Wednesday 9 August 2017

காந்திய இந்துத்துவம்

காந்திக்கும் இந்துத்துவர்களுக்கும் இடையில் எத்தனையோ ஒற்றுமைகள் உண்டு. சாதி ஏற்றத்தாழ்வை அவர் எதிர்த்தார். சேவைப் பணிகளுக்கு முன்னுரிமை தந்தார். இந்துப் பாரம்பரியத்தை உயர்வாக மதித்தார். ராம ராஜ்ஜியம் அமைக்க விரும்பினார். சமஸ்கிருதத்தையும், ஹிந்தியையும் உயர்வாக மதித்தார். பசுவை தெய்வமாக மதித்தார். கிராம, சுதேசிப் பொருளாதாரத்தை முன்வைத்தார். எளிமை, தியாகம், பிரம்மசரியம் போன்றவற்றை முன்வைத்தார். இவை அனைத்துமே இந்துத்துவர்களும் தமது கொள்கை சார்ந்து மனப்பூர்வமாக ஏற்று, தீவிரமாகப் பின்பற்றும் விஷயங்களே. இஸ்லாமியர்களை எப்படி நடத்துவது என்ற விஷயத்தில்தான் இந்துத்துவர்களுக்கும் காந்திக்கும் இடையில் பிரச்னை வருகிறது. இன்னும் சரியாகச் சொல்வதென்றால் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை எப்படி எதிர்கொள்வது என்பதில்தான் இரு தரப்புக்கும் இடையில் முரண்பாடு வருகிறது.
இயல்பான நாட்களில் எளிய இஸ்லாமியர்களை காந்தியைப் போலவே இந்துத்துவமும் நட்புணர்வுடனே பார்க்கிறது. ஆனால், இஸ்லாமிய தீவிரவாதம் தன் கோர முகத்தைக் காட்டும் போது மட்டுமே இந்துத்துவர்கள் இஸ்லாமில் இருக்கும் எளியவர்களையும் சேர்த்து எதிரியாகப் பார்க்கிறார்கள். கோத்ரா படுகொலை நடக்காமல் குஜராத் பதிலடிகள் நடப்பதில்லை. பத்தாண்டுகால முழு அதிகாரம் கையில் இருந்தபோதும் எந்தப் பழிவாங்கலிலும் நரேந்திர மோதி ஈடுபடவில்லை என்பதில் இருந்து அவருடைய நோக்கம் இஸ்லாமிய அழித்தொழிப்பு அல்ல என்பதைப் புரிந்துகொள்ளமுடியும். நூற்றாண்டுகால இஸ்லாமிய அராஜகத்துக்குப் பின்னும் இந்து மன்னர்கள் இஸ்லாமிய அழித்தொழிப்பில் ஈடுபடவில்லை. போரும் தீவிரவாதமும் உச்சத்தை எட்டும் போது மட்டுமே இந்துத்துவரின் வாள் எளிய இஸ்லாமியரின் தலையை வெட்டியிருக்கிறது.

என் தரப்பு எளிய மக்களைக் கொடூரமாகக் கொல்பவனுக்கு அந்த வலியை நான் எப்படி உணர்த்துவது..? இதுதான் முன்னால் இருக்கும் கேள்வி.

முதலில் உன் தரப்பு அப்பாவிகள் எதிரி தரப்பால் கொல்லப்படாமல் பாதுகாத்துக்கொள்...

எதிரி தரப்பில் இருக்கும் கொலைகாரர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கொல்...

இதுதான் ஒவ்வொரு தரப்பும் செய்ய வேண்டிய செயல். ஆனால், இது நடைமுறையில் சாத்தியமில்லாத செயல். ஏனென்றால், எப்போது அபாயம் சூழும் என்பதைக் கணிப்பதும்,  கலவர மேகம் சூழும்போது பாதுகாப்பான இடத்துக்கு அனைவரையும் அழைத்து வருவதும் கடினம். அதற்காக எல்லாரையும் எல்லா நேரங்களிலும்  பாதுகாப்பு வளையத்துக்குள் நிறுத்தி வைப்பதும் கடினம்.

இப்படியான ஒரு சூழலில்தான் எதிரிகள் தன் தரப்பு அப்பாவிகளைக் கொல்கிறான் என்ற செய்தி கிடைக்கும்போது எதிர் தரப்பு அப்பாவிகளைக் கொல். அப்போதுதான் அவனுக்கு அது உறைக்கும் என்ற முடிவை ஒருவன் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கிறான். இது நிச்சயம் தவறான வழிதான். என்னைக்கண்ணைக் குத்தியதற்கு பதிலடியாக நான் அடுத்தவனின் கண்ணைக் குத்தினால் உலகம் குருடாகத்தான் ஆகும் என்று சொல்வார்கள். ஆனால், நான் பதிலடி கொடுப்பதால்தான் என்னுடைய இன்னொரு கண்ணை அவன் குத்தாமல் இருப்பான் என்றால்  அங்கு வன்முறையும் நல் விளைவைத் தரும் செயலாகிவிடுகிறது.

இதில் இன்னொரு அம்சமும் இருக்கிறது. ஒருவேளை தன் தரப்பு அப்பவிகள் கொல்லப்படும்போது எதிர் தரப்பு அப்பாவிகள் அதைத் தடுத்தாலோ, எதிர் தரப்புக் கொலைகாரர்களை காட்டிக்கொடுத்தோ அப்புறப்படுத்தியோ உதவினாலோ எதிர் தரப்பு அப்பாவிகள் மீது ஒரு தரப்புக்கு நம்பிக்கை வரும்; கரிசனம் ஏற்படும். ஆனால், அப்பாவிகள் தமது தரப்பு கொலைகாரர்கள் செய்யும் எல்லா வித அராஜகங்களையும் மவுனமாக ஆதரிப்பவர்களாகவே இருக்கும்போது கொலை செய்பவர் மட்டுமல்ல... கொலையாளியை மறைத்து வைப்பவரும் தண்டிக்கப்படவேண்டியவரே என்று ஒரு தரப்பு முடிவுசெய்கிறது.

தன் தரப்பு அப்பாவிகள் கொல்லப்படும்போது மவுனமாகவும் அல்லது மிதமாகவும் எதிர் தரப்பு அப்பாவிகள் கொல்லப்படும்போது ஆவேசமாகவும் எதிர்வினையாற்றும் ஒருவர் மீது கோபமே வரும். இரு தரப்பு அப்பாவிகள் மீதும் ஆத்மார்த்தமான நேசம் உண்டு என்பதை இரு தரப்பு அடிப்படைவாதிகளையும் அவரவர் செய்யும் அநீதிகளுக்கு ஏற்பக் கண்டிக்கவேண்டும்.

காந்தியிடம் கோட்சே ஒரே ஒரு கேள்வியைத்தான் கேட்டிருக்கவேண்டும். அஹிம்சையை அதுவும் பெரிதும் பாதிக்கப்படும் இந்துக்களிடம் போய் ஏன் பேசுகிறீர்கள். பாகிஸ்தான் என்றும் கிழக்கு பாகிஸ்தான் என்றும் அடையாளப்படுத்தப்படும் பகுதிகளில் மாட்டிக்கொண்டிருக்கும் இந்துக்கள் அனைவருமே அங்கிருக்கும் இஸ்லாமியர்களால் கொல்லவும் கற்பழிக்கவும் அடித்துத் துரத்தவும் படுகிறார்கள். இந்தியாவின் 90 சதவிகிதப் பகுதியில் 90 சதவிகித இந்துக்களுக்கு மத்தியில் இருக்கும் இஸ்லாமியர்கள் மேல் ஒரு சிறு கீறல்கூட விழவில்லையே... இந்துத்துவத்தின் விளைநிலமான சிவாஜி மகராஜின்  மகாராஷ்டிராவில் ஒரு முஸ்லீம் கூடக் கொல்லப்படவில்லையே.
பஞ்சாப் பகுதியிலும் வங்காளப் பகுதியிலும் இருக்கும் இந்துக்கள் மட்டுமே பதிலடியாக... சரி இந்த உண்மையை நீங்கள் ஏற்கவில்லையென்றாலும் அந்தப் பகுதி இந்துக்கள் மட்டும்தானே ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள். சீக்கிய மதத்தின் புனிதப் பொருள்களில் ஒன்றாக வாள் எப்படி வந்து சேர்ந்தது என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன..? அஹிம்சையை நீங்கள் யாருக்கு போதிக்கவேண்டும்? இந்துவுக்கா..? இந்தியாவில் இருக்கும் 90 சதவிகித இந்துக்களிடமிருந்து இஸ்லாமியத் தீவிரவாதிகளே அஹிம்சையைக் கற்றுக்கொள்ளுங்கள்... இந்து அடிப்படைவாதிகளே நீங்களும் கற்றுக்கொள்ளுங்கள் என்றுதானே நீங்கள் சொல்லியிருக்கவேண்டும் என்ற ஒற்றைக் கேள்வியைக் கேட்டிருந்தால் போதும்... காந்தி அன்றே அம்பலப்பட்டு ஓரங்கட்டப்பட்டிருப்பார்.

அஹிம்சையை போதிப்பவர்கள் இரு தரப்பிலும் அப்பாவிகள் கொல்லப்படாமல் பாதுகாக்க போதிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.

இன்னும் சொல்லப்போனால், பழங்காலத்தில் மன்னர்களுக்கு இடையே சண்டைகள் நடக்கும்போது தனியாக ஒரு மைதானத்தில் மோதுவதுபோல் தனியாகப் போய் சண்டை போட்டுக்கொள்ள ஓர் ஏற்பாடு செய்யவேண்டும். எல்லையில் நடக்கும் போர்களும் நாடுகளுக்கு இடையில் நடக்கும் போர்களும் ஒருவகையில் மரணத்தைத் துணிந்து ஏற்கும் வீரர்களுக்கு இடையில்தானே நடக்கின்றன. மதப் போருக்கும் கூட தனியாக குருசேத்திரத்தை ஒதுக்கித் தந்துவிடலாம். அஹிம்சைவாதிகள் முன்னெடுக்க வேண்டிய முக்கியமான விஷயம் இது. காந்தியவாதிகள் நிச்சயம் இதை மறுக்க வாய்ப்பு இல்லை. ஏனென்றால் பிரிட்டிஷாரின் நலனுக்காக இரண்டு உலகப் போரிலும் இந்திய சிப்பாய்களை வீரத்திலகம் இட்டு அனுப்பியவர் அல்லவா..? (தென் ஆப்பிரிக்காவில் மட்டுமே அவர் மருத்துவ செஞ்சிலுவைப் படையை நடத்தினார். இந்தியாவில் இந்திய சிப்பாய்களை வீர மரணம் அடையவே அனுப்பினார்).

இந்துத்துவர்களையும் காந்தியவாதிகளையும் இடதுசாரிகள் என்று சொல்லிக்கொள்ளும் கூட்டமும் எதிர்த்துவருகிறது. கூர் நகங்களில் மென்விலங்குகளின் சதைத் துணுக்குகளும் கோரப் பற்களில் சொட்டும் ரத்தமுமாக இருக்கும் ஓர் ஓநாயானது, மந்தையைக் காக்கப் போராடும் காவல் நாயைப் பார்த்து, ஏய்... குரைக்காதே... ஏய் கொல்லாதே  என்று கட்டளையிடுவது போன்றதுதான்.

இப்படி என்னதான் காரணங்கள் சொல்ல முடியுமென்றாலும் இந்துத்துவர்கள் செய்தது நிச்சயம் மன்னிக்க முடியாத குற்றமே. ஆனால், இறப்பு நிகழாத வீட்டில் இருந்து ஒரு குவளை நீர் வாங்கி வா என்று புத்தர் சொன்னதுபோல், ரத்தக் கறை படியாத அரசியல் சித்தாந்தம் மட்டுமே இதைப் பேசும் அருகதை கொண்டது.

காந்தியம் நிச்சயமாக இந்த தார்மிக பலம் கொண்ட கருத்தாக்கமே. ஆனால், இந்துத்துவவாதிகள் என்றால் காந்தியத்தைப் பழித்தே தீரவேண்டும் என்றும் காந்தியவாதி என்றால் இந்துத்துவத்தைப் பழித்தே தீரவேண்டும் என்றும் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படவேண்டிய அவசியமில்லை.இது என்னவோ இந்தியாவின் ஒரே பிரச்னை இஸ்லாமிய தீவிரவாதத்தைக் கையாள்வது மட்டுமே என்று சொல்வதற்கு இணையானது.

காந்தியவாதிகள்(ளும்) இந்துத்துவர்களைத் தனிமைப்படுத்துவதன் மூலமும் இந்துத்துவர்கள் காந்தியையே மறுதலிப்பதன் மூலமும் இரு தரப்புமே தமது இலக்குகளில் வெகுவாகத் தோற்றுப்போகவே செய்கிறார்கள்.

காந்தியத்துக்கும் இந்துத்துவத்துக்கும் இடையில் 90 சதவிகித விஷயங்களில் ஒற்றுமை இருக்கும் நிலையில் அந்த விஷயங்களில் எல்லாம் ஒன்றுகூடிப் போராடியாக வேண்டிய தேவையும் இருக்கும் நிலையில் இரு தரப்பினரும் நெருங்கிவரவேண்டியது மிக மிக அவசியமே. அந்த 90 % விஷயங்களில் உண்மையான அக்கறை இருந்தால் மட்டுமல்ல, இஸ்லாமியத் தீவிரவாதப் பிரச்னையில் உண்மையான கவலை இருந்தாலும் இந்த இரண்டு தரப்பும் இணைந்து செயல்பட்டாகவேண்டும். எதிரி எப்போதோ ஊருக்குள் புகுந்தாயிற்று. நேச சக்திகள் உண்மை எதிரியை இனங்காண வேண்டியது மிக மிக அவசியம்.

Saturday 22 July 2017

இந்து மதமும் அடிமைகளும்

இந்து மதத்தில் பிராமணர்களைத் தவிர வேறு யாரும் கல்வி கற்கவே இல்லை என்பதுதான் நவீன இந்தியாவின் மெக்காலே க்ளோன்களின் முதல் முத்திரை முழக்கமாக இருந்தது. துவிஜர்களில் பிற ஜாதியினரும் சூத்திரர்களில் பெரும்பாலானவர்களும் கல்வி பெற்றதற்கான ஆதாரங்கள் வரிசையாக வந்து குவியவே, தலித்களுக்கு கல்வி தரப்படவே இல்லை என்று முழங்க ஆரம்பித்தனர். கூடவே தலித்கள் அடிமைகளாக மட்டுமே நடத்தப்பட்டதாக வெர்ஷன்.2 முழக்கமும் சேர்ந்திருக்கிறது (சேற்றில் மட்டுமே எத்தனை காலம் தான் புரளுவது. சிந்தனை முதுமை அடையும்போது அதில் தன் மலத்தையும் சிறுநீரையும் கலந்து கொள்வது தவிர்க்கமுடியாத விஷயம்தானே).

தான் ஆட்சி செய்ய விரும்பும் மக்கள் மனதில் முதல் ஆக்கிரமிப்பாளன் தான் அல்ல; ஏற்கெனவே இங்குள்ள ஆதிக்க சக்தியும் வந்தேறியே என்ற ”வரலாற்று உண்மையை’ விதைப்பது அவசியமாக இருந்தது. அதுபோலவே உலகம் முழுவதையும் அடிமைப்படுத்திய தன்செயலை நியாயப்படுத்த எல்லா ஊரிலுமே அடிமைத் தொழில் / அடிமை வாழ்க்கை இருக்கத்தான் செய்தது என்று ”விஞ்ஞானபூர்வமான வரலாற்றை’ எழுதுவதும் அதி அவசியமான அரசியல் செயலே. அவர்கள் மீது குற்றம் சொல்லவே முடியாது. நாயைக் கொல்ல விரும்பினால் அதற்குப் பைத்தியம் பிடித்துவிட்டதாகச் சொல்லிய பிறகு கொல்லும் சட்ட ஒழுங்குக்குக் கட்டுப்பட்டவர்கள் அல்லவா... அவர்கள் அப்படி வசதியான வரலாறை உருவாக்கத்தான் செய்வார்கள். நம்மவர்களில் அதை அப்படியே முழங்கும் கிளிப்பிள்ளைகளைப் பார்க்கும்போது படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோன்னு போவான் என்ற வரியே நினைவுக்கு வருகிறது.

தமிழகத்தை எடுத்துக்கொண்டால் பறையர், பள்ளர் என்ற சாதியினர் தலித் ஜாதிகளின் முன்னணிப் பிரிவினராக இருக்கிறார்கள். இதில் பள்ளர்கள் தம்மை நிலவுடமை சாதிகளாகவே நினைக்கிறார்கள். நாங்கள் தலித்துகள் அல்ல என்பதுதான் இட ஒதுக்கீட்டு அரசியல் தாண்டிய அறிவுத் தளத்தில் அவர்கள் சொல்லும் வாதம். அவர்கள் நிச்சயம் அப்படியான மேலான நிலையில் இருந்திருப்பார்கள் என்பதற்கு பசு மாமிசத்தை அவர்கள் தவிர்ப்பது மிக நியாயமான அழுத்தமான ஆதாரம். பிரிட்டிஷ் ஆவணங்களில் இது இருக்காது என்றாலும் குறைந்தபட்ச தர்க்க உணர்வும் நியாய உணர்வும் தன் தாய் (மதம்) கொஞ்சமாவது கற்புடையவளாக இருந்திருப்பாள் என்ற குறைந்தபட்ச நம்பிக்கையும் உள்ளவர்களுக்குப் புரியக்கூடிய உண்மையே.

அடுத்ததாக அயோத்தி தாஸர் போன்ற பறையர் குலத் தலைவர்கள் பறையர்களைப் பூர்வ பவுத்தர்கள் என்றும் பவுத்தத்தின் வீழ்ச்சியையொட்டி சமூகத்தின் கீழடுக்குக்கு நகர்த்தப்பட்டவர்கள் என்றுமே சொல்கிறார்கள். சக்கிலியர்களுக்கு நிலம் தானமாகத் தரப்பட்டது தொடர்பான கல்வெட்டு ஆதாரங்கள் இருக்கவே செய்கின்றன. அப்படியாக சக்கிலியர்களும் நிலவுடமை சமூகமாக இருந்த காலமும் இருக்கத்தான் செய்திருக்கிறது.

அடுத்ததாக, பெரும்பாலான பறையர், பள்ளர், சக்கிலியர், தோட்டியர் போன்ற சாதியினர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்தவர்களாக இருந்திருக்கிறார்கள். குத்தகை உரிமை என்பது அரை சொத்துரிமைக்கு சமம். அதிலும் கிறிஸ்தவ பிரிட்டிஷ் அரசுகள் போல் கெடு வரி வசூலிக்காத இந்து மன்னர்களின் ஆட்சி காலத்தில் குத்தகை உரிமை நிச்சயம் மேலானதாகவே இருந்திருக்கும்.

