Saturday 22 July 2017

இந்து மதமும் அடிமைகளும்

இந்து மதத்தில் பிராமணர்களைத் தவிர வேறு யாரும் கல்வி கற்கவே இல்லை என்பதுதான் நவீன இந்தியாவின் மெக்காலே க்ளோன்களின் முதல் முத்திரை முழக்கமாக இருந்தது. துவிஜர்களில் பிற ஜாதியினரும் சூத்திரர்களில் பெரும்பாலானவர்களும் கல்வி பெற்றதற்கான ஆதாரங்கள் வரிசையாக வந்து குவியவே, தலித்களுக்கு கல்வி தரப்படவே இல்லை என்று முழங்க ஆரம்பித்தனர். கூடவே தலித்கள் அடிமைகளாக மட்டுமே நடத்தப்பட்டதாக வெர்ஷன்.2 முழக்கமும் சேர்ந்திருக்கிறது (சேற்றில் மட்டுமே எத்தனை காலம் தான் புரளுவது. சிந்தனை முதுமை அடையும்போது அதில் தன் மலத்தையும் சிறுநீரையும் கலந்து கொள்வது தவிர்க்கமுடியாத விஷயம்தானே).

தான் ஆட்சி செய்ய விரும்பும் மக்கள் மனதில் முதல் ஆக்கிரமிப்பாளன் தான் அல்ல; ஏற்கெனவே இங்குள்ள ஆதிக்க சக்தியும் வந்தேறியே என்ற ”வரலாற்று உண்மையை’ விதைப்பது அவசியமாக இருந்தது. அதுபோலவே உலகம் முழுவதையும் அடிமைப்படுத்திய தன்செயலை நியாயப்படுத்த எல்லா ஊரிலுமே அடிமைத் தொழில் / அடிமை வாழ்க்கை இருக்கத்தான் செய்தது என்று ”விஞ்ஞானபூர்வமான வரலாற்றை’ எழுதுவதும் அதி அவசியமான அரசியல் செயலே. அவர்கள் மீது குற்றம் சொல்லவே முடியாது. நாயைக் கொல்ல விரும்பினால் அதற்குப் பைத்தியம் பிடித்துவிட்டதாகச் சொல்லிய பிறகு கொல்லும் சட்ட ஒழுங்குக்குக் கட்டுப்பட்டவர்கள் அல்லவா... அவர்கள் அப்படி வசதியான வரலாறை உருவாக்கத்தான் செய்வார்கள். நம்மவர்களில் அதை அப்படியே முழங்கும் கிளிப்பிள்ளைகளைப் பார்க்கும்போது படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோன்னு போவான் என்ற வரியே நினைவுக்கு வருகிறது.

தமிழகத்தை எடுத்துக்கொண்டால் பறையர், பள்ளர் என்ற சாதியினர் தலித் ஜாதிகளின் முன்னணிப் பிரிவினராக இருக்கிறார்கள். இதில் பள்ளர்கள் தம்மை நிலவுடமை சாதிகளாகவே நினைக்கிறார்கள். நாங்கள் தலித்துகள் அல்ல என்பதுதான் இட ஒதுக்கீட்டு அரசியல் தாண்டிய அறிவுத் தளத்தில் அவர்கள் சொல்லும் வாதம். அவர்கள் நிச்சயம் அப்படியான மேலான நிலையில் இருந்திருப்பார்கள் என்பதற்கு பசு மாமிசத்தை அவர்கள் தவிர்ப்பது மிக நியாயமான அழுத்தமான ஆதாரம். பிரிட்டிஷ் ஆவணங்களில் இது இருக்காது என்றாலும் குறைந்தபட்ச தர்க்க உணர்வும் நியாய உணர்வும் தன் தாய் (மதம்) கொஞ்சமாவது கற்புடையவளாக இருந்திருப்பாள் என்ற குறைந்தபட்ச நம்பிக்கையும் உள்ளவர்களுக்குப் புரியக்கூடிய உண்மையே.

அடுத்ததாக அயோத்தி தாஸர் போன்ற பறையர் குலத் தலைவர்கள் பறையர்களைப் பூர்வ பவுத்தர்கள் என்றும் பவுத்தத்தின் வீழ்ச்சியையொட்டி சமூகத்தின் கீழடுக்குக்கு நகர்த்தப்பட்டவர்கள் என்றுமே சொல்கிறார்கள். சக்கிலியர்களுக்கு நிலம் தானமாகத் தரப்பட்டது தொடர்பான கல்வெட்டு ஆதாரங்கள் இருக்கவே செய்கின்றன. அப்படியாக சக்கிலியர்களும் நிலவுடமை சமூகமாக இருந்த காலமும் இருக்கத்தான் செய்திருக்கிறது.

