ற அளவுக்கு வளர்ந்துட்டியா... இனிமே இதுமாதிரி பேசினா என்னைப் பாக்க வராதே என்று அடித்து விரட்டுகிறான்.

அதைத் தொடர்ந்து சில அசம்பவிதங்கள் நடக்க ஆரம்பிக்கின்றன. ஐஸ்வர்யாவின் கணவர் ஓட்டிச் செல்லும் கார் ஒரு நாள் ஆக்ஸிடண்டில் சிக்குகிறது. கரட்டாண்டிக்கு முருகன் மேல் சந்தேகம் வருகிறது. ஆனால்எதுவும் சொல்லாமல் இருக்கிறான்.

சிறிது நாட்கள் கழித்து ஐஸ்வர்யாவும் குழந்தைகளும் ஒரு திருமணத்துக்குப் போகிறார்கள். கணவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்கிறார். அப்போது ஏ.சி. மிஷின் லீக் ஆகி வீட்டில் பெரும் விபத்து நடக்கிறது. கரட்டாண்டியின் சந்தேகம் அதிகரிக்கிறது. உண்மையில் முருகன்தான் சதி செய்கிறானா என்று தெரியவும் இல்லை. இருந்தாலும்வேண்டாம்னே விட்ருங்க அண்ணே என்று முருகனிடம் கெஞ்சுகிறான். அவனோ தனக்கு எதுவும் தெரியாது. சாமியா பாத்து கொடுக்கற தண்டனை என்கிறான்.

இன்னொரு நாள் ஐஸ்வர்யாவின் இரண்டு குழந்தைகளும் காணாமல் போய்விடுகிறார்கள். பக்கத்து வீடுநண்பர்கள் வீடுஉறவினர் வீடு என்று எங்கு தேடியும் காணவில்லை. கரட்டாண்டி நேராக ஐஸ்வர்யாவைச் சந்தித்து முருகன் தன்னிடம் சொன்னதைச் சொல்லிவிடுகிறான்.

கோபம் கொண்ட ஐஸ்வர்யா நேராக மருத்துவமனைக்கு விரைகிறாள். முருகனைப் போட்டு அடி அடியென்று அடிக்கிறாள். என் குழந்தைகளுக்கு மட்டும் எதுனா ஆச்சுன்னா உன்னைக் கொன்னே போடுவேன் என்கிறாள். முருகனோ துடி துடித்துப் போகிறான். நான் ஒன்ணும் செய்யலை ஐசு... என்னைப் போயி சந்தேகப்படறியே என்று கதறுகிறான். கரட்டாண்டியோ இவன்தான் செய்திருப்பான் என்று திட்டுகிறான்.

இதனிடையில் குழந்தைகள் கிடைத்துவிட்டார்கள் என்று வீட்டில் இருந்து போன் வருகிறது. உண்மையில் குழந்தைகள் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார்கள். வாட்டர் டேங்குக்குள் இருவரும் ஒளியப் போயிருக்கிறார்கள். இன்னொரு குழந்தை விளையாட்டுத்தனமாக வெளிபுறம் தாழ் போட்டுவிட்டது. உள்ளே மாட்டிக் கொண்ட குழந்தைகள் பயத்தில் மயங்கிவிட்டன. யாருக்கோ சந்தேகம் வந்து அங்கு போய் பார்த்த பிறகுதான் உண்மை தெரிந்திருக்கிறது. ஐஸ்வர்யா முருகனிடம் மன்னிப்பு கேட்கிறாள். கரட்டாண்டியும் மன்னிப்பு கேட்கிறான். எல்லாரும் போன பிறகு முருகன தனக்குள் முனகுகிறான் : இதுவரை நான் எதுவும் செய்யலை. ஆனாஇனிமே செய்வேன்.