இப்படியாக தலித்களின் கடந்த காலம் தொடர்பாக அந்த மக்களின் தலைவர்களும் அவர்களுடைய நூல்களும் வேறுவிதமாகச் சொல்லும் நிலையிலும் அதெல்லாம், கிடையாது நீ அடிமையாகத்தான் இருந்தாய் என்று அடித்துச் சொல்லும் அளவுக்கு அவர்கள் மீது வெறுப்பு அதுவும் நல்லெண்ணப் போர்வையில் வெளிப்படுவதைப் பார்க்கும்போது அப்படிச் சொல்பவர்களின் எதிரி யார் என்ற குழப்பம் ஏற்பட்டுவிடுகிறது.
அடுத்ததாக, பிரிட்டிஷ் கிறிஸ்தவர்களின் வருகையென்பது தலித்களுக்கு (ஏட்டுக்) கல்விக் கண்ணைத் திறந்துவிட்டது என்ற கூற்றில் இருக்கும் உண்மையைவிட அதுதான் அயல்நாட்டுத் தேயிலைத் தோட்டங்களுக்கு தலித்களை அடிமைகளாகக் கடத்திச் சென்று கொடூரமாக ஒடுக்கியது என்ற சொல்லப்படாத கூற்றில் அதிக உண்மை இருக்கிறது. இதற்கும் பிரிட்டிஷ் ஆவணங்களில் ஆதாரங்கள் எதுவும் கிடைக்காது. அதில் தேயிலைத் தோட்டங்களில் தலித்கள் சந்தோஷமாக இருந்ததாகவும் ஊருக்குத் திரும்பி அந்தப் பணத்தில் நில புலன் வாங்கிய கதைகளை மட்டுமே ஆவணப்படுத்தியிருப்பார்கள். நீக்ரோக்களைப் பெருங்கருணையுடன் நடத்திய ஐரோப்பிய சமூகம் இந்திய தலித்களை மட்டும் கொடுமைப்படுத்தியிருக்குமா என்ன..? எனவே இதுவும் பெரும்பான்மை ஆவணங்கள் மூலம் நிரூபிக்க முடியாத உண்மையாகவே இருக்கும். ஆனால், மேற்குப் பக்கம் திரும்பி நின்று கிழக்குக்கு முதுகைக் காட்டும் நபர்கள் தவிர மற்றவர்களுக்குத் தென்படும் பிரமாண்ட பிரத்யட்ச சூரியன் போன்றதே இந்த உண்மை.

அடுத்ததாக, அவர்ணர்கள் என்ற வகைப்பாட்டில் மிகவும் இழிவான நிலையில் பஞ்சமர்கள் நடத்தப்பட்டதாகச் சொல்லப்படுபவை பிராமணர்களால் மட்டும் வேண்டுமானால் (ஒரு வாதத்துக்காகத்தான்) பின்பற்றப்பட்டிருக்கலாம். பிற சாதியினர் இப்படியாக விலக்கி வைத்திருக்கும் வாய்ப்பு மிக மிகக் குறைவு. சாதிக் கலப்பை பிற சாதியினர் மூர்க்கமாகத் தவிர்த்த/தடுத்த நிலையிலும் கண்ணில் படவே கூடாது என்றெல்லாம் செய்திருப்பார்கள் என்று நம்பமுடியவில்லை. அதிலும் பவுத்த, சமண, இஸ்லாமிய அரசுகள் இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அரசாண்டிருக்கும் நிலையில் இப்படியான நிலை நிச்சயம் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. புத்தர் சாதி ஏற்றத் தாழ்வு குறித்து இப்படியான கொடூரச் சித்திரத்தையோ எதிர்ப்பையோ எங்குமே பதிவு செய்திருக்கவில்லை. இந்தியாவுக்கு வந்து சென்ற பயணிகள் எழுதிய குறிப்புகளில் கூட இணக்கமான சமூகச் சித்திரமே இருக்கிறது. எனவே, தலித்கள் அடிமைகளாக நடத்தப்பட்டனர் என்பது எஜமானரே நாணி வெட்கும் அளவுக்கான அறிவுஜீவி ஜால்ரா மட்டுமே.

கடைநிலை சாதியினர் குறைந்த எண்ணிக்கையில் கல்வி பெற்றதற்கு மேல் சாதியினரின் ஒடுக்குமுறை மட்டுமேதான் காரணமாக இருக்குமா... கருணை மிகு மிஷனரிகள் சமத்துவப் பள்ளிகளை வதவதவெனத் திறந்துவிட்டு 200-300 ஆண்டுகள் கழித்தும் காமராஜர் மதிய உணவு போட்டுத்தான் வரவழைக்கவேண்டியிருந்தது; அப்போதும் இடை நிற்றல் அந்தப் பிரிவு மக்களிடையே அதிகமாக இருந்தது என்றால் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்ற எளிய நம்பிக்கையும், ஏட்டுக் கல்வியின் இறுக்கமான கெடுபிடிகள் அந்தப் பிரிவினரின் சுதந்தரக் கற்றலுக்கு எதிரிடையாக இருந்ததும் கூடத்தான் காரணமாக இருந்திருக்கும்.

இந்திய அளவில் ஜாதிய வாழ்க்கை என்பதே குலத் தொழில் வாழ்க்கைக்கான ஆதாரமாக இருந்திருக்கிறது. குலத் தொழில் வாழ்க்கையே கல்விப் பரவலுக்கான தேவையை நெறிப்படுத்தியதாக இருக்கிறது. தெய்வங்கள் பல... வாழ்க்கை மதிப்பீடுகள் பல... என்ற உயரிய பன்மைத்துவ ஆன்மிக நம்பிக்கையின் தவிர்க்க முடியாத கருநிழலே/நீட்சியே ஜாதியப் பார்வை. ஒவ்வொரு தெய்வத்தை வணங்குபவர்களும் ஒவ்வொரு குலம் என்பதே ஜாதி உணர்வின் அடிப்படை. அதுவே சமூகத் தளத்தில் ஒவ்வொரு குலத்துக்கும் ஒவ்வொரு தொழில் என்பதாக நிலைபெற்றிருக்கிறது. ஏட்டுக் கல்வி மூலம் பல தொழில் கற்று பிடித்ததைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வாய்ப்பை அதுவே தள்ளியும்போட்டிருக்கிறது. மன்னராட்சி மறைவு, தொழில்புரட்சி உதயம், அச்சு இயந்திரக் கண்டுபிடிப்பு போன்ற காரணங்களோடு இதுவும் ஒரு காரணமாக அதனளவில் இருந்திருக்கிறது.

ஜாதிவிட்டு ஜாதி மாறுதல் என்றால் தெய்வத்தை மாற்றிக்கொள்ளுதல் என்பதால்தான் சமூக அங்கீகாரம் அதற்குக் கிடைக்கவில்லை. சிவனை வணங்கும் சைவர்களை விஷ்ணுவை வணங்கும் வைஷ்ணவர் விலக்கிவைப்பதற்கும் பறையர்களிலேயே ஒரு பறையர் குலம் இன்னொரு பறையர் குலத்துடன் கொள்வினை கொடுப்பினை செய்யாமல் இருப்பதற்கும் இந்த வெவ்வேறு தெய்வ நம்பிக்கையே காரணம். பல தெய்வங்களை அனுமதிக்கும் சமூகத்தில் பல ஜாதிகள் இருந்தே தீரும். ஒற்றை தெய்வத்தை வலிந்து திணிக்கும் மதங்களில் ஜாதிகள் இல்லை என்பதில் இருந்து இந்த உண்மையை ஒருவர் புரிந்துகொள்ளமுடியும்.

தெய்வங்களையோ அதனால் ஜாதிகளையோ மாற்றிக்கொள்ள அனுமதிக்காததில் பெரிய தவறில்லை. ஆனால், தொழில்களை மாற்றிக்கொள்ள அனுமதித்திருக்கலாமே என்ற கேள்வி ஒருவருக்கு இங்கு நிச்சயம் எழும். ஆனால், கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற ஒற்றை தெய்வத்தை வணங்கிய சமூகத்திலேயே மன்னரின் மகனே மன்னராகவும் அடிமையின் மகன் அடிமையாகவுமே இருந்த நிலையில் வேறு வேறு ஜாதிகளாக இருந்தவர்கள் குலத் தொழிலை மாற்றிக்கொள்ளாதது பற்றி அப்படி ஒன்றும் தர்மாவேசம் கொண்டுவிட முடியாதென்பதே உண்மை.

எனவே, பன்மைத்துவத்தை அடிப்படையாகக்கொண்ட இந்து ஆன்மிகக் காமதேனுவின் தவிர்க்க இயலா சாணியே ஜாதிய ஒடுக்குமுறை. காமதேனு என்பது சாணி போடும் ஒரு விலங்கு மட்டுமே என்று அதன் ஆசனவாயை மட்டுமே பார்த்துச் சொல்பவர்கள் நிச்சயம் ஓர் அறிவியல்பூர்வமான நேர்மையான உண்மையைத்தான் சொல்கிறார்கள். ஆனால், அது சாணியை மட்டுமே போடவில்லை என்பது அதன் பாலை ஒரு சொட்டாவது அருந்தியவர்களுக்கு மட்டுமே தெரியவரும். அதற்கு ஆசனவாயில் இருந்து கண்ணை அகற்றிக் கொண்டாகவேண்டியிருக்கும். கழுகுக்குப் பிணம்; பன்றிக்கு மலம்; இடதுசாரிகளுக்கு மிகைப்படுத்தப்பட்ட எதிர்தரப்புக் குறைகள் (மட்டுமே) என்ற நிலையில் இது சாத்தியமில்லாத விஷயமே. ஆனால், இழப்பு காமதேனுவுக்கோ அதன் பாலைச் சில சொட்டுகள் அருந்தியவர்களுக்கோ அல்ல.

Friday 21 July 2017

பாரதப் பாரம்பரியக் கல்வி

பாரதப் பாரம்பரியக் கல்வி பற்றிச் சொல்லப்படும் வாக்கியங்களில் பெரும்பாலானவை மேம்போக்கானவையாகவும் அரை உண்மைகளைப் பேசுபவையாகவும் அரசியல் சார்புடனுமே இருக்கின்றன.

பாரதப் பாரம்பரியக் கல்வி முறையில் அனைத்து ஜாதியினருக்கும் கல்வி தரப்படவில்லை. இந்தியாவில் கிறிஸ்தவ மடாலயங்களால் தொடங்கப்பட்ட பள்ளிகளில்தான் அனைத்து ஜாதியினருக்கும் கல்வி முதன்முதலாகத் தரப்பட்டது என்பதுதான் பலரும் உற்சாகத்துடன் சொல்ல விரும்பும் வாக்கியமாக இருக்கிறது.

தொழிற்புரட்சி நடப்பதற்கு முன்பாக உலகில் கடைநிலைப் பிரிவுகளில் இருந்தவர்களுக்கு என்றுமே எங்குமே கல்வி தரப்பட்டிருக்கவில்லை (கிறிஸ்தவம் தோன்றிய நாடுகளிலும்) என்பதை அவர்கள் சொல்லவே மாட்டார்கள்.
உலகம் முழுவதும் மன்னராட்சி காலத்தில் குலத் தொழிலே மிக முக்கியமானதாக இருந்துவந்திருக்கிறது. அனைத்து கல்வித் துறைகள் சார்ந்த பாடங்களையும் அச்சடிக்கப்பட்ட புத்தகங்களையும் கொண்ட ஏட்டுக் கல்வி என்பது மன்னராட்சி வலுவிழக்கத் தொடங்கிய, அச்சு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட, தொழில் புரட்சி ஏற்பட்ட பிறகே உலகம் முழுவதிலும் வந்திருக்கிறது. பாரதத்திலும் அப்படியாகவே நடந்திருக்கிறது என்பதைச் சொல்லாமல் இந்து மதம் மட்டுமே கடைநிலையில் இருந்தவர்களைக் கல்வியில் ஓரங்கட்டியதுபோன்ற சித்திரத்தை உருவாக்குவார்கள்.

பாரதப் பாரம்பரியப் பள்ளிகளில் கடைநிலை சாதியைச் சேர்ந்த சிலர் படித்திருப்பதை எடுத்துக்காட்டினால் அது விதி விலக்கு என்று நிராகரித்தும்விடுவார்கள். ஆதி காவியத்தை எழுதியவர் கடை நிலைத் தொழிலில் இருந்தவர் (அல்லது ஆதி காவியம் கடைநிலைத் தொழிலில் இருந்தவரின் பெயரிலேயே தொகுக்கப்பட்டிருக்கிறது) என்பதை புராணம் என்று ஒதுக்கிவிடுவார்கள். மேற்குலக விதி விலக்குகள் மட்டுமே பொருட்படுத்தத் தகுந்தவை!

பவுத்தம், சமணம், இஸ்லாம் போன்றவை பாரதத்தில் பல நூற்றாண்டுகள் இருந்த நிலையிலும் கடைநிலைப் பிரிவினர் கல்வி கற்காமல் இருந்ததற்கு இந்து சமூக சாதி அமைப்பே காரணம் என்ற அர்த்தம் வரும்வகையிலேயே இந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கவும்படும்.

அந்தக் குலவழிக் கல்வியில் இந்து சமூகம் கட்டடக்கலையில், நகைக் கலையில், விவசாயத்தில், மருத்துவத்தில், அரச நிர்வாகத்தில், ஆயுத உற்பத்தியில், ஆன்மிகத்தில், பொருளாதாரத்தில், கணிதத்தில், இலக்கியத்தில், சமூக ஒழுங்கமைவில் உன்னத நிலையில் இருந்ததைச் சொல்லமாட்டார்கள்.

கிறிஸ்தவர்களால் இந்தியாவில் கொடுக்கப்பட்ட கல்விதான் தாய் மொழிக் கல்விமீது நடத்தப்பட்ட மாபெரும் முதல் தாக்குதல். இந்துப் பள்ளிகள் ஒரு சில நூற்றாண்டுகள் கழித்து அதே பாதையில் வீர நடை போடத் தொடங்கியுள்ளன என்றாலும் தாய் மொழிக் கல்வியின் நெஞ்சில் கத்தியைச் செருகியது கிறிஸ்தவ மடாயலங்கள்தான் என்பதைச் சொல்லவேமாட்டார்கள்.

அந்த கிறிஸ்தவ மடாலயங்கள் கற்றுத் தந்த கல்வி என்பது பெரும்பாலும் நவீன சமூகத்து வேலை ஒன்றை இலக்காகக் கொண்டு கற்றுத் தரப்படுவது. அங்கு வேறு தர்மங்களுக்கு எந்த முக்கியத்துவமும் கிடையாது. குலவழிக் கல்வி தரப்பட்ட காலத்தில் ஒரு பிராமண மருத்துவர் தலித்துக்கு மருத்துவம் பார்த்திருக்கவில்லைதான். ஆனால், தலித்களுக்கு திறமை வாய்ந்த தலித் மருத்துவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதைச் சொல்லமாட்டார்கள். அதுமட்டுமல்லாமல் பிராமண மருத்துவர், பிராமணர்களுக்கு அவர் நேர்மையான மருத்துவ சிகிச்சையையே தந்திருக்கிறார். இன்றைய அலோபதி மருத்துவர்கள்போல் வாங்கிப் போட்ட மிஷின்களின் பணத்தை கறந்தாகவேண்டுமென்றும் கட்டி வைத்திருக்கும் மருத்துவமனைக்கான வட்டிக்காக நோயாளியின் உடம்பில் கத்தியைப் பாய்ச்சியாகவேண்டும் என்றும் அவர்கள் நடந்துகொள்ளவில்லை.

இதற்கு முக்கிய காரணம் அன்றைய குல வழிக் கல்வி தர்மத்துக்கு உட்படதாக மதச் செல்லாக்குக்கு உட்பட்டதாக இருந்தது. என்றைக்கு கல்வியில் இருந்து மத நீக்கம் செய்யப்பட்டதோ அன்றே அது தனி நபரின் தர்ம நம்பிக்கைக்கு உட்பட்டதாக ஆகிவிட்டது. பெரும்பாலான இன்றைய மருத்துவர்கள் சுய நலமிகளாகிவிட்டிருப்பதற்கு நவீனக் கல்வியின் மத நீக்கமே காரணம். நவீன மருத்துவர்களின் தவறுக்கு நவீன மருத்துவமோ அறிவியலோ காரணமல்ல. ஆனால், பாரம்பரிய மனிதர்களின் தவறுகளுக்கு மட்டும் பாரம்பரிய மதமே காரணம் என்பதுதான் ஆதாயம் தரும் உண்மை என்பதால் அதுவே ஆறத் தழுவிக்கொள்ளப்படுகிறது.

முந்தைய காலகட்டத்தில் குல வழித் தொழில் உலகம் முழுவதும் இருந்தபோது ஒவ்வொரு குலத்தைச் சேர்ந்தவரும் தத்தமது குல முன்னோர்களிடமிருந்து கண்டும், கேட்டும், கைகளால் செய்து கற்றுக் கொண்டதைக் கல்வி என்று சொல்ல முடியாதா என்ன? இன்றைய நவீனக் கல்வியைவிட வேலைக்கான உத்தரவாதத்தை அது மிக தெளிவாக அழுத்தமாக 100 சதம் உறுதி செய்திருந்தது. இன்று நவீன கல்வி பெற்று வேலையில்லாமல் இருப்பதுபோல் அன்று யாரும் நடுத்தெருவில் விடப்பட்டிருக்கவில்லை.

பீ அள்ளுவது ஒரு வேலையா... குலவழித் தொழிலாக அதைச் செய்ய நேர்ந்ததற்கு இந்து சாதி அமைப்புதானே காரணம். பிரிட்டிஷார் அறிமுகப்படுத்திய அனைத்து ஜாதியினருக்கும் கல்வி என்பதுதானே அவர்களை அந்த இழிவான தொழிலில் இருந்து மீட்டது என்ற வாதத்துக்கு மூன்று பதில்கள் சொல்ல முடியும்.

ஒன்று அந்தத் தொழில் வெகு பிந்தைய காலத்தில் தோன்றியது.

இரண்டாவதாக சிந்து சரஸ்வதி காலகட்ட நகரம் என்பது தெளிவான கழிப்பறைக் கால்வாய் வசதியுடன் அமைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது அனைவருக்கும் கல்வி கொடுக்காததால்தான் ஒரு சாதி மலம் அள்ளும் வேலையில் முடங்கிவிட்டது என்று சொல்வதை ஏற்கவே முடியாது.