அடுத்ததாக, பெரும்பாலான பறையர், பள்ளர், சக்கிலியர், தோட்டியர் போன்ற சாதியினர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்தவர்களாக இருந்திருக்கிறார்கள். குத்தகை உரிமை என்பது அரை சொத்துரிமைக்கு சமம். அதிலும் கிறிஸ்தவ பிரிட்டிஷ் அரசுகள் போல் கெடு வரி வசூலிக்காத இந்து மன்னர்களின் ஆட்சி காலத்தில் குத்தகை உரிமை நிச்சயம் மேலானதாகவே இருந்திருக்கும்.

இப்படியாக தலித்களின் கடந்த காலம் தொடர்பாக அந்த மக்களின் தலைவர்களும் அவர்களுடைய நூல்களும் வேறுவிதமாகச் சொல்லும் நிலையிலும் அதெல்லாம், கிடையாது நீ அடிமையாகத்தான் இருந்தாய் என்று அடித்துச் சொல்லும் அளவுக்கு அவர்கள் மீது வெறுப்பு அதுவும் நல்லெண்ணப் போர்வையில் வெளிப்படுவதைப் பார்க்கும்போது அப்படிச் சொல்பவர்களின் எதிரி யார் என்ற குழப்பம் ஏற்பட்டுவிடுகிறது.
அடுத்ததாக, பிரிட்டிஷ் கிறிஸ்தவர்களின் வருகையென்பது தலித்களுக்கு (ஏட்டுக்) கல்விக் கண்ணைத் திறந்துவிட்டது என்ற கூற்றில் இருக்கும் உண்மையைவிட அதுதான் அயல்நாட்டுத் தேயிலைத் தோட்டங்களுக்கு தலித்களை அடிமைகளாகக் கடத்திச் சென்று கொடூரமாக ஒடுக்கியது என்ற சொல்லப்படாத கூற்றில் அதிக உண்மை இருக்கிறது. இதற்கும் பிரிட்டிஷ் ஆவணங்களில் ஆதாரங்கள் எதுவும் கிடைக்காது. அதில் தேயிலைத் தோட்டங்களில் தலித்கள் சந்தோஷமாக இருந்ததாகவும் ஊருக்குத் திரும்பி அந்தப் பணத்தில் நில புலன் வாங்கிய கதைகளை மட்டுமே ஆவணப்படுத்தியிருப்பார்கள். நீக்ரோக்களைப் பெருங்கருணையுடன் நடத்திய ஐரோப்பிய சமூகம் இந்திய தலித்களை மட்டும் கொடுமைப்படுத்தியிருக்குமா என்ன..? எனவே இதுவும் பெரும்பான்மை ஆவணங்கள் மூலம் நிரூபிக்க முடியாத உண்மையாகவே இருக்கும். ஆனால், மேற்குப் பக்கம் திரும்பி நின்று கிழக்குக்கு முதுகைக் காட்டும் நபர்கள் தவிர மற்றவர்களுக்குத் தென்படும் பிரமாண்ட பிரத்யட்ச சூரியன் போன்றதே இந்த உண்மை.

அடுத்ததாக, அவர்ணர்கள் என்ற வகைப்பாட்டில் மிகவும் இழிவான நிலையில் பஞ்சமர்கள் நடத்தப்பட்டதாகச் சொல்லப்படுபவை பிராமணர்களால் மட்டும் வேண்டுமானால் (ஒரு வாதத்துக்காகத்தான்) பின்பற்றப்பட்டிருக்கலாம். பிற சாதியினர் இப்படியாக விலக்கி வைத்திருக்கும் வாய்ப்பு மிக மிகக் குறைவு. சாதிக் கலப்பை பிற சாதியினர் மூர்க்கமாகத் தவிர்த்த/தடுத்த நிலையிலும் கண்ணில் படவே கூடாது என்றெல்லாம் செய்திருப்பார்கள் என்று நம்பமுடியவில்லை. அதிலும் பவுத்த, சமண, இஸ்லாமிய அரசுகள் இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அரசாண்டிருக்கும் நிலையில் இப்படியான நிலை நிச்சயம் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. புத்தர் சாதி ஏற்றத் தாழ்வு குறித்து இப்படியான கொடூரச் சித்திரத்தையோ எதிர்ப்பையோ எங்குமே பதிவு செய்திருக்கவில்லை. இந்தியாவுக்கு வந்து சென்ற பயணிகள் எழுதிய குறிப்புகளில் கூட இணக்கமான சமூகச் சித்திரமே இருக்கிறது. எனவே, தலித்கள் அடிமைகளாக நடத்தப்பட்டனர் என்பது எஜமானரே நாணி வெட்கும் அளவுக்கான அறிவுஜீவி ஜால்ரா மட்டுமே.