சொன்னபடியே செய்கிறான். ஐஸ்வர்யாவைக் கடத்திக்கொண்டு போய்த் தன் நண்பனின் அறைக்குள் அடைத்து வைக்கிறான். பகலில் மருத்துவமனையில் பைத்தியம் போல் இருக்கிறான். இரவில் நைஸாக நண்பனின் ஹெஸ்ட் ஹவுஸுக்குப் போய்விடுகிறான். ஐஸ்வர்யாவின் மனத்தை மாற்ற முயற்சி செய்கிறான். அவள் முடியாது என்று மறுக்கவே கோபப்படுகிறான்.

அப்ப என்ன மயித்துக்குடி என்னைக் காப்பாத்தின. நான் பாட்டுக்கு பைத்தியமா இருந்துட்டு நிம்மதியா அநாதைப் பொணமா செத்துப் போயிருப்பேன்ல. என்ன மயித்துக்கு என்னைக் காப்பாத்தின?

என்னைக் காதலிச்ச பாவத்துக்காக நீ இப்படி பைத்தியமா அலையறதைப் பாத்த பிறகும் எப்படி என்னால போக முடியும்இரக்கப்பட்டு உன்னைக் காப்பாத்தினது தப்பா முருகா?

காப்பாத்தினது தப்பு இல்லை. காப்பாத்திட்டு காதல் இல்லைன்னு சொல்றில்ல அதுதான் தப்பு. ஊருக்காக வாழ்ந்தது போதும் ஐசு. உனக்காக வாழ ஆரம்பி. நமக்காக வாழ ஆரம்பி ஐசு.

நீயும் நானும் என காட்டுலயா வாழ்ந்திட்டு இருக்கோம். ஊருக்குள்ள நாலு பேர் மத்தியில தான வாழறோம். நாலு பேரை மதிச்சு நல்லது கெட்டதுக்குக் கட்டுப்பட்டுத்தான வாழணும்.

அது தேவையே இல்லை ஐசு. அப்படி நாம என்ன தப்புச் செஞ்சிட்டோம். காதலிக்கறது தப்பா ஐசு?

காதலிக்கறதுல தப்பே இல்லை. ஆனால்தப்பா காதலிக்கிறியே முருகா.

என் காதலை உன்னால புரிஞ்சுக்க முடியலையா ஐசு.

நீ என்னை இவ்வளவு காதலிக்காதன்னுதான உன் கிட்ட கெஞ்சிக் கேட்டுக்கறேன். என்னை விட்ரு. என் புருஷன் கிட்ட சொல்றேன். உனக்கு பொண்ணு பாத்து கட்டி வைப்பாரு. ரொம்ப நல்லவரு..

உன் புருஷன் நல்லவனாஎங்க இன்னொரு தடவை என் முகத்தைப் பார்த்துச் சொல்லு.

ஆமா. என் புருஷன் நல்லவருதான். இல்லைன்னா உன்னை கூட வெச்சுப் பாத்துக்கறேன்னு சொன்னதுக்கு சம்மதிச்சிருப்பாரா?

என்ன ஐசு இப்படிச் சொல்ற. உன்னை என் கிட்ட இருந்து பிரிச்சவன் ஐசு. அவனைப் போய் நல்லவன்னு சொல்றியே. தெரியாமத்தான் கேக்கறேன். கூட வெச்சிக் கவனிக்க சம்மதிச்சாருன்னு சொல்றியே... எனக்கு குணமானது தெரிஞ்சாகூட இருக்கவிடுவாராபைத்தியம் என்ன செஞ்சிடப் போகுது... இந்த கட்டில்சோஃபா மாதிரி அதுவும் ஒரு ஜடம்ன்னுதான பக்கத்துல வெச்சிக்க்க சம்மதிச்சிருக்கான். அவனைப் போய் நல்லவன்னு சொல்றியே. அதுவும் என் கிட்டயே...

நீ ஆயிரம்தான் சொன்னாலும் நல்ல மனசு இருந்தாத்தான் இப்படியெல்லாம் செய்ய முடியும். அவரு நல்லவருதான். உன்னை மாதிரியே நல்லவருதான்.