மூன்றாவதாக, ஏராளமான சீர்திருத்தச் செம்மல்களும் நவீன அறிவியல் மேதைகளும் கார்ப்பரேட் கொம்பன்களும் உருவாகிவிட்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் கூட சாக்கடை வேலைகள் மனிதர்களாலேயே செய்யப்பட்டும் வருகின்றன. நவீன கல்வியும் நவீன காலகட்டமும் ஏற்படுத்தியிருக்கும் இந்த இழிநிலையைவிட இத்தகைய வசதி வாய்ப்புகள் இருந்திராத பாரம்பரிய காலகட்டத்தில் இருந்த இழிநிலைமையைக் கொஞ்சம் நிதானமாகவே விமர்சிக்கலாம். நேற்றைய ”பின்னடைவை’ விமர்சிப்பதன் மூலம் இன்றைய இழிவின் பொறுப்பில் இருந்து தப்பித்துக்கொள்ளும் சாதுரியம் மிகவும் கேவலமானது.

பத்து பதினைந்து வருடங்கள் ஒரு பாடக் கல்வியைப் பெற்றுவிட்டு வேறொரு துறையில் பணிபுரியும் அபத்தமோ, படித்த பாடத்தில் பத்து சதவிகிதம் மட்டுமே பயன்படக்கூடிய வேலையைச் செய்து வரும் அசட்டுத்தனம் பற்றியோ யாரும் சொல்லமாட்டார்கள் (ஒரு லிட்டர் பால் பாத்திரத்தில் 10 லிட்டர் பாலை ஊற்றும் மடத்தனம் இது).

ஒருவர் எவ்வளவுக்கு எவ்வளவு அறிவை வெளிப்படுத்துகிறாரோ அவ்வளவுக்கு அவ்வளவு அவர் அறிவற்றவர் என்பது புலனாகும் வகையில் பேசுவதே பலருக்கு வாய்த்திருக்கிறது. அதிலும் இந்து மதத்தை விமர்சிக்கும் வாக்கியங்கள் என்றால் மூளையைக் கழற்றிவிட்டுப் பேசுவதே இடதுசாரி அடையாளமாக இருக்கிறது.  

Thursday 13 July 2017

சைவ மாமிசம்



(மாமிசம் போன்ற மாமிசம்)


மனிதர் சைவரா... அசைவரா?

மனிதரின் மூதாதை இனமான குரங்குகள் சைவ உணவை உண்பவையே. அவற்றிலிருந்து கிளைத்த ஆதி மனிதரும் சைவ உணவைத்தான் பல ஆயிரம் ஆண்டுகள் உண்டும் வந்திருப்பான். எப்போது காட்டுத் தீயில் வெந்த விலங்குகளின் உணவை மனித இனம் ருசித்துப் பார்த்ததோ அதன் பிறகுதான் தீயைக் கண்டுபிடிக்கவும் (உருவாக்கவும்) அதில் இறைச்சியை வாட்டவும் கற்றுகொண்டு அதன் பிறகே அசைவ உணவுக்கு மனித இனம் பழகியிருக்கும். மனிதருடைய உடம்புக்கு பச்சை மாமிசத்தை ஜீரணம் செய்யும் வலிமையோ கூர்மையான நகங்களோ கோரைப் பற்களோ கிடையாது என்பதால் மனித இனம் இயற்கையால் சைவ பட்சிணியாகவே படைக்கப்பட்டிருக்கிறது என்பது தெளிவு. ஆனால், தீயில் வாட்டி உண்ணக் கற்றுக்கொண்டதும் மனித இனம் வேட்டையாடத் தொடங்கிவிட்டது. ஒருவேளை குரங்கில் இருந்து வந்த மனிதர் அப்படியே நேராக விவசாயம் செய்யக் கற்றுக்கொண்டிருந்தால் மனித இனம் சைவ பட்சிணியாகவே பரிணாமம் அடைந்திருக்கும். தீயால் மனித இனம் தீய திசை திரும்பிவிட்டது.

ஒருவர் எதைச் சாப்பிடவேண்டும் என்பதை அவரும் அவருடைய உடம்பும்தான் தீர்மானிக்கவேண்டும் என்பது உண்மைதான். ஆனால், இந்த உலகில் எந்த உயிர்கள் வாழவேண்டும் எவையெல்லாம் கொல்லப்படலாம் என்பதைச் சொல்லும் ஹிட்லரிய சுதந்தரத்தை யாருக்கும் தரமுடியாது. ஓர் உயிர் வாழ இன்னோர் உயிரைக் கொல்வது தவறு என்ற அடிப்படை நாகரிக மனோபாவம் வேட்டை சமூகத்திலேயே தோன்றியிருக்கும் என்றே தோன்றுகிறது. பழங்கள், காய்கள், கிழங்குகள் போன்றவற்றைத் தொடர்ந்து உண்டுவந்ததன் மூலம் வெறுமனே புலியைப் போலவோ சிங்கத்தைப் போலவோ முழு அசைவராக மனித இனம் பரிணமித்திருக்கவில்லையே. இதனால் வேட்டை மனிதர்க்கு(ம்) உயிர்க் கொலைமேல் ஒருவித ஒவ்வாமை இருந்திருக்கிறது என்று யூகிக்கலாம்.

புத்தர், மகாவீரர், திருவள்ளுவர், இயேசு போன்ற வழிகாட்டிகள் அனைவருமே உயிர்க்கொலையைக் கடுமையாகக் கண்டிப்பவர்களே. இவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் நபர்களும் இவர்கள் ”காட்டிய’ வழியைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுபவர்களும் அசைவ உணவு விஷயத்தில் தமது வழிகாட்டிகளையும் அவர்களுடைய போதனைகளையும் குப்பைக்கூடையில் எறியத் தயங்குவதில்லை. சமணம் நீங்கலாகப் பிற எந்த மதமும் இந்த விஷயத்தில் பெரிதாக எந்த நல்லுணர்வையும் தொடர்ந்து வலியுறுத்தவில்லை. மத்திய கால ஐரோப்பாவில் லென்ட் போன்ற விழாக்களின்போது அசைவ உணவைத் தவிர்ப்பது பழக்கமாக இருந்திருக்கிறது. ஆனால், இன்றோ கிறிஸ்தவ விழா என்றால் நல் மேய்ப்பன் கையில் இருக்கும் இளம் வெள்ளாட்டுக் குட்டியை (அவர் இதைச் சாப்பிடு என்றுதான் கையில் எடுத்துக் காட்டுகிறார் என்றுகூடச் சொல்வார்கள்... Thou shall not KILL என்பதைக்கூட Thou shall not MURDER என்று விளக்குபவர்கள்தானே) வெட்டிக்கொன்று தின்றுதான் கொண்டாடவேண்டும் என்ற அளவுக்கு ஆகிவிட்டிருக்கிறது. இஸ்லாத்தைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்... பிரியாணியைத் தின்பதற்காகத்தான் அமைதி மார்க்கத்தில் இணைந்திருக்கிறார்களோ என்று அஞ்சும் அளவுக்கு அது மட்டன் பிரியாணியில் ஆரம்பித்து மட்டன் பிரியாணியில் முடியும் மதமாகவே இருக்கிறது. உயிர்கள் மீதான அவர்களுடைய பெருங் கருணை என்பது விழா நாளில் வெட்டிக் கொல்வதற்காக வளர்க்கப்படும் ஆடுகளின் கொழுத்த சதை மீது காட்டும் பேரன்பே. இந்து மதத்தைப் பொறுத்தவரையில் நாட்டார் வழிபாட்டு முறையில் அசைவப் படையல் உண்டு என்றாலும் செவ்வாய், வெள்ளி, சனி போன்ற நாட்களில் அவற்றை அறவே தவிர்ப்பது, வீடுகளில் செய்யப்படும் பூஜைகளில் சைவப் படையல் மட்டுமே தருவது என ஓரளவுக்கு மிதமாக இருக்கிறது. ஆனால், இந்துக்களில் பெரும்பான்மையினர் அசைவர்கள் என்பதால் அவர்களையும் அப்படியொன்றும் விலங்குகளின் மீது அன்பு கொண்டவர்கள் என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. உயிர்க்கொலைக்குப் பூரண மத அங்கீகாரம் இல்லை என்று மட்டுமே சொல்லமுடியும்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் குறிப்பாக தமிழகத்தில் சைவ உணவுக்கு ஒருவர் ஆதரவாகப் பேசுகிறார் என்றால் அவர் நிச்சயம் சாதி வெறி பிடித்த பிராமணராகத்தான் இருக்கவேண்டும் என்று சொல்லும் அளவுக்கு அரசியல் மூடத்தனமும் வெறுப்பும் ஊறிக்கிடக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் சைவ உணவு ஆதரவாளர்களாக பிராமணர்களைப் பழிப்பவர்களில் பலர் புத்தரைத் தமது ஆதர்ச சீர்திருத்தவாதியாக வேறு சொல்லிக்கொள்வார்கள். சேகுவேரா படம் பொறித்த டீ சர்ட் அணிவதன் மூலமே புரட்சியாளராகிவிடும் போராளிகள் நிறைந்த உலகில் பல்லிடுக்கில் சிக்கிய சிக்கன் துண்டை எடுத்தபடியே அல்லது நல்லி எலும்பைக் கடித்தபடியே புத்தரைப் புகழ்வதும் சகஜம்தானே.

ஆனால், இந்த உலகில் தனது தொண்டர்களிடம் உண்மையான தாக்கத்தை செலுத்திய சீர்திருத்தவாதி என்று புத்தரையும் மகாவீரரையும் மட்டுமே சொல்ல முடியும். சீனாவுக்கு புத்த மதம் சென்றபோது அது ஒரு சிறிய சமரசத்தை முன்னெடுத்தது. இந்தியாவில் இருந்தவரை பவுத்தமும் சமணமும் அசைவத்தைக் கடுமையாக ஒடுக்கவே செய்தன. இன்றும் சமணர்கள் மட்டுமே அசைவ உணவை அறவே தவிர்ப்பவர்களாக இருக்கிறார்கள். ஆனால், பவுத்தம் சீனாவில் ஒரு சொட்டு ரத்தம் சிந்தாமல் பரவியபோது உள்ளூர் மக்களின் வாழ்க்கை மதிப்பீடுகளுக்கு மதிப்பு கொடுக்கத் தீர்மானித்தது. உண்மையில் புத்தர் மூலமாகவே பவுத்தம் உலகம் முழுவதும் பரவியிருந்தால் அவர் அசைவ விலக்கத்தை துணிந்து நிலை நிறுத்தியிருப்பார் பவுத்த துறவிகளுக்கு அவர் அளவுக்கு வசீகரமும் அர்ப்பண உணர்வும் கிடையாததால் அந்தப் பகுதி மக்களுக்காக அசைவத்தை அனுமதிக்க முடிவு செய்தார்கள். அதே நேரம் புத்தர் செலுத்திய தாக்கம் அதிகம் என்பதால் ஒரு மூன்றாம் வழியைக் கண்டுபிடிக்க முயன்றார்கள். அதுதான் சைவ மாமிசம்! மாமிசம் போலவே இருக்கும்; ஆனால், சைவப் பொருட்களால் செய்யப்பட்டிருக்கும்.

சமணர்களும் இந்திய பவுத்தர்களும் இந்த விஷயத்தில் மிகவும் கறாராக உன்னத நிலையிலேயே இருந்துவிட்டிருக்கிறார்கள். இந்தியாவிலும் அசைவ விரும்பிகள் உண்டு. என்றாலும் நீ பவுத்தராக வேண்டுமென்றால் அசைவத்தைத் தவிர்த்துத்தான் ஆகவேண்டும். நீ சமணர் என்றால் அசைவத்தைத் தொடவே கூடாது என்றே சொல்லியிருக்கிறார்கள். அசைவம் போல் இருக்கும் சைவம் என்ற சிந்தனைகூட அவர்களுக்கு அதிர்ச்சியையும் வேதனையையும் தோற்றுவித்திருக்கிறது.. எனவே, பவுத்தமும் சமணமும் உருவாகிய இந்தியாவில் சைவ மாமிசம் என்ற கருத்தாக்கம் உருவாகியிருக்கவே இல்லை. சீனாவில் அது தேவையாக இருந்ததாக பவுத்த துறவிகள் நினைத்தார்கள். எனவே, டோஃபு என்ற மாமிசம் போன்ற மாமிசம் உருவாக்கப்பட்டது. அன்றிலிருந்து அவ்வகையிலான ஏராளமான மாமிச மாற்று உணவுகள் தொடர்ந்து உருவாக்கப்பட்டுவருகின்றன.ஒருவகையில் டோபு தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்ட உணவுதான்; தயிர் பயன்படுத்திய கீழைத்தேயர்களின் வருகையைத் தொடர்ந்து சோயா பாலில் உப்பு சேர்க்கப்பட்டு தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், பவுத்தம் பரவிய நாடுகளில் எல்லாம் பவுத்தத்தின் வருகைக்குப் பின்னரே டோஃபு அறிமுகமாகியிருப்பதிலிருந்து அசைவ மாற்றாக அது முன்னெடுக்கப்பட்டிருக்கும் என்று எண்ண இடமிருக்கிறது. அதிலும் பாம்பு, பல்லி, நாய், பூனை, கழுதை, குரங்கு என சதை உள்ள எல்லாவற்றையும் தின்னும் பழக்கம் கொண்ட சீனாவில் டோஃபு கண்டுபிடிக்கப்பட நிச்சயம் பவுத்தமே காரணமாக இருந்திருக்கும் என்று துணிந்து சொல்லலாம்.

சூரிய ஒளியைப் பயன்படுத்தி தாவரங்கள் கார்ப்போஹைட்ரேட், புரதங்கள், ஃப்ரக்டோஸ் போன்றவற்றை உருவாக்குகின்றன. சில விலங்குகள் தாவரங்களைச் சாப்பிட்டு அவற்றைக் கொழுப்பாக உடம்பில் சேர்த்துவைக்கின்றன. கார்போஹைட்ரேட், ஃப்ரக்டோஸ் போன்றவற்றில் இருந்து க்ளுகோஸ் தயாரித்துக்கொள்ளும் உயிரினங்கள் தாவரங்களையும் கொழுப்பில் இருந்து உடலுக்கான சக்தியைத் தயாரித்துக்கொள்ளும் உயிரினங்கள் விலங்குகளையும் உண்டு வாழ்கின்றன. மனிதர்கள் தாவரங்களையும் விலங்குகளையும் ஒரு சேர உண்ண முடிந்தவர்களாகப் பிழையான பரிணாம வளர்ச்சி பெற்றவர்களாக இருப்பதால் விலங்குகளை அவர்களிடமிருந்து காப்பது மிகவும் அவசியமான செயலாகவே இருக்கிறது. ஆனால், மதம் சார்ந்த காரணங்கள், நாகரிக வளர்ச்சி போன்றவற்றால் விலங்குகளுக்கு அப்படியொன்றும் நன்மை எதையும் உருவாக்கிடமுடியவில்லை. நவீன காலகட்டத்தில் உயிர்க்கொலைத் தொழிலானது பிரமாண்ட அளவில் விஞ்ஞானத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பூதாகரமாக நடந்துவருகிறது. கேவலம் அற்ப மனிதனின் சுவை நரம்புகளைத் திருப்திப்படுத்த நாளொன்றுக்கு கோடிக்கணக்கில் கோழிகளும் குஞ்சுகளும் ஆடுகளும் மாடுகளும் பன்றிகளும் கன்றுகளும் மீன்களும் கொன்று குவிக்கப்படுகின்றன. எந்தத் தொழில்நுட்பம் இதைச் சாதித்துவிட்டிருக்கிறதோ அதே அறிவியல் தொழில்நுட்பமே இன்று அதற்கான பரிகாரத்தையும் முன்னெடுக்கத் தொடங்கியிருக்கிறது.



மார்க் போஸ்ட் போன்ற நவீன விஞ்ஞானிகள்/பேராசிரியர்கள் கல்ச்சர்ட் மீட், க்ளீன் மீட் என செயற்கை மாமிசத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். விலங்குகளிடமிருந்து முதிர் நிலை ஸ்டெம் செல்கள் வலிக்காமல் எடுக்கப்பட்டு விலங்குகளின் உடம்புக்கு வெளியே மாமிசம் தயாரிக்கும் புதிய தொழில்நுட்பம். யூத மதத்திலும் அசைவ உணவு மீதான விலகல் உண்டு என்பதால் அந்நாட்டு நிறுவனங்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. இன்று இது செவ்வாய் கிரகத்துக்குச் செல்லும் பயணம் போல் அதிகச் செலவு பிடிக்கும் விஷயமாகவே இருக்கிறது. ஆனால், இந்த ஆராய்ச்சிகள் வெற்றி பெற்று வர்த்தகப் பயன்பாட்டுக்குத் தயாராகிவிட்டால் சைவ மாமிசத்தின் விலை கணிசமாகக் குறைந்துவிடும். இந்திய பவுத்த சமண இந்து மதங்கள் இதில் கூடுதல் அக்கறை செலுத்தவேண்டும். மாமிசம் போன்ற மாமிசம் என்ற எண்ணம் கொஞ்சம் கீழானதுதான். என்றாலும் உயிர்க்கொலையைத் தடுக்க அது பெரிதும் உதவும் என்றநிலையில் சமண வணிக ஜாம்பவான்கள் இந்த ஆராய்சியில் நிச்சயம் இறங்கவேண்டும். அதிலும் மேற்குலகில் இந்த ஆராய்ச்சியில் ஈடுபடும் நிறுவனங்கள் அந்தத் தயாரிப்பு முறைக்கும் தொழில்நுட்பத்துக்கும் காப்புரிமை பெறுவதில் குறியாக இருக்கிறார்கள். அந்த ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிகளுக்கு அப்படியான வணிக எண்ணம் கிடையாது என்றாலும் அவர்களால் அவர்களுடைய எஜமானர்களை மீறி எதுவும் செய்துவிட முடியாது. எனவே இந்திய சமண வணிக சக்கரவர்த்திகள் இந்த விஷயத்தில் எளிய உயிர்களின் மீதான கருணையுடன் ஈடுபட்டாகவேண்டும்.

சைவ மாமிசம் மூலம் கிடைக்கவிருக்கும் பயன்கள் ஏராளம்:

முதலாவதாக விலங்குகள் எதுவுமே கொல்லப்படத் தேவையில்லை.

இரண்டாவதாக இன்று விலங்குகளை வளர்க்கப் பயன்படுத்தும் நிலம், நீராதாரம், எரிசக்திகளில் பத்து சதவிகிதம் இருந்தாலே போதுமானது.

அடுத்ததாக இந்தச் செயற்கை மாமிசமானது சோதனைச்சாலையில் தயாரிக்கப்படும் என்பதால் சுத்தத்தை முழுவதுமாக பராமரிக்க முடியும். பாக்டீரியா போன்ற பிரச்னைகளில் இருந்து பாதுகாப்பு பெற முடியும்.

தேவையான சத்துகளை அதில் எளிதில் சேர்க்கவும் முடியும். உதாரணமாக மீன் மாமிசத்தில் இருக்கும் ஒமேகா ஃபேட்டி அமிலத்தை இதில் எளிதாக அனைத்து மாமிசங்களிலும் சேர்த்து உற்பத்தி செய்யமுடியும்.