கடைநிலை சாதியினர் குறைந்த எண்ணிக்கையில் கல்வி பெற்றதற்கு மேல் சாதியினரின் ஒடுக்குமுறை மட்டுமேதான் காரணமாக இருக்குமா... கருணை மிகு மிஷனரிகள் சமத்துவப் பள்ளிகளை வதவதவெனத் திறந்துவிட்டு 200-300 ஆண்டுகள் கழித்தும் காமராஜர் மதிய உணவு போட்டுத்தான் வரவழைக்கவேண்டியிருந்தது; அப்போதும் இடை நிற்றல் அந்தப் பிரிவு மக்களிடையே அதிகமாக இருந்தது என்றால் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்ற எளிய நம்பிக்கையும், ஏட்டுக் கல்வியின் இறுக்கமான கெடுபிடிகள் அந்தப் பிரிவினரின் சுதந்தரக் கற்றலுக்கு எதிரிடையாக இருந்ததும் கூடத்தான் காரணமாக இருந்திருக்கும்.

இந்திய அளவில் ஜாதிய வாழ்க்கை என்பதே குலத் தொழில் வாழ்க்கைக்கான ஆதாரமாக இருந்திருக்கிறது. குலத் தொழில் வாழ்க்கையே கல்விப் பரவலுக்கான தேவையை நெறிப்படுத்தியதாக இருக்கிறது. தெய்வங்கள் பல... வாழ்க்கை மதிப்பீடுகள் பல... என்ற உயரிய பன்மைத்துவ ஆன்மிக நம்பிக்கையின் தவிர்க்க முடியாத கருநிழலே/நீட்சியே ஜாதியப் பார்வை. ஒவ்வொரு தெய்வத்தை வணங்குபவர்களும் ஒவ்வொரு குலம் என்பதே ஜாதி உணர்வின் அடிப்படை. அதுவே சமூகத் தளத்தில் ஒவ்வொரு குலத்துக்கும் ஒவ்வொரு தொழில் என்பதாக நிலைபெற்றிருக்கிறது. ஏட்டுக் கல்வி மூலம் பல தொழில் கற்று பிடித்ததைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வாய்ப்பை அதுவே தள்ளியும்போட்டிருக்கிறது. மன்னராட்சி மறைவு, தொழில்புரட்சி உதயம், அச்சு இயந்திரக் கண்டுபிடிப்பு போன்ற காரணங்களோடு இதுவும் ஒரு காரணமாக அதனளவில் இருந்திருக்கிறது.

ஜாதிவிட்டு ஜாதி மாறுதல் என்றால் தெய்வத்தை மாற்றிக்கொள்ளுதல் என்பதால்தான் சமூக அங்கீகாரம் அதற்குக் கிடைக்கவில்லை. சிவனை வணங்கும் சைவர்களை விஷ்ணுவை வணங்கும் வைஷ்ணவர் விலக்கிவைப்பதற்கும் பறையர்களிலேயே ஒரு பறையர் குலம் இன்னொரு பறையர் குலத்துடன் கொள்வினை கொடுப்பினை செய்யாமல் இருப்பதற்கும் இந்த வெவ்வேறு தெய்வ நம்பிக்கையே காரணம். பல தெய்வங்களை அனுமதிக்கும் சமூகத்தில் பல ஜாதிகள் இருந்தே தீரும். ஒற்றை தெய்வத்தை வலிந்து திணிக்கும் மதங்களில் ஜாதிகள் இல்லை என்பதில் இருந்து இந்த உண்மையை ஒருவர் புரிந்துகொள்ளமுடியும்.

தெய்வங்களையோ அதனால் ஜாதிகளையோ மாற்றிக்கொள்ள அனுமதிக்காததில் பெரிய தவறில்லை. ஆனால், தொழில்களை மாற்றிக்கொள்ள அனுமதித்திருக்கலாமே என்ற கேள்வி ஒருவருக்கு இங்கு நிச்சயம் எழும். ஆனால், கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற ஒற்றை தெய்வத்தை வணங்கிய சமூகத்திலேயே மன்னரின் மகனே மன்னராகவும் அடிமையின் மகன் அடிமையாகவுமே இருந்த நிலையில் வேறு வேறு ஜாதிகளாக இருந்தவர்கள் குலத் தொழிலை மாற்றிக்கொள்ளாதது பற்றி அப்படி ஒன்றும் தர்மாவேசம் கொண்டுவிட முடியாதென்பதே உண்மை.