நல்லவன்னா என்ன செய்யணும் தெரியுமா... எனக்கு குணமாகிடிச்சுன்னு சொன்னதும் உன்னை என் கூட அனுப்பி வைக்கணும். அதைச் செய்வானா?

அது எப்படி முருகா முடியும்?

ஏன் முடியாது?. இப்ப நான் ஒரு பொருளை ஒருத்தர் கிட்ட பத்திரமா பாத்துக்குங்கன்னு கொடுத்துட்டுப் போறேன். கொஞ்ச நாள் கழிச்சு வந்து கேட்டா என்ன செய்யணும்... திருப்பித் தரணுமில்லையா. அதுதான முறை. அவன்தான நல்லவன். உன் புருஷன் நான் கேட்டா உன்னைக் கொடுப்பானாஇத்தனைக்கும் உன்னை அவன் என் கிட்ட கேட்டு எடுத்துட்டுப் போகலை. என்னை அடிச்சிப் போட்டுட்டு எடுத்துட்டுப் போயிருக்கான். உன்னால எப்படி ஐசு அவனுக்கு சப்போர்ட் பண்ணி பேச முடியுது. இனிமே அந்த ஆளை நல்லவன்னு என்கிட்ட எதுவும் பேசாத. அப்பறம் நான் நல்லவனா இருக்க மாட்டேன். இல்லைநான் தெரியாமத்தான் கேக்கறேன்உன்னால எப்படி ஐசு என்னை மறந்துட்டு அவன் கூட வாழ முடியுது.

அது என் தப்புத்தான். நீ எங்கயோ உசுரோட நல்லபடியா இருக்கன்னு நம்பித்தான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். உனக்கு பைத்தியம் பிடிச்சிருந்தது தெரிஞ்சிருந்தா நான் கல்யாணம் பண்ணியிருக்கவே மாட்டேன்.

அது பரவாயில்ல ஐசு. தப்புச் செய்யாத மனுஷனே கிடையாது. அதே நேரம் செஞ்ச தப்பை திருத்திக்கலைன்னா அவன் மனுஷனே கிடையாது. நீ தப்பு செஞ்சதுல தப்பு இல்ல ஐசு. அதைத் திருத்திக்க மாட்டேன்னு சொல்றியில்ல அதுதான் தப்பு.

நீ என்னதான் சொன்னாலும் என்னால உன் கூட வர முடியாது. கல்யாணம் மட்டும் ஆகியிருந்தாக் கூடப் பரவாயில்லை. ரெண்டு குழந்தைங்க வேற பிறந்திடுச்சே. எப்படி விட்டுட்டு வரமுடியும்..

அதனால என்ன ஐசு. அந்தக் குழந்தைகளையும் கூட்டிட்டு வர்றேன். எப்படியிருந்தாலும் எனக்குப் பிறந்திருக்க வேண்டிய குழந்தைங்கதான. என் குழந்தை மாதிரியே அன்பா பாத்துக்கறேன். நமக்கு வேற குழந்தை பிறந்தா இந்தக் குழந்தைங்களை கைவிட்டுருவேன்னு நினைச்சா நமக்கு குழந்தைங்களே வேண்டாம் ஐசு. எனக்கு உன் சந்தோஷம் முக்கியம் ஐசு. நீ இங்கயே இரு. உண் புள்ளைகளை இங்க கூட்டிட்டு வர்ரேன் என்று சொல்லிவிட்டுப் புறப்படுகிறான். குழந்தைகளை இங்க கொண்டுவராதே. என்னை அங்க கொண்டுபோய்விடு என்று ஐஸ்வர்யா கதறுகிறாள். அவளை அறைக்குள் பூட்டிவிட்டு நேராக அவர்களுடைய வீட்டுக்குச் செல்கிறான்.

(தொடரும்)

No comments:

Post a Comment