இது லாபம் கொழிக்கும் தொழிலும் கூட.

இவையெல்லாம் இன்னும் பத்து இருபது ஆண்டுகளில் நடந்துவிடும் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். எம் உலகில் விலங்குகள் தாமாகவே உயிர் துறக்கும் என்று நெஞ்சு நிமிர்த்திச் சொல்லும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கவிருக்கிறது.

உலகம் சைவத்துக்குத் திரும்பத் தயாராகிக் கொண்டிருக்கிறது.

நீங்கள் தயாரா..?

கடைசியாக..

ஜல்லிக்கட்டு விளையாட்டைத் தடை செய்து தமிழர்களின் கலாசாரத்தை அழிக்க முற்படுவதாகக் குற்றம்சாட்டப்பட்ட பீட்டாவைப் பார்த்து பலரும் அரட்டை அரங்க உற்சாகத்துடன் கேட்ட கேள்வி... ஆடு மாடுகள் தினம் தினம் கொல்லப்படுகிறதே... அதற்கு என்ன வழி..? அதைத் தடுக்க நீ ஏதேனும் செய்திருக்கிறாயா..?

இந்தக் கேள்விக்கு பீட்டாவிடம் பதில் இருக்கத்தான் செய்தது. அதைக் கேட்க அன்று யாரும் தயாராக இருந்திருக்கவில்லை. அனைத்துவகை மாமிசங்களுக்கும் மாற்று உணவை (அதே நிறம், சுவை, மணம் கொண்டது) பரிந்துரைத்து வருகிறது. பழங்கால இந்து சமயத்தில் தெய்வங்களுக்கு விலங்குகள் பலி கொடுக்கப்பட்டுவந்த மரபு பூசணிக்காயில் அல்லது எலுமிச்சம் பழத்தில் குங்குமம் கலந்து வெட்டி பலிகொடுக்கும் கலாசாரமாக பவுத்த/சமணத் தாக்கத்தினால் மாற்றம் பெற்றதுபோல் ஒரு எளிய வழிமுறையாக அசைவ மாற்று உணவுகளை அதே ருசியுடன் தயாரித்துத் தருகிறது. பீட்டா சைவ மாமிசம் தயாரிக்கும் விஞ்ஞானிக்கு (விஞ்ஞானியர் குழுவுக்கு) கோடிக்கணக்கில் ரூபாய் பரிசு என்று அறிவித்திருக்கிறது. சைவ மாமிசம் தயாரிக்கும் ஆராய்ச்சிக்கு ஏராளமான நிதியை அது தந்தும் வருகிறது. இதற்காகவே சைவ மாமிசத்தை எதிர்க்கவேண்டும் என்று சொல்லக்கூடியவர்கள் இருக்கக்கூடும். அவர்கள் சக மனிதரின் சதையும் சுவையானது என்று கொன்று தின்று கொழுத்து வந்த கானிபல் கூட்டத்தின் வாரிசாகவே இருப்பார்கள்.

இயற்கையே...

பல்கிப் பெருகப் போகும் விலங்குகளை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்.



விலங்கினும் கீழானவற்றை நீ கவனித்துக்கொள்(ல்).

Tuesday 4 July 2017

அமைதி மார்க்கம்

அமைதி மார்க்கம்

அமைதி மார்க்கத்தின் அளவற்ற அருளாளன்

அமைதி மார்க்கத்தின் தூதுவருக்கு (மட்டுமே)

அமைதி மார்க்கத்தின் வழிகளைப் போதித்தார்

போதனை பெரிதாக ஒன்றுமில்லை - அமைதி... பேரமைதி... மயான அமைதி.

அதுவே அவர் சொன்ன ஒற்றைத் தத்துவம்.



அமைதி மார்க்கிகள்

அரேபியாவின் பாலை மண்ணில் அமைதியைக் கொண்டுவர முயன்றார்கள்

முதலில் அமைதி மார்க்கத்தை அவர்கள் அமைதியாக போதித்தபோது யாரும் செவிமடுக்கவில்லை.

எனவே, அளவற்ற அருளாளனின் ஆணைக்கு ஏற்ப அமைதியைக் கொண்டுவர

மக்களை முதலில் அடிமையாக ஆக்கினார்கள்

சாட்டையால் அடித்தார்கள்

அப்போதும் சத்தம் வரவே வாள் கொண்டு வெட்டினார்கள்.

அமைதி வந்தது.



பாலைவனக் குளிர் காற்று வாளால் வெட்டப்பட்டவர்களின் உடலை ஊடுருவியபோது எழுந்த கூக்குரலை

தமது தொழுகைக்கால மந்திரமாக எடுத்துக்கொண்டு உலகை வலம் வரத் தொடங்கினார்கள்.

குதிரைகளில் ஏறி உலகம் முழுவதும் புழுதி பரப்பியபடி வாள் கொண்டு அமைதியைப் பரப்பினார்கள்



நீண்ட வாள் கொண்டு மட்டுமே அமைதியை நிலைநாட்டவேண்டும் என்றும்

குறூவாள் கொண்டு அமைதியை நிலைநாட்டவேண்டும் என்றும் சொன்னவர்களுக்கு இடையே கூட

வெட்டும் குத்தும் தொடர்ந்தன

மிகப் பெரிய இறைவன் சொன்ன அமைதியைக் கொண்டுவரத்தான் எல்லாமும்



வாள் அதன் பங்குக்கான ரத்தத்தை அமைதியாகப் பெருக்கெடுக்கச் செய்த பிறகு மெள்ள உறைக்குத் திரும்பியது.

நவீன காலத்தில்

நவீன ஆயுதங்கள் கொண்டு அமைதியைப் பரப்பலாம் என்பது விரைவிலேயே கண்டுகொள்ளப்பட்டது

(சொல்லப்பட்ட முக்கிய காரணம் வாளால் மிக மெதுவாகத்தான் அமைதியைக் கொண்டுவர முடியும்)

எனினும் வாளை அவர்கள் முழுவதுமாகக் கைவிட்டுவிடவில்லை.



அமைதியைக் கொண்டுவர வகுத்திருக்கும் வழிமுறையில்

அவர் எவ்வளவு பெருங்கருணையாளன் என்பது புலப்படுவதாகவே இருக்கிறது.

பயன்படுத்தும் வாள் மிகக் கூராக இருக்கவேண்டும் (இல்லையெனில் அறுக்கப்படும் உயிருக்கு வலிக்கும் அல்லவா)

வேகமாக

தொண்டைப் பக்கம் அறுக்கவேண்டும்

முழு ரத்தமும் வடியும் வரை பொறுமை காக்கவேண்டும்

தானாக இறந்தவற்றை உண்ணுவது ஹராம்!

கழுத்தை நெரித்தோ, மயக்கமடையச் செய்தோ அடித்தோ அமைதியடையச் செய்யக்கூடாது

இவையெல்லாவற்றையும்விட

அமைதிப்படுத்தும்போது பிஸ்மில்லா என்று ஓதியபடியேதான் அறுக்கவேண்டும் என்ற வழிகாட்டுதல்

அமைதியின் ஏக இறைவனாக எந்தப் போட்டியுமின்றி அவரை முன்னிறுத்தவும் செய்கிறது.



ஆடுகளை அமைதிப்படுத்த ஹலால் செய்து அறுக்கவேண்டும் என்று

அளவற்ற அருளாளன் சொல்லியிருப்பதாலும்

மனிதர்களில் அமைதி மார்க்கத்தைப் பின்பற்றாதவர்கள் விலங்குகளுக்கு சமமே என்பதாலும்

கூட்டம் கூட்டமாகச் செவ்வுடை அணிவித்து ஹலால் ஓதி அறுத்தும் வருகிறார்கள்.

வரிசையாகப் படுக்க வைத்து காது மடலில் சுட்டு அமைதியைக் கொண்டுவருகிறார்கள்.

அதிகம் சத்தம் போடும் பச்சிளம் குழந்தைகளை

கூண்டோடு நீரில் அமிழ்த்தியும்

தீயில் இட்டும் அமைதியைக் கொண்டுவருகிறார்கள்

அமைதி மார்க்கத்தின் வருடாந்தர விழா நாட்களில்

கூடுதல் அமைதியைக் கொண்டுவர உலகம் முழுவதும் வெடிகுண்டுகளை வெடிக்கிறார்கள்.

பிற மதத்தவர்களின் திருவிழாக் கூச்சல்களை மட்டுப்படுத்தி அங்கு அமைதியைக் கொண்டுவர

கூட்டத்துக்குள் டிரக்குகளை ஓட்டுகிறார்கள்.



அமைதி மார்க்கத்தின் பர்தா போன்ற கரு மேகங்கள்

உலகம் முழுவதிலும் தன் கரிய நிழலைப் பரப்பிவருகின்றன

அமைதி மார்க்கிகளால் அமைதியடைபவர்களின் ரத்தம் மெள்ள உலக வரைபடம் முழுவதும் பரவுகிறது

அமைதி மார்க்கத்தின் நிலங்களில் ஒட்டகங்களும் சாகின்றன

மன்னிக்கவும்

கொல்லப்படுகின்றன.

பசும் புல்வெளிகளில் மேயும் ஆவினங்கள் (குறிப்பாகப் பசு) எழுப்பும் சத்தம்

அமைதி மார்க்கத்தின் புத்திரர்களை பெரிதும் சஞ்சலமடையச் செய்கிறது.

சமாதானப் புறாக்களின் க்க்..க்க்.. சத்தம்

அமைதி மார்க்கத்தின் புத்திரர்களை ஆத்திரமடையச் செய்கிறது

மயில்களின் காலடிச் சத்தமும் அகல் விளக்குகளின் சுடரின் அசைவு எழுப்பும் சத்தம் கூட

அமைதி மார்க்கத்தின் புத்திரர்களை ஆவேசப்படுத்துகிறது

அவர்களின் ஆண்டவர் அமைதியை பேரமைதியை மயான அமைதியை

உலகம் முழுவதும் உருவாக்கும் புனிதக் கடமையைத் தந்திருக்கிறார்



அமைதி மார்க்கத்தின் புத்திரர்கள் உலகம் முழுவதும் பரவியிருக்கிறார்கள்

சிலர் ஐந்து நேரம் தொழுகிறார்கள் (நெற்றியில் தழும்பு விழும் அளவுக்கு)

சிலர் ஊடகங்களில் வேலை செய்கிறார்கள்.

சிலர் ’கவிதைகள்’ படைக்கிறார்கள்

சிலர் திரைப்படம் எடுக்கிறார்கள்

சிலர் செண்ட், செல்போன், சிடிக்கள் விற்கிறார்கள்

சாம்பல் பூத்த நெருப்பு போல் சாதுவாக இருந்துவருகிறார்கள்

பெருங்கருணையாளனின் அழைப்பு வரும்போது உடல் மழித்து அல்லது மழிக்காமல்

அமைதியை நிலைநாட்டப் புறப்படுவார்கள்

அளவற்ற அருளாளன் 

அமைதி... பேரமைதி... மயான அமைதி என்றே 

அவர்களுக்கு போதித்திருக்கிறார்

Friday 28 April 2017

ராமர் : புனைவா உண்மையா?

ராமர்... புனைவா உண்மையா?
டி.கே.ஹரி -டி.கே.ஹேமா ஹரி
கிழக்கு பதிப்பக வெளியீடு
விலை : 175/-

ராம ஜென்ம பூமி, ராமர் பாலம் என்ற இரண்டும் ராமர் இந்த பூமியில் பிறந்து வாழ்ந்த ஒரு மனிதர் என்பதை ஆதாரமாகக் கொண்டே சொல்லப்படுகின்றன. ராமாயணத்திலேயே கூட ராமர் மனிதராகப் பிறந்து மனிதராக வாழ்ந்ததாகத்தான் சொல்லப்படுகிறது.

ராமர் வாழ்ந்தது உண்மையென்றால் அல்லது அதை உண்மையென்று நிரூபிக்கவேண்டுமென்றால் என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அதை இந்தப் புத்தகம் செய்கிறது. இன்றைய நவீன மனம் எந்த அடிப்படையில் சொன்னால் அதை நம்புமோ அப்படியாகச் சொல்கிறது. அதாவது விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்து சொல்கிறது.

ஆர்க்கியோ அஸ்ட்ரானமி என்ற நவீன ஆய்வியலின் அடிப்படையில் ராமாயண காலகட்டம் பலரால் கணக்கிடப்பட்டிருக்கிறது. புஷ்கர் பட்னாகர் மூலம் கணக்கிடப்பட்ட ஆய்வை  நூலாசிரியர்கள்  இந்தப் புத்தகத்தில் விரிவாக விளக்கியிருக்கிறார்கள். ஆர்க்கியோ என்றால் தொன்மையான காலத்தைச் சேர்ந்த என்று பொருள். அஸ்ட்ரானமி என்பது வானவியல் (வானில் கோள்களை ஆராய்தல்). அதாவது, தொன்மைக்கால வானம் பற்றி ஆராயும் இயல்.

இந்த அறிவியல் ஆய்வின்படி ஒரு குறிப்பிட்ட கோள்களின் அமைப்பு கொடுக்கப்படுமாயின் அது போன்ற கிரகநிலை எதிர்காலத்தில் எப்போது நிகழும் என்பதையும் கடந்த காலத்தில் அது போன்று எப்போது நிகழ்ந்தது என்பதையும் தெரிந்துகொண்டுவிடமுடியும்.
மற்ற நாட்டு இலக்கியப் படைப்புகள் போலல்லாது இந்திய இலக்கியங்கள் பல்வேறு நிகழ்வுகளின் நாள் நட்சத்திரத் தகவல்களையும் இரவு நேர ஆகாய வர்ணனைகளையும் விரிவாக அருமை-யாகப் பதிவு செய்திருக்கின்றன. ராமாயணத்தில் பல இடங்களில் இதுபோன்ற வான, கிரஹ நிலை தொடர்பான தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன. இவ்விவரங்களைக் கவனமாகத் தொகுத்து மென்பொருளில் செலுத்தியபோது கடந்த காலத்தில் இக்குறிப்பிட்ட கிரக நிலைகள் இருந்த உத்தேச வருடங்கள் அறியக் கிடைத்தன.

ராமர் பிறந்த நாளின் நட்சத்திர நிலை பற்றி ராமாயணத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
1.சூரியன்-மேஷம்
2.சனி-துலாம்
3.குரு-கடகம்
4.சுக்கிரன்-மீனம்
5.செவ்வாய்-மகரம்
6.சந்திர மாதம்-சித்திரை
7.அமாவாசைக்குபின் 9-ம் நாள் அதாவது நவமி திதி சுக்லபக்ஷம்
8.சந்திரன் புனர்வசு நட்சத்திரத்தின் அருகில் துருவ நட்சத்திரம் மிதுன ராசியில்
9.கடகம்-லக்னம். அதாவது கடகராசி கிழக்கில் உதயத்தில்
10.குரு-தொடுவானத்துக்கு சற்று மேலே

இக்குறிப்புகளை வானியல் மென்பொருளில் கொடுத்து ஆராய்ந்த-போது நமக்கு ராமர் பிறந்த தேதியாகக் கிடைப்பது பொது ஆண்டுக்கு முன் 5114 (பொ.ஆ.மு - ஆஇஉ), ஜனவரி மாதம், 10 வது நாள், மதியம் 12-30.
இதே போல் ராமாயணத்தில் நடந்த பல்வேறு சம்பவங்களுக்கான நட்சத்திர நிலையையை மென்பொருளில் உள்ளிட்டுப் பார்த்தபோது கீழ்கண்ட தேதிகள் கிடைத்திருக்கின்றன.
10 ஜனவரி 5114 பொ.ஆ.மு - ராம நவமி (பிறந்தநாள்)
11 ஜனவரி 5114 பொ.ஆ.மு - பரதன் பிறந்த நாள்
4 ஜனவரி 5089 பொ.ஆ.மு - முடிசூட்டு விழாவுக்கு முதல் நாள்
7 அக்டோபர் 5089 பொ.ஆ.மு - கரதூஷ்ணர் அத்யாயம்
3 ஏப்ரல் 5076 பொ.ஆ.மு - வாலிவதம்
12 செப்டம்பர் 5076 பொ.ஆ.மு - அனுமன் இலங்கையை அடைதல்
14 செப்டம்பர் 5076 பொ.ஆ.மு - அனுமன் இலங்கையிலிருந்து திரும்புதல்
20 செப்டம்பர் 5076 பொ.ஆ.மு - படை புறப்படுதல்
12 அக்டோபர் 5076 பொ.ஆ.மு - படைகள் ராவணனின் கோட்டையை அடைதல்
24 நவம்பர் 5076 பொ.ஆ.மு - மேகநாதன் கொல்லப்படுதல்

மென்பொருள் மூலம் பெறப்பட்ட தேதிகளும் ராமாயணக் கதையில் கூறப்பட்டுள்ள சம்பங்களின் வரிசையும் முழுவதுமாக மிகச் சரியாக ஒத்திருக்கின்றன. அதுமட்டுமல்லாது இரு சம்பவங்களுக்கு இடைப்பட்ட காலமாக நமக்குக் கிடைத்திருப்பவை வால்மீகியால் ராமாயணத்தில் இரு நிகழ்வுகளுக்கு இடையிலான காலத்தோடு அல்லது சம்பந்தப்பட்ட கதாபாத்திரத்தின் வயதோடு ஒத்திருக்கிறது. உண்மையில் நடந்த சம்பவங்களுக்கு மட்டுமே இப்படியான துல்லியமான ஒத்திசைவு சாத்தியமாகும்.
*

அடுத்ததாக, ராமர் பாலம் என்ற பௌதிகச் சான்று. ராமாயணத்தில் அந்தப் பாலம் எப்படிக் கட்டப்பட்டது என்று விரிவான விவரணை இருக்கிறது. ராமேஸ்வரத்தில் கடலின் அடியில் இருக்கும் நீண்ட பாலம் போன்ற அமைப்பு இன்று ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. ராமாயணத்தில் என்னென்ன அடுக்குகள் என்னென்ன வரிசையில் சொல்லப்பட்டிருக்கிறதோ அதே வரிசையிலேயே இன்றும் அந்தக் கடலடிப் பாலம் அமைந்திருக்கிறது. அதாவது,
· கடலின் அடித்தளம்
· அதற்கு மேல் இயற்கையான பாறைகளால் மேடாக அமைந்த பகுதி
· அந்தப் பாறைகளால் மேடாக அமைந்த பகுதியின் மேல் வெட்டப்பட்ட மரத்தின் பகுதிகள்
· மரத்தடிகளின் மேல் அமைந்த பெரிய பாறைகள்
· அந்தப் பெரிய பாறைகளின் மேல் காணப்படும் சிறிய கற்கள்
· இந்தச் சிறிய கற்களுக்கு மேல் காணப்படும் மணல் படுகை
என அந்த பாலம் அமைந்துள்ளது. ராமாயணத்தில் குறிப்பிடப்படும் பாலம்தான் அது என்பதை உறுதிப்படுத்தும் முதல் சான்று இது.

நேஷனல் இன்ஸ்டியுட் ஆஃப் ஒசியானிக் டெக்னாலஜியின் ஆலோசகரும் முன்னால் புவியியல் துறை அதிகாரியும் சிறந்த புவியியல் ஆராய்சியாளருமான டாக்டர் எஸ். பத்ரிநாராயணன் இப்பாலத்தைப் பற்றிய விரிவான ஆய்வை நடத்தியுள்ளார். அதில் அவர் கூறுவது:

பூமியின் இயல்பு மற்றும் பௌதிகத் தன்மையை ஆராய்ந்தபோது ராமர் சேதுவில் பவளப் பாறைகளுக்குக் கீழ் இளகிய கடல் மணல் காணப்படுகிறது. பெரிய பாறைகளாகக் காணப்படும் இந்த  பவளப்பாறை அடுக்கு இயற்கையாக அமைந்தது அல்ல. அவை நிச்சயம் எவராலோ கொண்டுவந்து அங்கே போடப்பட்டிருக்க-வேண்டும். இதிலிருந்து ராமசேது வெகு பண்டைய காலத்தில் நிச்சயம் மனித முயற்சியால் கட்டப்பட்டது என்பது தெளிவாகிறது.

அதாவது, பவளப்பாறைகள் பொதுவாக கடினமான பாறைப்பகுதியின் மேலேதான் காணப்படும். கடலின் மேற்பரப்புக்கு அருகே சூரிய ஒளியைப் பெறும் வகையில் வளரும் இயல்புடையன. ராமர் சேதுவில் பவளப்பாறைகளுக்குக் கீழ் இளகிய மணற்பரப்பு காணப்படுகிறது. எனவே, இங்கு காணப்படும் பவளப்பாறைகள் இயற்கையாக வளர்ந்தவை அல்ல. எங்கிருந்தோ யார் மூலமாகவோ அங்கே கொண்டு சேர்க்கப்பட்டிருக்கவேண்டும் என்பது உறுதிப்படுகிறது.

மூன்றாவதாக, ராமாயண காவியத்தில் அந்தப் பாலமானது 100 யோஜனை நீளமும் 10 யோஜனை அகலமும் கொண்டதாகக் கட்டப்-பட்டதாகக் கூறப்பட்டிருக்கிறது. அதாவது 10:1 என்ற விகிதத்தில் கட்டுப்-பட்டதாகத் தெரிவிக்கிறது. இன்று இந்தியாவில் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னார் வரையிலுள்ள பாதையின் நீளம் 35 கி.மீ அகலம் 3.5 கி.மீ. அதாவது ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அதே 10:1 என்ற விகிதம்!
இந்த விகித ஒற்றுமை வியக்கத்தக்கதாகும். எனவே, இது ராமாயணத்தில் கூறப்பட்டுள்ள அதே பாலம் என்பதற்கான இன்னொரு வலுவான ஆதாரமாகிறது.

ராமேஸ்வர கோவிலின் ஆவணங்களில் பொ.ஆ. 1480 வரை இந்தப் பாலம் நடந்து செல்ல முடிந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கோவில் ஆவணங்களை நம்ப நவீன விஞ்ஞான மனம் இடம் கொடுக்கதென்பதால் நூலாசிரியர் இன்னொரு சான்றையும் தருகிறார்: ஆங்கிலேயர் ஆட்சியின்போது அவர்கள் ஒவ்வொரு முக்கியமான பகுதிக்கும் ஓர் அரசாங்கக் குறிப்புப் புத்தகத்தைத் தயாரித்து வைத்திருந்தனர். அவ்வாறு மெட்ராஸ் பிரஸிடென்ஸிக்கும் சி.டி.மேக்லீன் என்பவர் 1902-ல் குறிப்புப் புத்தகம் தயாரித்தார். அதில் அவர் பொ.ஆ. 1480 வரையிலும்  இப்பாலமானது பயன்பாட்டில் இருந்ததாகவும், பிறகு வந்த பெரிய புயல் காரணமாக இதில் உடைப்பு ஏற்பட்டு இதில் நடப்பது தடை செய்யப்பட்டது எனவும் தெளிவாகக் கூறியுள்ளார்.

ஆதாம் பூமியில் ‘காலடி எடுத்து வைத்த’ இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு இந்தப் பாலம் வழியாக நடந்து வந்ததால் இந்தப் பாலத்துக்கு ஆதாம் பாலம் என்ற பெயரே சூட்டவும்பட்டிருக்கிறது. ஆக எப்படியோ அது நடக்க முடிந்த பாலமாக இருந்திருப்பதாக வேற்று மதத்தினரும் நம்பத்தான் செய்திருக்கிறார்கள். அதேநேரம்
அல்பரூனி -  பொ.ஆ. 1030
மார்க்கோ போலோ - பொ.ஆ. 1271
லுடோவிகோ தெ வர்தமா - பொ.ஆ. 1470
ஆசியாட்டிக் சொசைட்டி - பொ.ஆ. 1799
வில்லியம் ஃபோர்டைஸ் மேவர் - பொ.ஆ. 1807
சார்லஸ் ஓ’ கானர் - பொ.ஆ. 1819
ஏ.ஜே.வால்பே - பொ.ஆ. 1825
அர்னால்ட் ஹெர்மான் - பொ.ஆ. 1833
தாமஸ் ஹார்ஸ்ஃபீல்ட் - பொ.ஆ. 1851
ஜியார்ஜ் ஸ்கார்ஃப் - பொ.ஆ.1856
க்ளெமண்ட்ஸ் ராபர்ட் மர்காம் - பொ.ஆ. 1862
பெண்ட்லாண்டு பிரபு - பொ.ஆ. 1914
முதலமைச்சர் கருணாநிதி -பொ.ஆ. 1972 (ராமநாதபுர கெஜட்டியர்)
ஆகியோர் இந்தப் பாலம் ராமாயண காலத்தில் கட்டப்பட்டது என்ற இந்துக்களைன் நம்பிக்கையையே அங்கீகரித்து வந்திருக்கின்றனர்.
*

ராமர் 11,000 ஆண்டுகள் ஆட்சி புரிந்ததாகச் சொல்லப்படுகிறது. ராமர் வாழ்ந்தது நிஜமென்றால் இது எப்படி சத்தியம்? இந்தக் கேள்விக்கும் நூலாசிரியர் ஏற்கத் தகுந்த ஒரு பதிலைச் சொல்கிறார். 30 நாட்கள் கொண்ட 12 மாதங்கள் ஒரு வருடம் என்ற அடிப்படை-விதியை எடுத்துக்கொண்டு பார்த்தால் 11000 ஆண்டுகள் முப்பது வருடங்கள், ஆறு மாதங்கள்.

ராமர் காட்டுக்குப் போனது 25 வயதில். 14 ஆண்டுகள் கழித்துத் திரும்பி வந்து முடி சூட்டிக்கொண்டது 39 வயதில். முடி சூட்டிக் கொண்ட பிறகு 30 ஆண்டுகள் ஆறு மாதங்கள் ஆட்சி புரிந்தார் என்றால் 70 வயது வரை ஆண்டிருக்கிறார்.
பழங்காலத் தமிழ் இலக்கியங்களில் ஆய்வு செய்பவர்கள் சங்க காலத்திலும் இதுபோல் நாட்கணக்கை வருடமாகச் சொல்லும் காலக் குறிப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள். பதிற்றுப் பத்து-வில் உள்ள செய்யுள் - 90 நாளொன்றை வருடத்துக்கு இணையாகச் சொல்வதாக வேதாந்தத்திலும் தமிழிலும் புலமை பெற்ற ஜெயஸ்ரீ சாரநாதன் குறிப்பிட்டிருக்கிறார். அஹோரவ சம்வத்சரா என்றழைக்கப்படும் கால கணக்கீடு இப்படியான கணிப்புகளைப் பற்றிச் சொல்கிறது.

நச்சினார்க்கினியார் எழுதிய தொல்காப்பிய உரையிலும் இப்படி ஆண்டையும் நாளையும் ஒப்பிட்டுச் சொல்லப்பட்டிருக்கிறது. பொ.ஆ. 9-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அந்த உரையில், பாண்டிய மன்னன் மாகீர்த்தி அல்லது நிலம் தரு திருவில் பாண்டியர் 24,000 ஆண்டுகள் ஆட்சி புரிந்ததாகச் சொல்கிறார். அந்த மன்னருடைய ஆட்சியிலும் ஆதரவிலும்தான் நச்சினார்கினியாரின் உரை வெளியிடப்பட்டது. வருடம் என்று சொல்லப்பட்டிருப்பதை நாள் என்று எடுத்துக்கொண்டு கணக்கிட்டுப் பார்த்தால் அந்தப் பாண்டிய மன்னர் 66 ஆண்டுகள் 8 மாதங்கள் வாழ்ந்திருக்கிறார் என்று அர்த்தம்.

வட இந்திய இலக்கியங்களான ராமாயணம், மஹாபாரதத்தில் ஆரம்பித்து தென்னிந்திய இலக்கியமான சங்ககாலப் படைப்புகள் வரை ஒரு நாள் என்பதை ஓர் ஆண்டு என்று சொல்வது வழக்கத்தில் இருந்திருக்கிறது.
சாதாரண மனிதர்கள் ஒரு ஆண்டில் செய்து முடிப்பதை இந்த மன்னர்கள் ஒரே நாளில் சாதித்துவிடுவார்கள் என்று சொல்லும் முகமாக அந்தப் படைப்பாளிகள் அப்படிச் சொன்னார்களா... அல்லது ஒரு மன்னர் எதிர்கொள்ள நேரிடும் நெருக்கடிகளை மனதில் வைத்து அப்படிச் சொன்னார்களா தெரியவில்லை. ஆனால், வருடங்கள் என்று சொன்னதை நாட்கள் என்று எடுத்துக்கொண்டு பார்த்தால் உண்மை புரியும் என்கிறார்கள் நூலாசிரியர்கள்.
இப்படி ராமர் வாழ்ந்தது உண்மையே என்பதை நவீன மனமும் ஏற்கும் வகையில் மிக அழகாகவும் ஆணித்தரமாகவும் பல்வேறு ஆய்வுத்துறைகளின் ஆய்வு முடிவுகளோடு ஒப்பிட்டு தொகுத்தளித்திருக்கிறார்கள் நூலாசிரியர்கள்.

Friday 7 April 2017

குட் பை மிஸ்டர் மணிரத்னம்...


காற்று வெளியிடை

ராவணன், கடல், ஓகே கண்மணி போன்ற காவியங்களைத் தர ஆரம்பித்த பிறகும் நம்பிக்கையுடன் வந்து குவிந்திருந்த இளைஞர் பட்டாளத்தின் தன்னம்பிக்கையைவிட (பாதிக்கு மேல் அது ரஹ்மான் கூட்டம் என்ற போதிலும்) முன்னாள் இயக்குநர் மணி ரத்னத்தின் தன்னம்பிக்கை நிச்சயம் பாராட்டப்படவேண்டியதுதான். உலக அழகி உலக கிழவியான பிறகும் சற்றும் மனம் தளராமல் ரேம்ப் வாக் செய்வதுபோல் பரத நாட்டியப் பேரொளிகள் 60 வயதிலும் மேடை குலுங்க நடனமாடுவதுபோல் கங்குலி கண் பார்வை போன பிறகும் மட்டையைத் தூக்கிக் கொண்டு களமிறங்கியதுபோல் வாராது வந்த மாமணியும் அடம்பிடிக்கிறார். இன்னும் கொஞ்சம் திறமை மிச்சமிருக்கும்போதே கெளரவமாக விடைபெறுவது பலருக்கும் தெரிந்திருப்பதில்லையே.

இன்றைய காதலர்கள் என்பவர்கள் பேசுவதற்கு எதுவும் இல்லாமலேயே மணிக்கணக்கில் அப்பறம் அப்பறமென்றபடியே பேசிக்கொண்டேயிருப்பார்கள்... காரணமில்லாமல் சண்டை போடுவார்கள்... காரணமில்லாமல் சேர்ந்துகொள்வார்கள்... ஈகோ மோதல் கனன்றுகொண்டிருக்கும்... இதுதான் இன்றைய காதல் என்று யாரோ சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள் மணிரத்னம் மாமாவுக்கு. அவரும் அப்படியான ஓர் இலைஞ்ஜனாகத் தன்னைக் கருதிக்கொண்டு சுவாரசிய திரைக்கதைக்கு சிறிதும் மெனக்கெடாமல் (அல்லது மெனக்கெட்டு) இன்னொரு படமும் எடுத்துமுடித்திருக்கிறார். பைக்கை ரோட்டில் நிறுத்தி டிராஃபிக் ஜாம் செய்து, கல்லூரி மைக்கில் காதலைச் சொல்லி, மிஸ்டர் சந்திரமவுலியை காபி சாப்பிட அழைத்து சினிமாத்தனமான இளமைத் துடிப்புடன் இருந்த மவுனராக மணிரத்னம், கேஸ் ஸ்டவ்வில் சிகரெட் பற்ற வைத்து புது மனைவியைப் புகைக்க வைத்த ரோஜா மணிரத்னம், ஆர் யூ விர்ஜின் என்று மாப்பிள்ளையைக் கேட்ட உயிரே மணிரத்னம் எல்லாரும் தொடுவானத்து நட்சத்திரங்களாக நம்மைவிட்டு தூர தூர விலகிச் சென்று வெகுகாலமாகிவிட்டது. அக்னி நட்சத்திரம் போன்ற ஒளிப்பதிவு அமெச்சூர்தனங்களைத் தாண்டி அந்தக் கால மணிரத்னத்திடம் புத்துணர்ச்சியும் துடிப்பும் இருந்தது. நாயகன், தளபதியெல்லாம் தமிழின் ஆல் டைம் ஃபேவரைட்களெ. ஆனால், தேய்ந்தபின் வளர்வது நிலவுக்கு மட்டுமே சாத்திய போலும்.

முந்திய தீவிரப் படங்களில் ஊறூகாய் போல் இலையின் ஒரு ஓரமாக கடைசிவரை இருக்கும் சீரியஸ் விஷயம் கண்டதுமே தூக்கி எறியப்படும் கறிவேப்பிலையைப்போல் இந்தப் படத்தில் வெறும் கார்கில் 1999 என்ற அரை விநாடி எழுதிக் காட்டும் காட்சியாகப் போய்விட்டிருக்கிறது. ஒளிப்பதிவு, லொகேஷன், இசை என பிற கலைகள் அனைத்தும் பிரமிக்கவைக்கும் வகையில் இருந்தும் மூல ஆதாரமான கதை திரைக்கதை என்பது இவ்வளவு கேவலமாக மணிரத்னத்தின் இதற்கு முந்திய எந்தப் படத்திலும் இருந்திருக்கவில்லை. இவையெல்லாவற்றையும்விட படத்தின் மிகப் பெரிய பலவீனம் மீசை இல்லாத கார்த்தி. காதல் காட்சிகளில் அவருடைய முகம் படு அசிங்கமாக இருக்கிறது. படம் முழுவதுமே வரும் காதல் காட்சிகள் ஏற்படுத்தும் சோர்வை மீறி ஏதேனும் ஒரு காட்சியையாவது சுமாராகவாவது ரசித்துவிடுவோம் என்று கஷ்டப்பட்டு முடிவெடுத்தால் கார்த்தியின் முகம் அந்தச் சிறு சுடரையும் மண் அள்ளிப் போட்டு அணைத்துவிடுகிறது.

நாயகன் திரைப்படத்தில் பெற்றோரை இழந்து பம்பாய்க்கு ஓடிய சிறுவன் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு தாதா ஆகிறான். சத்ரியன் படத்தில் அதே சிறுவன் காவல் துறை அதிகாரியால் வளர்க்கப்பட்டு நல்ல போலீஸாகிறான். இப்படியான சுவாரசிய எதிர் நிலை கதையாக ரோஜாவில் இந்தியச் சிறையில் மாட்டிக்கொண்ட வாசிம் கானுக்கு பதிலாக பாகிஸ்தான் சிறையில் மாட்டிக்கொள்ளும் வருண் என்று கதையை ஆரம்பிக்கிறார். அந்த ஆரம்ப நிமிடங்கள் பழைய மணிரத்னம் திரும்பிவிட்டார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. ஆனால், சிறையில் வாடும் வான் படை அதிகாரியின் கடந்த காலக் காதல் என்று கிளை பிரியும் கதை தன் பிறகு கடந்த காலத்திலேயே மூழ்கித் தொலைந்துவிடுகிறது.

அந்தக் காதல்காட்சிகள்தான் கொடூரமென்றால் அவ்வப்போது வரும் நிகழ்காலச் சிறைக் காட்சிகள் கர்ண கொடூரமாக இருக்கின்றன. பாகிஸ்தான் சிறையில் குச்சியால் தோண்டி சுரங்கம் அமைக்கிறார்கள்... இரவில் தப்பிக்கிறார்கள்... மலைச் சரிவில் உருண்டு ஓடுகிறார்கள். வழியில் வரும் லாரியை மடக்கி ஏறுகிறார்கள். அதில் இருக்கும் டீசலை வைத்து பாட்டில் குண்டுகள் தயாரித்து துரத்திவரும் காவலர்களை விரட்டுகிறார்கள். செக்போஸ்டில் இருக்கும் பாகிஸ்தான் கொடியை லாரியைவிட்டு ஏற்றிச் சாய்க்கிறார்கள் (இந்தக் காட்சிக்குக் கிடைத்த கை தட்டல்கள் மெய் சிலிர்க்க வைத்தது... அதற்கான பாராட்டுகள் இயக்குநருக்கு அல்ல.. நம் தமிழ் இளைய தலைமுறைக்கு). ஆப்கானிஸ்தானுக்குச் சென்று நல்லபடியாக இந்தியா திரும்புகிறார்கள். பாகிஸ்தான் நிலப்பரப்பு மனதுக்குத் தரும் சந்தோஷம் நீங்கலாக இந்தக் காட்சிகள் எல்லாமே மிக மிக மோசமாக இருக்கின்றன.

ஷூட்டிங், போஸ்ட் ப்ரொடக்ஷன் என்ற இரண்டு கட்டப் பணிகளில் பிற கலை, தொழில்நுட்ப மேதைகளின் துணையால் சிறந்துவிளங்கும் மணிரத்னம் ப்ரீ ப்ரொடக்ஷன் காலகட்ட கலைச் செயல்படுகளில் தன்னந்தனியாக இருப்பதால் மிக மிக மோசமாக தோற்றுவருகிறார். முந்தைய படங்களில் பிற கலைஞர்களின் அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு கதை, திரைக்கதையில் சோபித்த மணிரத்னம் இதில் பூரணமாகத் தோற்றிருக்கிறார். அந்த அஸ்திவாரம் பலப்படாமல் மணிரத்னம் கட்டும் எந்தக் கோட்டையும் அவர் கண் முன்னே சரிந்து விழுவதைத் தவிர்க்கவே முடியாது. பயிற்சி காலத்திலேயே கற்றுக்கொள்ளாத பாடத்தை ஓய்வு பெறும்போதா கற்றுக்கொள்ளப்போகிறார்.

Better Luck in next birth Mani Sir.

Tuesday 14 March 2017

சொல் புதிது - 3



புதிய சொற்கள்

செல்ஃபி - தம்பட்டப் படம்

எஸ்கலேட்டர் - நகரும் மின் ஏணி

ராக்ஸ் ஃபோன் : ஒட்டுக் கேட்கவியலா தொலைபேசி / அதிகாரபூர்வ ரகசிய தொலைபேசி

மைக்ரோவேவ் ஓவன் : மின் அலை அடுப்பு

அயர்ன் பாக்ஸ் - ஆடைகளின் சுருக்கலை வெப்பத்தின் மூலம் நீக்கும் கருவி - வெப்பச் சுருக்கல் நீக்கி அல்லது சுருக்கல் நீக்கி

டியூப் லைட் : குழல் மின் விளக்கு

ஒயர் : மின் கயறு

பிளக் : மின் இணைப்பான்

Flask - மாறாவெப்பக் குடுவை - வெப்பமாறாக் குடுவை

Notorious - கெடு புகழ் அல்லது தீய புகழ்

sting operation - கள்ளப் பதிவு

sound proof - ஒலித் தடுப்பு

டெலி ப்ராம்டர் - முன் தூண்டல் கருவி

என்கவுண்டர் - காவல் துறை கொலை

ஹானர் கில்லிங் - வறட்டு கெளரவக் கொலை

பைபாஸ் - தாண்டிச் செல்லும் வழி (நெரிசல் மிகுந்த ஊர் பகுதியைத் தாண்டிச் செல்லும் வழி).

சிங்கிள் விண்டோ ஆப்பரேட்டர் - அனைத்துச் செயல் மையம் (ஒற்றைச் சாளர மையம் என்பதைவிட எளிதில் புரியும்)

லிஃப்ட் - மாடி ஏற்றி

அவுட் ஆஃப் பாக்ஸ் ஐடியா - வழக்கத்துக்கு மாறான சிந்தனை

பவர் பாயின்ட் பிரசண்டேஷன் - விளக்கப்பட விவரணை

டிரெட் மில் -உடற்பயிற்சி நடை எந்திரம்

அப்பாயிண்ட்மெண்ட் - சந்திப்பு நேரம்

அப் டு டேட் - நாளது வரையான

பிராண்ட் பில்டிங் : நற்பெயர் உருவாக்கம்.

டிமானிடைசேஷன் : பணத்தாள் நீக்கம்

Doctorine of lapse : வாரிசு நியமன உரிமைப் பறிப்புச் சட்டம்

ப்ரெய்ன் வாஷ் - மூளைத் திணிப்பு (மூளைச் சலவை அல்ல. சலவை என்பது கறையை நீக்குவது. இங்கு மூளைக்குள் ஒரு பக்கச் சார்பு கருத்துகள் திணிக்கப்படுகின்றன)

போஸ்டர் பாய் - முன்னணி முகம்

சொல் புதிது - 2

புதிய சொற்களை உருவாக்குவோம்.

Ice Cream : ஐஸ்க்ரீம்.

இந்தப் பொருளின் குணங்கள் என்னென்ன..? 1.அது குளிர்ச்சியானது. 2.திடப்பொருளும் அல்ல திரவப் பொருளும் அல்ல. 3. இனிப்பானது. 4. பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

தமிழகத்தில் / இந்தியாவில் ஐஸ்க்ரீம் ஆங்கிலேயரின் வருகைக்குப் பிறகே அறிமுகமாகியிருக்கிறது. பனிக்கட்டிகள் மட்டுமே நம்மிடம் உண்டு. பாலில் இருந்து தயிர், மோர், வெண்ணெய், நெய், திரட்டிப் பால் (பால்கோவா), பாலாடை எனத் தயாரித்திருக்கிறோமே தவிர க்ரீம் என்பதை நாம் உருவாக்கியிருக்கவில்லை. எனவே, தமிழில் அதற்கான சொல் கிடையாது. க்ரீம் என்பதன் குணம் என்று பார்த்தால் அது திடமும் இல்லை திரவமும் இல்லை... அதாவது கூழ்ம நிலையில் இருக்கிறது. ஐஸ்க்ரீம் குளிர்ச்சியானது. எனவே, இந்தப் பொருளுக்கு பனிக் கூழ் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஆனால், கூழ் என்பது வேறொரு உணவுப் பொருளைக் குறிக்கும் சொல். பனி என்று முன்னொட்டு அதை வித்தியாசப்படுத்திக்காட்டுகிறது என்றாலும் கூழ் என்பது இந்துக் கோவில் வழிபாட்டுடனும் இந்துகளின் பாரம்பரிய அன்றாட உணவுடனும் வலுவாகப் பிணைக்கப்பட்ட பெயர். கூழ் என்றதும் கம்பு, கேழ்வரகு இவற்றால் தயாரிக்கப்படும் உணவே நினைவுக்கு வரும். பாரம்பரியக் கூழுடன் ஐஸ்க்ரீம் எந்தவகையிலும் தொடர்பில்லாதது, எனவே, பனிக் கூழ் என்பதற்கு பதிலாக பனிக் கூழ்மம் என்ற பெயரே பொருத்தமாக இருக்கும்.

இதுவும்கூட ஐஸ்க்ரீமின் முதல் இரண்டு குணங்களை மட்டுமே சுட்டுகிறது. இனிப்பானது என்ற அம்சமும் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்பதும் இல்லை. இந்த நான்கையும் உள்ளடக்கியதாக ஒரு பெயர் வைப்பதென்றால் இனிப்புப் பால் பனிக் கூழ்மம் என்று சொல்ல வேண்டியிருக்கும். இது மிகவும் நீளமான பெயராக இருப்பதால் மிக முக்கியமான அம்சங்களை மட்டும் உள்ளடக்கியதாக இனிப்புப் பனிக் கூழ்மம் என்றோ பால் பனிக் கூழ்மம் என்றோ பெயர் வைக்கலாம். பனி என்பதுகூட ஒருவகையில் பொருத்தமான சொல் அல்ல. ஏனென்றால் பனி என்பது நம் ஊரில் குளிர்ந்த தட்ப வெப்பநிலைக் குறிக்கும் சொல் மட்டுமே. பனிக்கட்டியை அது குறிக்காது. அதோடு ஐஸ்க்ரீம் என்பது பனிக்கட்டியும் அல்ல. எனவே, அதை குளிர்ந்த என்ற வார்த்தையால்தான் குறிப்பிடவேண்டும். குளிர் இனிப்புக் கூழ்மம், குளிர் பால் கூழ்மம் என்று சொல்லலாம். குச்சி ஐஸ் போன்றவற்றை இனிப்பு பனிக்கட்டி என்று அதிக சிரமம் இல்லாமல் சொல்லிவிடலாம்.

வாக்கியம் : நான் இன்று மாலையில் என் நண்பர்களுடன் சென்று குளிர் இனிப்புக்கூழ்மம் சாப்பிட்டேன். அது அருமையாக இருந்தது

*

வெய்ட்டர் - சர்வர் டிப்ஸ் என்ற ஒரு வார்த்தை.

இதில் வெய்ட்டர் என்பது காத்திருப்பவர் அதாவது நாம் சாப்பிட்டு முடிப்பதுவரை நம் அருகில் நமக்கு என்ன தேவை என்று காத்திருப்பவர் என்ற அர்த்தத்தில் அப்படிப் பெயரிட்டிருக்கிறார்கள். இதைவிட சர்வர் என்ற வார்த்தை மேலும் பொருத்தமானது : உணவு பரிமாறுபவர். இப்போது டிப்ஸ் என்பதன் அடிப்படை அம்சங்கள் என்னவென்று பார்த்தால் 1.உணவு பரிமாறுபவருக்குத் தரப்படும் தொகை. 2.பரிமாறுபவரின் சேவையைப் பாராட்டி அன்பினால் தரப்படும் தொகை. 3. அது மிகவும் சிறிய தொகையாகவே (சில்லறையாகவே) நாம் உணவுக்குக் கொடுக்கும் தொகையில் பத்தில் ஒரு பங்குதான் இருக்கும். இப்போது இந்த மூன்றையும் இணைத்துப் பெயர் வைத்தால் உணவு பரிமாறுபவருக்கு அன்பினால் தரும் சிறு தொகை அதாவது பரிசாரக சிறு அன்பளிப்பு. அதையே இன்னும் சுருக்கி பரிசாரக அன்பளிப்பு. இந்த பரிசாரகர் என்ற வார்த்தை பலருக்குப் புரிய வாய்ப்பு இல்லை. நம் ஏவலுக்கு ஏற்ப நடந்துகொள்பவர் என்ற வகையில் அவரை ஏவலர் என்றும் அவருக்குத் தரும் அன்புத் தொகையை அன்பளிப்பு என்று சொல்லலாம். ஏவலர் அன்பளிப்பு அல்லது பணியாளர் அன்பளிப்பு என்று சொல்லலாம். இந்த அன்பளிப்பை உணவு விடுதியில் மட்டுமல்லாமல் வேறு இடங்களிலும் சேவையைப் பாராட்டித் தருவது உண்டு என்பதால் அதை சேவை அன்பளிப்பு என்றும் சொல்லலாம். ஒருவேளை அன்பளிப்பு என்பது சற்று கனமான வார்த்தையாகத் தோன்றினால் அன்புத் தொகை என்பதே சரியாக இருக்கும்.

வாக்கியம் : அந்த உணவு விடுதியில் நாங்கள் ரூ 200க்குச் சாப்பிட்டோம். ஏவலர் அன்புத்தொகையாக (பரிசாரக அன்புத்தொகையாக) பத்து ரூபாய் கொடுத்தோம்.

*

ஷவர்

ஷவர் என்பது குளியலறையில் இருக்கும் குழாய். மழைத் தூறல் போல் நீரைச் சொரியக்கூடியது. குளியலறை தூறல் குழாய் என்பது அதன் அனைத்து அம்சங்களையும் கொண்ட பெயர். இதை எளிமைப்படுத்தி தூறல் குழாய் என்று சொல்லலாம்.

வாக்கியம் : குழந்தைகளுக்குக் குளியலறைத் தூறல் குழாயில் குளிப்பது மிகவும் பிடிக்கும்.

இண்டிகேட்டர் :

வாகனங்களில் செல்லும்போது பின்னால் வரும் வாகனங்களுக்கு நாம் வண்டியின் வேகத்தைக் குறைக்கப்போகிறோமா... வலதுபக்கம் திரும்பப் போகிறோமா இடதுபக்கம் திரும்பப் போகிறோமா என்பது போன்ற விஷயங்களைத் தெரிவிக்க வாகனங்களின் பின் பக்கம் ஒரு இண்டிகேட்டர் விளக்கு பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் பின்னால் வரும் வாகனங்களுக்கு நாம் செல்லவிருக்கும் திசையைச் ”சொல்லிக் காட்ட’ முடியும். எனவே அதை செல்திசைகாட்டி விளக்கு என்று சொல்லலாம்.

வாக்கியம் : நான் வாகனத்தில் போய்க்கொண்டிருந்தபோது முன்னால் சென்ற வாகனத்தை ஓட்டியவர் செல்திசைக் காட்டி விளக்கைப் பயன்படுத்தாமலேயே சட்டென்று வலது பக்கம் திரும்பிவிட்டார். நான் மெதுவாகச் சென்றதால் விபத்து தவிர்க்கப்பட்டது.

ஸ்டியரிங் :

கார், லாரி போன்ற வாகனங்களை ஓட்ட அந்த வாகனங்களின் சக்கரங்களை கட்டுப்படுத்தப் பயன்படும் வளைய வடிவிலான கருவி இது. வாகன ஓட்டி பயன்படுத்தும் வளையம் என்றவகையிலும் வாகனம் ஓட வழிசெய்யும் வளையம் என்ற வகையிலும் அதை வாகன ஓட்டி வளையம் என்று சொல்லலாம்.

வாக்கியம் : வாகன ஓட்டி வளையத்தில் புதிய தொழில் நுட்பமாக சக்கரங்களைக் கட்டுப்படுத்தும் மின் இயக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் வாகனத்தை ஓட்டுவது மிகவும் எளிதாகிவிட்டிருக்கிறது.

பிரேக் :

வாகனங்களின் வேகத்தை மட்டுப்படுத்தப் பயன்படுத்தும் பொருள். இப்போது அதை தடுப்பான் என்று சிலர் சொல்கிறார்கள். வேகத்தைத் தடுக்கும் கருவி என்ற பொருளில் அதை தடுப்பான் என்கிறார்கள். உண்மையில் அது வேகத்தைக் குறைக்கப் பயன்படுத்தும் கருவிதான். எனவே வேகக் குறைப்பான் என்பதே பொருத்தமானது.

வாக்கியம் : எங்கள் பள்ளி வாகனத்தின் குறுக்கே திடீரென்று ஒரு நாய்க்குட்டி பாய்ந்துவிட்டது. வாகன ஓட்டுநர் சட்டென்று வேகக் குறைப்பானை அழுத்தியதன் மூலம் நாய்க்குட்டி மீது மோதாமல் காப்பாற்றிவிட்டார்.

ஷாக் அப்சார்பர்

வாகனங்கள் மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும்போது அந்த அதிர்வானது பயணிப்பவர் மேல் செலுத்தும் எதிர்விசையை மட்டுப்படுத்தப் பயன்படுத்தும் கருவி. இது சுருள் வளையமாக இருக்கலாம். ரப்பர் வளையமாக இருக்கலாம். அதிர்வை உள்வாங்கிக் கொண்டு பயணியைக் காக்கும் கருவி என்பதால் இதை அதிர்வு உள் வாங்கி என்று சொல்லலாம்.

மென்சஸ் : இதை மாத விலக்கு என்று பொது வழக்கில் சொல்கிறார்கள். அந்த நாட்களில் வீட்டில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்ததால் அப்படிச் சொல்கிறார்கள். ஆனால், பழங்காலத்தில் அப்படி இருக்கச் சொன்னதன் நியாய அநியாயங்கள் , காரண காரியங்கள் இன்றைய வாழ்க்கை முறையில் தவறென்று படுகிறது. கற்பழிப்பு என்ற வார்த்தை தவறென்று சொல்வதுபோல் மாத விலக்கு என்பதையும் மாற்றியாகவேண்டும். மாத உதிரப் போக்கு நாட்கள் என்று சிலர் சொல்கிறார்கள். அது கண்ணியக் குறைவான சொல்லாக்கம். உண்மையில் அந்த நாட்களில் விந்தணுவை எதிர்பார்த்து உருவாக்கப்படும் கருமுட்டை கருத்தரிப்பு நிகழாமல் கரைந்து அழியும். எனவே கரு முட்டை கரையும் நாட்கள் என்று சொல்வது ஓரளவுக்கு கண்ணியமாக இருக்கும். மாத தளார்ச்சி நாட்கள் என்பது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

வாக்கியம் : மாத தளர்ச்சி நாட்களில் பெண்கள் மனதளவிலும் உடலளவிலும் கடினமான பணிகளைக் குறைத்துக் கொள்வது நல்லது.


ஃபுட் பாத்

நடந்து செல்லப் பயன்படுத்தப்படும் பாதை என்றவகையில் இதை இப்போது நடைபாதை என்று சொல்கிறோம். உண்மையில் இது சாலையோரத்தில் அமைந்திருக்கும் பாதை. காட்டுக்குள் இருக்கும் ஒற்றையடிப் பாதைகூட நடக்க உதவும் பாதைதான். ஃபுட் பாத் சாலை ஓரத்தில் இருக்கும் பாதையைக் குறிக்கும் என்பதால் சாலையோர நடைபாதை என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும்.

வாக்கியம் : நான் சாலையோர நடைபாதையில் வந்து கொண்டிருந்தபோது மழை பெய்ய ஆரம்பித்தது.

பிளாட்ஃபார்ம் :

இதை நடை மேடை என்று இப்போது சொல்கிறோம். உண்மையில் இது இருப்புப்பாதை நிலையம், பேருந்து நிலையம் போன்றவற்றில் வாகனங்களில் ஏறி இறங்க பயணிகள் பயன்படுத்தும் இடம் எனவே இதை ஏறு இறங்கு தளம் என்று சொல்லலாம்.

வாக்கியம் : இருப்புப்பாதைநிலையத்தின் ஐந்தாம் ஏறு இறங்கு தளத்தில் எங்கள் வாகனம் வந்து நின்றது. (நடைமேடை என்பது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்ட பெயர் என்பதால் அதையே பயன்படுத்தலாம். எனினும் அவ்வப்போது இந்தப் புதிய சொல்லையும் பயன்படுத்தி பழக்கத்துக்குக் கொண்டுவரலாம்).

தட்கல் :

நீங்கள் எந்த ஊருக்குப் போவதாக இருந்தாலும் அந்த ரயில் எதுவரை செல்லுமோ அதற்கான கட்டணத்தை நீங்கள் கட்டியாகவேண்டியிருக்கும். அந்தவகையில் உங்கள் பயண தூரத்தைவிட அதிக கட்டணத்தைத் தரவேண்டியிருக்கும். எனவே அதை மிகை பயணக் கட்டணம் என்று சொல்லலாம். அதோடு இதன் இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால் முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. கடைசி நேரத்தில்கூட டிக்கெட் பெற முடியும். இந்த இரண்டு அம்சங்களுமே மிக முக்கியமான அடையாளங்களே. எனவே மிகை பயணக் கட்டணம் அல்லது கடைசி நேர பயணச் சீட்டு என்ற இரண்டில் ஏதேனும் ஒன்று பொருத்தமாக இருக்கும்.

இதன் இன்னொரு அம்சம் என்னவென்றால் இது வரிசையை தவிர்த்து அல்லது வரிசையை மீறிப் பெறப்படும் பயணச் சீட்டு. பயணத்துக்கு 20 நாட்கள் முன்னதாக முன் பதிவு செய்தவர்களுக்குக் கிடைக்காத இருக்கைவசதி கடைசி நிமிடத்தில் அதிகக் கட்டணம் கட்டுபவருக்குக் கிடைத்துவிடும். எனவே இது வரிசையை மீறிப் பெறப்படும் பயணச் சீட்டு. அவசரமாகச் செல்லவேண்டிய அவசியம் இருப்பவர்களுக்காக இந்த சிறப்பு வசதியை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. எனவே இதை வரிசை மீறல் பயணச் சீட்டு என்று சொல்லாமல் அவசர பயணச் சீட்டு என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும்.

வாக்கியம் : எனது ஊர் அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவுக்கு முன்கூட்டியே பயணச் சீட்டு பதிவு செய்ய மறந்துவிட்டேன். எனவே, அவசரப் பயணச் சீட்டு (தட்கல்) வாங்கிக்கொண்டு சென்றுவந்தேன்.


சொல் புதிது -1


ஒரு மொழி உயிர்ப்புடன் இருக்கிறது என்பதற்கான பல்வேறு அறிகுறிகளில் ஒன்று புதிய சொற்களை அது உருவாக்கும் / உள்வாங்கும் அதன் திறமை. தாய்மொழியில் வேற்று மொழிச் சொற்களுக்கு இணையான சொற்களை உருவாக்குவது, வேற்றுமொழிச் சொற்களை அப்படியே ஏற்பது என இருவகைகளில் மக்கள் சமூகம் இயங்கிவந்திருக்கிறது. கலப்பு இல்லாத மனித சமூகம் இல்லை என்பதால் கலப்பு இல்லாத மொழியும் சாத்தியமில்லை. எனினும் ஒவ்வொரு மொழியிலும் உலகில் உள்ள அனைத்தையும் சொல்ல முடியும்படியான வார்த்தைகள் இருக்கவேண்டும். அதுவே ஒரு மொழி மட்டுமே பேசுபவர்களுக்கு அந்த மொழி அறிஞர்கள் ஆற்றவேண்டிய முதல் முக்கிய பணி. தாய் மொழியின் செல்வங்களைப் பிற மொழிகளுக்குக் கொண்டு செல்வதும் பிற மொழியின் வளங்களை தாய் மொழிக்குக் கொண்டுவருவதும் கற்றறிந்தோர் செய்யவேண்டிய முக்கியமான பணி. புதிய சொற்களை உருவாக்குவது அதில் ஓர் அங்கம்.

சொல் உருவாக்கத்தில் பல வகைகள் இருக்கின்றன. பிற மொழிச் சொற்கள் அறவே கூடாது என்பது ஒரு வகை. சைக்கிள் என்று சொல்லக்கூடாது... ஈருருளி என்றுதான் சொல்லவேண்டும் என்பது அவர்களின் வாதம். இது மொழித் தூய்மைவாதம், அடிப்படைவாதம், பண்டிதத்தனம் மிகுந்த முயற்சி எனப் பல அடுக்குகளைக் கொண்டது. இவர்களில் அடிப்படைவாத மொழித் தூய்மைவாதிகள் அவர்களுடைய பிற இலக்குகளின் காரணமாக முற்றாக ஓரங்கட்டப்படவேண்டியவர்கள். எனவே, அவர்கள் சொல்பவையும் அவ்விதமே அணுகவும் படவேண்டும். இவர்களில் மொழி மீதான பற்று, பெருமிதம் இவற்றின் காரணமாகச் செயல்படும் பண்டித அப்பாவிகள் சொல்பவற்றை ஓரளவுக்குப் பொருட்படுத்தலாம். ஏனெனில் ஆஸ்மாசிஸ் என்பதை சவ்வூடு பரவல் என்று சொல்லும் இடத்தில் இவர்கள் கம்பீரமாக வெளிப்படுகிறார்கள். காஃபியை கொட்டை வடிநீர் என்றோ செல்போனை முந்தக்கூவி என்றோ அடம்பிடிக்கும்போது இவர்கள் மீது பரிதாபமேபடமுடியும்.

பிற மொழிச் சொற்கள் கூடாதுதான். ஆனால், சமகால எளிய தமிழ் பதங்கள் உருவாக்கப்படவேண்டும் என்றொரு வகை. சைக்கிள் என்பதை இரு சக்கர வாகனம் என்றோ மிதி வண்டி என்றோ சொல்லலாம் என்று நெகிழ்ச்சியுடன் புதிய சொற்களை உருவாக்கும் வழிமுறை.

ஏற்கெனவே புழக்கத்தில் வந்துவிட்டிருந்தால் அதை அப்படியே பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது மூன்றாவது வகை. அவர்கள் சைக்கிளை சைக்கிள் என்றே சொல்லலாம் என்பார்கள். ஆங்கிலத்தில் கட்டுமரம் என்ற தமிழ்ச் சொல் அப்படியே எடுத்தாளப்பட்டிருப்பதுபோல் செய்யலாம் என்று சொல்வார்கள்.

இந்த மூன்றில் எது சரி என்று பொதுவாகத் தீர்ப்பு எதையும் சொல்லிவிடமுடியாது. ஒரு சொல்லை மக்கள் ஏற்றுக்கொள்ளும்போது அது அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லப்படும். இல்லையென்றால் அந்தப் புதிய சொல் வழக்குக்கு வராமல் அல்லது சொற்ப நபர்களின் எழுத்துகளில் மட்டுமே இருந்துகொண்டிருக்கும். எனவே, அறிஞர்கள் தமக்குள் ஒன்று கலந்து பேசி ஒரு சொல்லை ஏற்றுக்கொள்ளலாம். அல்லது தனித்தனியாக தமது முயற்சிகளை முன்னெடுக்கலாம். காலமும் மக்கள் திரளும் இடமும் வேண்டியதை வைத்துக்கொள்ளும். அல்லாததை ஓரங்கட்டும். பிழையாக இருந்தலும் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. அவருமே கூட தவறுதலாக நெற்றிக் கண்ணைத் திறக்கும் குணம் கொண்டவர்தானே.

*

புதிய சொல்லை உருவாக்கும்போது முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டிய அம்சம் அது தூய தமிழ்ச் சொல்லாக மட்டுமே இருந்தால் போதாது. அந்தச் சொல் உருவாக்கப்படும் காலகட்டத்து மக்களுக்கு எளிதில் புரியும்படியாக பேச்சு வழக்கில் இருக்கும் சொற்களைக் கொண்டதாக இருக்கவேண்டும். பெயர் வைக்கப்படும் பொருள், விஷயம் ஆகியவற்றின் அனைத்து அம்சங்களை அல்லது பெரும்பாலான அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும். அந்தவகையில் அந்தப் பெயர் அந்தப் பொருளுக்கான தனித்தன்மையைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கவேண்டும்.

தூய தமிழ் சொல்லாக இருந்தால் போதும். புரியாததாகவோ புதியதாகவோ இருந்தால் தொடர்ந்து பயன்படுத்தப் பயன்படுத்த அந்தச் சொல் சார்ந்த நிரடல்கள் நீங்கும் என்று சிலர் சொல்வதுண்டு. கூடுமானவரை பேச்சு வழக்கிலான தூய தமிழ் சொல்லே நமது முதல் தேர்வாக இருக்கவேண்டும். அதாவது செய்யுள் தன்மை மிகுந்த வார்த்தைகளைவிட உரைநடைத்தனமான வார்த்தைகளையே தேர்ந்தெடுக்கவேண்டும். பிரஷர் குக்கருக்கு அழுத்தக் கொப்பரை என்ற பதத்தைவிட அழுத்தக்கலன் என்பதையே தேர்ந்தெடுக்கவேண்டும். கொப்பரை என்பது அழகிய தமிழ்ச் சொல் என்ற போதிலும். இன்னும் எளிமைப்படுத்த நீராவி சமையற்கலன் என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும். பெயர் சூட்டும்போது ஒற்றைப் பெயராக இருக்கவேண்டும் என்பது சரிதான். ஆனால், நாம் இப்போது இடுகுறிப் பெயர்களை அல்ல காரணப் பெயர்களையே சூட்டுகிறோம். எனவே காரணங்களை சற்று விரிவாகச் சொல்லவேண்டிய தேவையிருந்தால் அதையே தயங்காமல் செய்யலாம். ஏனெனில் அந்த சொல்லைக் கேட்ட மாத்திரத்திலேயே யாருடைய பொழிப்புரையும் உதவியும் இன்றி அனைவருக்கும் புரியவேண்டும்.

ரயில் என்பதற்கு புகைவண்டி, தொடர்வண்டி, தொடரி எனப் பல பெயர்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆரம்பகால ரயில் வண்டிகள் புகையை உமிழ்ந்தபடி (கரியால் இயங்கியவை) பயணித்தவை என்பதால் புகை வண்டி என்று பெயரிட்டார்கள். கரி அல்லது பிறவகை எரிபொருளைப் பயன்படுத்தும் எல்லா வாகனங்களுமே புகையை உமிழ்பவைதான். எனவே, புகை வண்டி என்ற பெயர் பொருந்தாது. அதோடு நவீன கால மின்சார ரயில்கள் புகையை உமிழ்வதில்லை. எனவே அந்தப் பெயர் பொருத்தமற்றுப் போய்விட்டது. தொடர்ச்சியான பெட்டிகளைக் கொண்ட வண்டி என்ற பொருளில் தொடர் வண்டி என்று பெயரிட்டார்கள். அதைச் சிலர் சமீபகாலமாக தொடரி என்று சுருக்கி அழைக்கிறார்கள். இதுகூட அவ்வளவு பொருத்தமான பெயர் அல்ல. ரயில் என்ற வாகனத்தின் ஆதாரமான அம்சம் அது ரயில் என்ற தண்டவாளத்தில் ஓடும் வண்டி என்பதுதான். எனவே, தண்டவாள வண்டி என்பதுதான் மிகவும் பொருத்தமான பெயர். தண்டவாளம் என்பது இடுகுறிப் பெயர். இரும்புப் பாதை என்பது இருப்புப் பாதை என்று மருவி பயன்படுத்தப்படுவதுண்டு. எனவே இரும்புப்பாதை வண்டி என்பதுதான் மிகவும் பொருத்தமான பெயர். தொடரி போன்ற புதிய சொற்களெல்லாம் தொடர்ந்து சில வருடங்கள் பயன்படுத்திய பிறகே மக்களுக்குப் புரிய ஆரம்பிக்கும். ஆனால், இரும்புப் பாதை வண்டி என்பது சொன்ன மறு நிமிடமே அனைவருக்கும் புரிந்துவிடும். எனவே இதுபோன்ற வார்த்தைகள் இருக்கும்போது அவற்றுக்கே முன்னுரிமை தரவேண்டும்.

செவ்வ்வியல், செய்யுள் பதங்களைப் பயன்படுத்துவதில் இன்னொரு சிக்கல் என்னவென்றால், பழங்காலத்தில் ஒரு பொருளைத் தந்த வார்த்தை இன்றைய காலகட்டத்தில் வேறொரு பொருளைத் தரக்கூடும். உதாரணமாக, நாற்றம், வாடை என்ற வார்த்தைகள் பழங்காலத்தில் வாசனை, வட திசைக் காற்று என்ற நல்ல அர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டன. ஆனால், இன்று அவை மோசமான வாசனை என்ற அர்த்தத்தைத் தருகின்றன. எனவே செண்ட் என்ற வார்த்தையை நாற்றத் திரவம் என்று சொல்லக்கூடாது. வாசனைத் திரவியம் என்றோ நறுமணத் திரவியம் என்றோதான் சொல்லவேண்டும்.

சொம்னாம்புலிஸம் - இதை துயில் நடை என்று சொல்கிறார்கள். அழகான கவித்துவமான தமிழ்ப் பெயர். ஆனால் சொம்னாம்புலிஸம் என்பது  தூக்கத்தில் நடக்கும் வியாதி. அதற்கு கவித்துவமான பெயர் வைத்தால் அந்த நோயை நாம் ரசிக்க ஆரம்பித்துவிடுவோம். எல்லாருக்கும் அது வராதா என்று ஏங்கவைத்துவிடும். நோய் என்ற அச்சமும் பயமும் எச்சரிக்கையும் அந்தப் பெயரில் இருக்கவேண்டும். தூக்க நடை வியாதி என்று சொல்லவேண்டும். துயில் என்ற அழகிய வார்த்தையை ஒரு நோய்க்கு நிச்சயம் வைக்கவே கூடாது.

எனவே, நாம் உருவாக்கும் சொல் தூய தமிழ் பெயராக இருந்தால்மட்டும் போதாது, உரை நடைத் தன்மை கொண்டதாக, இன்றைய பொருளைக் குறிப்பதாக இருக்கவேண்டும். எந்தப் பொருளுக்கு அந்தப் பெயரை வைக்கிறோமா அதன் ஆன்மாவை வெளிப்படுத்துவதாக இருக்கவேண்டும்.

எல்லா சமூகங்களிலும் சொந்தப் பெருமிதங்கள், பாரம்பரியம் ஆகியவற்றை அளவுக்கு அதிகம் திணிக்கும் அல்லது பாதுகாக்க விரும்பும் அடிப்படைவாத இயக்கங்களும் இருக்கும். பிற அடையாளங்களுடன் நட்புறவு பாராட்டி வளர விரும்பும் சக்திகளும் இருக்கும். தாலிபானிசத்தில் ஆரம்பித்து இன்னபிற பிரிவினைவாதிகள் வரை அனைவரும் தமது அடிப்படைவாத இலக்குகளை வென்றெடுக்கும் நோக்கில் புறக் கலப்பை அறவே வெறுப்பவர்களாக இருப்பார்கள். புதிய சொல் உருவாக்கத்தில் அவர்கள் மொழித் தூய்மைவாதம் பேசுபவர்களாக இருப்பார்கள். இப்படியான சொல் உருவாக்கம் அதன் மென்மையான வடிவத்தில்கூட தெரிந்தும் தெரியாமலும் பல்வேறு அபாயங்களை உள்ளடக்கியவையே. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொன்னவரும் வந்தாரை வாழவைக்கும் குணம் கொண்டவருமான தமிழரே நமது வழிகாட்டியாக இருக்கவேண்டும். அவர் பிற மொழிகளை தன்னை அழிக்க வந்த சக்தியாக நினைத்து வெருள மாட்டார். பிற அடையாளங்களை தமது எதிரியாக முத்திரை குத்தி வெறுக்கமாட்டார். அவருக்கு மொழி என்பது சக மனிதர்களுடனும் உலக மனிதர்களுடனும் நட்புறவை உருவாக்கும் பாலம் போன்றது. தன் இனம் என்று தன்னைச் சுற்றி எழுப்பும் பாசி படிந்த மதில் சுவர் அல்ல. புதிய சொற்களை உருவாக்கும்போது இந்த விஷயத்தை மனதில் கொண்டு செயல்படுவோம். நம் தாய் மொழியை மட்டுமல்லாமல் பிறரின் தாய் மொழிகளையும் நேசிப்போம்.

Monday 13 March 2017

சுவாமி அம்பேத்கர் - 9

(9)

ஏற்கெனவே மடாலயத்தை சீர்திருத்த அவர் எடுத்த நடவடிக்கைகள் பலரைக் கோபப்பட வைத்திருந்தது. இப்போது அறநிலையத்துறையையும் அரசியல்வாதிகளையும் நேரடியாகப் பகைத்துக்கொள்ளவே அவர்கள் இவரை பழிவாங்க முடிவுசெய்கிறார்கள்.

இன்றைய காலகட்டத்தில் சுவாமிஜிக்களுக்கு இழைக்கப்படும் துரோகங்கள் அல்லது எதிரிகள் அவரை வீழ்த்த முன்னெடுக்கும் அவதூறுகள் என்பவை பாலியல் அவதூறுகள், கொலைப் பழி, சுற்றுச் சூழலை சீரழித்ததாகப் புகார், அந்நியச் செலாவணி மாற்றத்தில் ஊழல் போன்றவை முன்வைக்கப்படுகின்றன. சில பிழையான சுவாமிஜிக்கள் தாமே இவற்றைச் செய்பவர்களாகவும் இருக்கிறார்கள். அப்படிச் செய்யாதவர்களை அப்படிச் செய்ததாக வலையில் சிக்கவைக்கிறார்கள். ஆக நம் நாட்டில் இரண்டுவகையான சுவாமிஜிக்கள் இருக்கிறார்கள். ஒன்று: தவறு செய்பவர்கள். இன்னொன்று தவறு செய்ததாக அவதூறு செய்யப்படுபவர்கள். நிஜத்தில் இரண்டு வகை சுவாமிஜிக்களுமே தோற்றவர்களாக இருக்கின்றார்கள். நமது கதாநாயகர் அடிப்படையில் நல்லவர் மட்டுமல்ல, அவருக்கு இழைக்கப்படும் அவதூறுகளையும் தீமைகளையும் வென்றுகாட்டக்கூடியவரும் கூட.

சுவாமி அம்பேத்கர் மீதும் பாலியல் புகார் முன்வைக்கப்படுகிறது. சதிகாரர்கள் வேண்டுமென்றே ஒரு பெண்ணை சிஷ்யையாக (அருந்ததி தாய் என்பவரை) அனுப்பி சில வீடியோக்களை எடுத்துவைத்து மிரட்டுகிறார்கள். பிற மதத்தினரை இழிவுபடுத்தும்வகையில் அறிக்கைவிடும்படி பிணை மிரட்டல் விடுக்கிறார்கள். இளையவரோ மறுத்துவிடுவார். எதிரிகள் அந்த வீடியோவை வெளியிட்டு அவரை சந்தி சிரிக்கச் செய்வார்கள். ஊரே கூடி அவரைத் தூற்றும். அது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரும். சுவாமிஜி அமர்ந்தபடியே சாட்சி சொல்லலாம் என்று நீதிபதி அனுமதி கொடுப்பார். ஆனால், அவரோ வேண்டாம் அந்த நடைமுறையை எல்லா குற்றவாளிக்கும் நீங்கள் மாற்றி அமைத்து சட்டம் இயற்றுங்கள். இப்போதைக்கு நான் குற்றவாளிக் கூண்டில் நின்றபடியே பதில் சொல்கிறேன் என்று சொல்கிறார்.

அந்த வீடியோவில் இருப்பது அவரல்ல... அது கிராஃபிக்ஸ் செய்யப்பட்டது என்று சொல்லும்படி வழக்கறிஞர் சொல்லியிருப்பார். நீதிபதியும் அதை ஏற்றுக்கொண்டு அவரை விடுதலை செய்ய சம்மதித்திருப்பார். பக்தர்களும் அவரை ஏற்கத் தயாராக இருப்பார்கள். ஆனால், குற்றவாளிக் கூண்டில் ஏறிய சுவாமிஜி... அந்த வீடியோவில் இருப்பது நான் தான். துறவறம் மிகவும் உயர்வான லட்சியம். என்னால் அதை நிறைவேற்ற முடியவில்லை. என்னை மன்னியுங்கள். நீங்கள் என்ன தண்டனை தந்தாலும் ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்கிறார்.

அனைவரும் அதிர்கிறார்கள். ஆனால், நீதிபதி இளையவருக்கு சாதகமாகவே தீர்ப்பை வழங்குகிறார். நீங்கள் குற்றம் செய்ததாகச் சொல்கிறீர்கள். ஆனால், அந்த வீடியோ கிராஃபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டதுதான். நீங்கள் செய்த நல்ல செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் உங்களை அவமானப்படுத்த அப்படிச் செய்திருக்கிறார்கள். எனவே உங்களை இந்த நீதிமன்றம் விடுதலை செய்கிறது என்று தீர்ப்பளிக்கிறார். ஆனால் இளையவரோ உங்கள் தீர்ப்பைவிட எனக்கு என் பக்தர்கள் தரும் தீர்ப்பே மிக முக்கியம். அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை அமல்படுத்துங்கள் என்று கேட்டுக்கொள்கிறார்.

பக்தர்கள் கூடிக் கலந்து பேசிவிட்டு இளையவர் குற்றவாளியே என்று தங்கள் தீர்ப்பை எழுதிக் கொடுக்கிறார்கள்.

நம்பிக்கை மோசடி, திருமண பந்தத்துக்கு அப்பாற்பட்ட உறவு, திருமணம் செய்துகொள்வதாகப் பொய் சொன்னது என பல குற்றங்களின் அடிப்படையில் இளையவருக்கு ஏழாண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இதுபோன்ற புனிதமான இடத்தில் இருப்பவர்களுக்கு ஒரு பாடமாக அமையவேண்டும் என்பதால் எந்தவித அபராதமோ, பிணை வாய்ப்புகளோ இல்லாமல் முழு ஏழாண்டும் சிறையில் இருந்தாகவேண்டும் என்று நீதிபதி தீர்ப்பு வழங்குகிறார்.

தீர்ப்பை வழங்கிவிட்டு பக்தர்களிடம் திருப்திதானே என்கிறார். திருப்திதான். ஆனால்... எங்களிடம் இரண்டு பரிந்துரைகளும் இருக்கின்றன என்கிறார்கள்.

என்ன அவை என்கிறார் நீதிபதி.

முதலாவது: அவருடைய ஏழாண்டு சிறைத் தண்டனையை அவர் அனுபவித்து முடித்துவிட்டதாக தீர்ப்பு வழங்கவேண்டும்.

இரண்டாவதாக அவர் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளவேண்டும். இதுவே எங்கள் தீர்ப்பு என்கிறார்கள்.

மக்களுக்கு சேவை செய்ய முன்வருபவர்களை துறவறம் என்ற சிலுவையில் இனியும் அடிக்கத்தான் வேண்டுமா... ஊருக்கு நல்லது செய்வதற்காக ஒருவர் தன் உள்ளத்துக்கும் உடலுக்கும் துன்பம் தந்துகொள்ளவேண்டுமா? இந்த நவீன யுகத்திலாவது இல்லறத்தில் இருந்தபடியே சமூக சேவை செய்ய மடாலயங்கள் அனுமதிக்கவேண்டும். மேற்கத்திய போப், பாதிரிகளில் ஆரம்பித்து கிழக்கத்திய மடாதிபதிகள் வரை பலரும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள். நம் புராணங்களில் கூட தவத்தில் ஈடுபடும் முனிவர்கள் ரம்பை, மேனகை போன்றவர்களால் சம நிலை தடுமாறியதாகப் படித்திருக்கிறோம்.

துறவறம் அடிப்படையில் இயற்கைக்கு எதிரானது... இறைவனுக்கும் எதிரானது. துறவிகள் உலகுக்குத் தேவை என்று இறைவன் கருதியிருந்தால் இனப்பெருக்க உறுப்புகள் இல்லாமல் சிலரைப் படைத்து அனுப்பியிருப்பானே... எனவே அது இறைவனுக்கு எதிரானதுதான். குடும்பம், குழந்தைகள் என்று வந்துவிட்டால் ஒருவர் சமூகத்துக்கு நன்மைகள் செய்வதில் வேகமும் ஆர்வமும் குறைந்துவிடுமென்றால் குறையட்டுமே. சமூகத்தின் நன்மைக்காக தனி ஒருவரை இந்த அளவுக்கு ஒடுக்கவேண்டுமா... அது ஒருவகையில் குழந்தைகளின் இன்பத்துக்காக விலங்குகளைக் கூண்டில் அடைத்து வைப்பதுபோன்ற கொடூரம் அல்லவா..? பொதி சுமப்பதற்காக காளையை லாடம் கட்டி காயடித்து வண்டியில் பூட்டுவதுபோன்ற அராஜகம் அல்லவா..? அது இனியும் தொடரத்தான்வேண்டுமா... நாம் லெளகிக இன்பத்தில் திளைக்க துறவிகளைக் காயடிக்கவேண்டுமா என்ன..? அவர்கள் நமக்குத் தரும் மன நிறைவுக்கும் வழிகாட்டுதலுக்கும் இன்ன பிற உதவிகளுக்கும் நாம் காட்டும் நன்றி விசுவாசம் என்பது இதுதானா..?

துறவிகளுக்கும் தென்றல் வீசும் மாலைகளையும் நிலவு பொழியும் இரவுகளையும் கடக்கத்தானே வேண்டியிருக்கிறது. பட்டாடைகளும் நறுமணத் திரவங்களும் பூசி பூவும் பொட்டுமாக வளைகள் குலுங்க கொலுசுகள் ஒலிக்க வந்துபோகும் பெண்களையெல்லாம் பார்த்த பிறகும் உணர்சியற்றுக் கிடக்கவேண்டுமென்றால் எவ்வளவு பெரிய தண்டனை அது... துறவிகளின் பகல்களை மட்டுமே நாம் பார்க்கிறோம். முடிவற்று நீளும் அவர்களுடைய தனிமை இரவுகளை நாம் யோசித்துப் பார்ப்பதே இல்லை. இது தவறு... அதிலும் ஆண் துறவிகளின் நிலைமை மிக மிக பரிதாபமானது. பெண்களுக்காவது அடிப்படையிலேயே பாலியல் சுதந்தரம் மறுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஆண்களுக்கு அப்படியல்ல. விரும்பித் தேர்ந்தெடுத்த வாழ்க்கையென்றாலும் ஆணாகப் பிறந்தும் துறவியாக இருக்க நேர்வதென்பது மிகவும் துயரம் மிகுந்தது. சொர்க்கத்துக்குப் போயும் சோகமாக வாழ நேர்வதைப் போன்றது. எனவே துறவிகள் திருமணம் செய்துகொள்ள அனுமதிப்போம். அந்தக் காலத்தில் ரிஷியும் ரிஷி பத்தினியுமாக வாழ்ந்ததில்லையா அதுபோல் வாழ அனுமதிப்போம் என்று சொல்கிறார்கள்.

இளைய மடாதிபதி பக்தர்கள் அவர் மீதும் துறவிகள் மீதும் காட்டிய பேரன்பை நினைத்து கண்ணீர் மல்குகிறார். அவரை வீழ்த்துவதற்காக அனுப்பப்பட்டவர்தான் என்றாலும் அந்த நடிகைக்கு சுவாமிஜியின் மீது பரிதாபமே இருந்தது. அதிலும் பாலியல்ரீதியாகத் தன்னைச் சுரண்டியவர்களை மட்டுமே பார்த்துவந்த அவருக்கு சுவாமிஜியைத் திருமணம் செய்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்ததைப் பெரும் விடுதலையாகவே உணர்கிறார்.

இளையவரின் லட்சியக் கோவிலில் திருமணம் நடக்கிறது. காவி உடை அணிந்தபடியே தாலி கட்டுகிறார்.

திருமணக் கோலத்திலேயே இளைய மடாதிபதியும் அவருடைய பத்தினியும் ரதத்தில் ஏறி அமர்கிறார்கள். கோவில்களை பக்தர்கள் வசம் ஒப்படைக்கும் புனித யாத்திரை தொடர்கிறது.

சுவாமி அம்பேத்கர் - 8

(8)

கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் கால்வாய் சீரமைப்பு, ஏரி, குளங்களைத் தூர்வாருதல், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருத்தல் போன்ற பணிகளை வழிபாட்டின் ஓர் அங்கமாக முன்னெடுக்கிறார்கள். 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் எந்திரங்களுக்கு அனுமதி இல்லை. ஆனால், உழைப்புக் கூலி தரப்படும். இளைய மடாதிபதி எந்திரங்களுக்கான தொகையை கோவில் நிர்வாகத்திலிருந்து தருகிறார். பணியாளர்களுக்கான கூலியை 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம் மூலம் தர வழி செய்கிறார். அப்படியாக ஒரு வருடத்தில் நாடுமுழுவதும் தடுப்பணைகள் கட்டப்பட்டு, ஏரி குளங்கள் தூர் வாறப்பட்டு விவசாயம் உயிர்ப்பிக்கப்படுகிறது.

*

நாத்திகர்கள் புதிதாக ஒரு கோரிக்கையை முன்வைக்கிறார்கள். எம்மதமும் சம்மதம் என்று இந்து மதம் சொல்வதாகப் பெருமை பீற்றிக் கொள்கிறீர்களே... கோவில்களில் ஏசு கிறிஸ்துவுக்கு சன்னதி கட்டவேண்டியதுதானே என்று கேட்கிறார்கள். பக்தர்களிடம் அந்த விஷயம் கலந்தாலோசிக்கப்படுகிறது. செய்யலாம்தான். ஆனால், பதிலுக்கு சர்ச்சுகளில் சிவனுக்கு தனியாக ஒரு சன்னதி கட்ட அவர்கள் முன்வருவார்களா என்று கேட்கிறார்கள். அதைக் கேட்டதும் நாத்திகர்கள் அலறி அடித்து ஓடுகிறார்கள். ஆனால், இளைய மடாதிபதிக்கு அப்படிக் கிடைக்கும் வெற்றி போதுமானதாக இல்லை. உண்மையிலேயே கோவில் வளாகத்துக்குள் மேரியம்மன், இயேசு, சிலுவை என ஏதேனும் ஒரு உருவச் சிலை வைத்து வழிபடலாம். இந்து மதத்தில் இருந்து பிரிந்து சென்ற கிறிஸ்தவர்கள் தமது வேர்ப் பிடிப்பை இழக்காமல் இருக்கும் நோக்கில் இத்தகைய கோவில்களுக்கு வந்து வணங்கிச் செல்ல அது உதவும். இந்தக் கோவில்களில் பிற இந்து தெய்வங்களுக்கு நடப்பதுபோலவே அனைத்து அபிஷேக, ஆரத்தி சடங்குகள் எந்தவித புறக்கணிப்பும் இல்லாமல் சமத்துவமாக கிறிஸ்தவ சிலைகளுக்கும் முன்னெடுக்கலாம். ஆங்கிலப் புத்தாண்டு கிறிஸ்மஸ் போன்ற எல்லா அந்நிய விழாக்களிலும் அந்த தெய்வங்களுக்கு விமரிசையான பூஜைகள் நடத்தலாம் என்று சொல்கிறார்.

அதுபோலவே, கோவிலின் மேற்கு பக்கத்தில் இஸ்லாமிய வழிபாட்டு மண்டபம் அமைக்கப்படவேண்டும். இஸ்லாமிய மசூதிகளில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதுபோல் அல்லாமல் இங்கு ஆண்களும் பெண்களும் தனி வரிசையில் அமர்ந்து தொழுதுகொள்ள வழிசெய்து தரப்படலாம் என்று சொல்கிறார்.

இந்துக்கள் மட்டுமல்ல... கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் கூட இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

இளைய மடாதிபதி தன் முடிவில் உறுதியாக இருக்கிறார். சபரி மலைக்குச் செல்லும் இந்து பக்தர்கள் வாபர் மசூதிக்குச் சென்று தொழுவதில்லையா... சபரிமலைக்குக் கூட இஸ்லாமியர்கள் மாலை போட்டுகொண்டு வணங்கச் செல்கிறார்களே... இதுபோல் இங்கும் வந்து போகலாமே என்கிறார். யாரும் அவருடைய கருத்தை ஏற்காமல் போகிறார்கள்.

அனைத்து மதத்தினரும் ஒரே இடத்தில் ஒன்று கூடி பிரார்த்தனை செய்தாக வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி பாரத மாதா ஆலயம் கட்டுவதுதான். மூவர்ணக் கொடியே அந்தக் கோவிலின் மூல விக்கிரஹம் (மின் விசிறி மூலம் அது பட்டொளி வீசிப் பறந்தாகவேண்டும்). இந்திய அரசியல் சாசனமே அந்த கோவிலின் வேத புத்தகம். தேசிய கீதமே அங்கு ஒலிக்கும் ஒரே மந்திரம் என தீர்மானிக்கிறார்கள். உள்ளேயும் வெளியேயும் தேசியக் கொடி பறக்க பாரத மாதா ஆலயம் கிராமந்தோறும் உருவாகிறது.

*

மடாலயத்து மலைக் கோவில் ஒன்றில் விழா நடக்கவிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அந்த விழாவில் கூட்ட நெரிசல், வேலி சவுக்குக் கம்பு உடைதல், விபத்து, காயம் என நடந்துகொண்டே இருக்கும். அந்த மலைக்கோவிலுக்கு முன்னேற்பாடுகள் செய்ய இளைய மடாதிபதி செல்லுவார். மலைக் கோவிலுக்கான பாதையில் சமதளமாக இருக்கும் பகுதிகளிலும் மலை உச்சியிலும் கடைகள் போடப்படும். அவையே நடைபாதையின் பாதி இடத்தை அடைத்துக் கொள்ளும் என்பதால்தான் மக்களுக்கு பெரும் இடைஞ்சல் என்று புரிந்துகொள்கிறார். ஆனால், அந்த சிறு வியாபாரிகளை கடை போடாமல் தடுக்கவும் முடியாது. என்ன வழியென்று யோசிக்கிறார். ஒரு மீட்டர், இரண்டு மீட்டர் பாய் விரித்துப் பரப்பி வைக்கும் விற்பனைப் பொருட்களை அலமாரி போல் செய்து அடுக்கி வைத்தால் ஐம்பது மீட்டருக்குள் அடக்கிவிடமுடியும் என்று ஆலோசனை சொல்கிறார்கள். கோவில் நிர்வாகம் சார்பில் அலமாரிகள் செய்ய உத்தரவிட்டு அவற்றுக்கு குறைந்த கட்டணம் வசூலிக்கச் சொல்கிறார். விழா விமர்சையாக நடக்கிறது. மக்கள் கூட்டம் நெரிசல் இல்லாமல் வந்துபோகிறது.

விழாவெல்லாம் முடிந்து கடைகள் எல்லாம் ஏரைக் கட்டும்போது ஏதோ தகராறு நடக்கிறது. ஆலய அலுவலகத்தில் இருக்கும் இளைய மடாதிபதி என்ன என்று விசாரிக்கச் சொல்கிறார். ஒரு சிறு வியாபாரி தரை வாடகை, அலமாரி வாடகை கட்டமுடியாமல் தவிக்கிறார். வாடகையைக் குறைத்துக்கொள்ளும்படிக் கேட்கிறாராம். உங்களைச் சந்தித்துப் பேசவிரும்புவதாகவும் சொல்கிறார். கோவில் பணியாளர்கள் அதுமுடியாதென்று தடுக்கிறார்கள் என்று உதவியாளர் சொல்கிறார். அவரை அழைத்துவா நான் பேசுகிறேன். இரண்டுக்கும் சேர்த்து 500 ரூபய்தானே நிச்சயித்திருக்கிறோம். அதுகூடவா கட்டமுடியவில்லை என்கிறார் இளைய மடாதிபதி. கோவில் பணியாளர்களே பார்த்து சரி செய்துவிடுவார்கள். நாம் இதில் தலையிடவேண்டாம் என்று உதவியாளர் சொல்கிறார். இளையவருக்கு குழப்பம் வருகிறது. என்ன விஷயம் என்று கேட்கிறார். உதவியாளர் தயங்கியபடியே உண்மையைச் சொல்கிறார். கோவில் கணக்கில் 500 ரூபாய்தான் வசூலிக்கப்படும். கோவில் பணியாளர் தன்னுடைய கணக்காக ஐந்தாயிரம் வசூலித்துக்கொள்வார் என்று சொல்கிறார். அதைக் கேட்டு அதிர்ச்சியுறும் இளையவர் சட்டென்று எழுந்து புறப்படுகிறார். உதவியாளர் அவரை சமாதானப்படுத்தி கோவில், மடாலயக் கணக்குகள் நிர்வகிக்கப்படும் விதம் பற்றி எடுத்துச் சொல்கிறார். எல்லா வருவாயும் இப்படித்தான். ஆயிரம் ரூபாய் வசூலிச்சிட்டு அம்பது ரூபாய்தான் கணக்கு காட்டுவார்கள் என்கிறார்.

இளையவர் மறு நாள் பூஜை புனஸ்காரங்கள் முடிந்ததும் நேராக மூத்த மடாதிபதியிடம் இது பற்றிப் பேசுகிறார். அவரோ நம்மால் எதுவும் செய்ய முடியாது. இதுவொரு பெரிய புதைகுழி இறங்கினால் நம்மை அழித்துவிடும். கூடுமானவரை இந்த லெளகீக கணக்கு வழக்குகளில் நாம தலையிடாம இருக்கறதுதான் நமக்கு நல்லது. நம்ம மடாலயத்தோட நிலைமை மட்டுமல்ல... எல்லா இந்துக் கோவில்களோட நிலைமையும் இதுதான் என்கிறார். இளையவருக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. அரசியல்வாதிகளையும் அற நிலையத்துறை அதிகார வர்க்கத்தையும் எதிர்க்கவும் முடியாது. இந்த முறைகேடு தொடர அனுமதிக்கவும் முடியாது. என்ன செய்ய என்று யோசிக்கிறார். வணிக நிறுவனங்களைப் பொறுத்தவரையில் அரசின் கட்டுப்பாடு குறைவாக இருக்கவேண்டும் என்ற அடிப்படையில் தனியார்மயமாக்கம் நடந்தேறியிருப்பதைப் போல் ஒவ்வொரு கோவிலும் ஓர் அறக்கட்டளையாக பதிவுசெய்யப்பட்டு பக்தர்களை உறுப்பினர்களாகக் கொண்டு பக்தர்களாலேயே நிர்வகிக்கப்படுவதாக ஆக்கவேண்டும் என்று முடிவுசெய்கிறார். தனது கொள்கைக்கு ஆதரவாக மக்களை ஒருங்கிணைக்க முதலில் விவேகானந்தர் பாறையில் இருந்து தொடங்கி நாடு முழுவதும் ரத யாத்திரை மேற்கொள்ள முடிவுசெய்கிறார். கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கே என்ற முழக்கத்துடன் யாத்திரை தொடங்குகிறது. For Devotees... By Devotees... Of Devotees... பக்தர்களுக்காக பக்தர்களால் பக்தர்களின் கோவில் என்று ஒவ்வொரு கிராமத்துக்கும் அந்த ரதம் செல்கிறது. ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு அறக்கட்டளைக் குழுவை அந்த இடத்திலேயே உருவாக்குகிறது.

*

(தொடரும்)