எனவே, பன்மைத்துவத்தை அடிப்படையாகக்கொண்ட இந்து ஆன்மிகக் காமதேனுவின் தவிர்க்க இயலா சாணியே ஜாதிய ஒடுக்குமுறை. காமதேனு என்பது சாணி போடும் ஒரு விலங்கு மட்டுமே என்று அதன் ஆசனவாயை மட்டுமே பார்த்துச் சொல்பவர்கள் நிச்சயம் ஓர் அறிவியல்பூர்வமான நேர்மையான உண்மையைத்தான் சொல்கிறார்கள். ஆனால், அது சாணியை மட்டுமே போடவில்லை என்பது அதன் பாலை ஒரு சொட்டாவது அருந்தியவர்களுக்கு மட்டுமே தெரியவரும். அதற்கு ஆசனவாயில் இருந்து கண்ணை அகற்றிக் கொண்டாகவேண்டியிருக்கும். கழுகுக்குப் பிணம்; பன்றிக்கு மலம்; இடதுசாரிகளுக்கு மிகைப்படுத்தப்பட்ட எதிர்தரப்புக் குறைகள் (மட்டுமே) என்ற நிலையில் இது சாத்தியமில்லாத விஷயமே. ஆனால், இழப்பு காமதேனுவுக்கோ அதன் பாலைச் சில சொட்டுகள் அருந்தியவர்களுக்கோ அல்ல.

Friday 21 July 2017

பாரதப் பாரம்பரியக் கல்வி

பாரதப் பாரம்பரியக் கல்வி பற்றிச் சொல்லப்படும் வாக்கியங்களில் பெரும்பாலானவை மேம்போக்கானவையாகவும் அரை உண்மைகளைப் பேசுபவையாகவும் அரசியல் சார்புடனுமே இருக்கின்றன.

பாரதப் பாரம்பரியக் கல்வி முறையில் அனைத்து ஜாதியினருக்கும் கல்வி தரப்படவில்லை. இந்தியாவில் கிறிஸ்தவ மடாலயங்களால் தொடங்கப்பட்ட பள்ளிகளில்தான் அனைத்து ஜாதியினருக்கும் கல்வி முதன்முதலாகத் தரப்பட்டது என்பதுதான் பலரும் உற்சாகத்துடன் சொல்ல விரும்பும் வாக்கியமாக இருக்கிறது.

தொழிற்புரட்சி நடப்பதற்கு முன்பாக உலகில் கடைநிலைப் பிரிவுகளில் இருந்தவர்களுக்கு என்றுமே எங்குமே கல்வி தரப்பட்டிருக்கவில்லை (கிறிஸ்தவம் தோன்றிய நாடுகளிலும்) என்பதை அவர்கள் சொல்லவே மாட்டார்கள்.
உலகம் முழுவதும் மன்னராட்சி காலத்தில் குலத் தொழிலே மிக முக்கியமானதாக இருந்துவந்திருக்கிறது. அனைத்து கல்வித் துறைகள் சார்ந்த பாடங்களையும் அச்சடிக்கப்பட்ட புத்தகங்களையும் கொண்ட ஏட்டுக் கல்வி என்பது மன்னராட்சி வலுவிழக்கத் தொடங்கிய, அச்சு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட, தொழில் புரட்சி ஏற்பட்ட பிறகே உலகம் முழுவதிலும் வந்திருக்கிறது. பாரதத்திலும் அப்படியாகவே நடந்திருக்கிறது என்பதைச் சொல்லாமல் இந்து மதம் மட்டுமே கடைநிலையில் இருந்தவர்களைக் கல்வியில் ஓரங்கட்டியதுபோன்ற சித்திரத்தை உருவாக்குவார்கள்.

பாரதப் பாரம்பரியப் பள்ளிகளில் கடைநிலை சாதியைச் சேர்ந்த சிலர் படித்திருப்பதை எடுத்துக்காட்டினால் அது விதி விலக்கு என்று நிராகரித்தும்விடுவார்கள். ஆதி காவியத்தை எழுதியவர் கடை நிலைத் தொழிலில் இருந்தவர் (அல்லது ஆதி காவியம் கடைநிலைத் தொழிலில் இருந்தவரின் பெயரிலேயே தொகுக்கப்பட்டிருக்கிறது) என்பதை புராணம் என்று ஒதுக்கிவிடுவார்கள். மேற்குலக விதி விலக்குகள் மட்டுமே பொருட்படுத்தத் தகுந்தவை!

பவுத்தம், சமணம், இஸ்லாம் போன்றவை பாரதத்தில் பல நூற்றாண்டுகள் இருந்த நிலையிலும் கடைநிலைப் பிரிவினர் கல்வி கற்காமல் இருந்ததற்கு இந்து சமூக சாதி அமைப்பே காரணம் என்ற அர்த்தம் வரும்வகையிலேயே இந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கவும்படும்.

அந்தக் குலவழிக் கல்வியில் இந்து சமூகம் கட்டடக்கலையில், நகைக் கலையில், விவசாயத்தில், மருத்துவத்தில், அரச நிர்வாகத்தில், ஆயுத உற்பத்தியில், ஆன்மிகத்தில், பொருளாதாரத்தில், கணிதத்தில், இலக்கியத்தில், சமூக ஒழுங்கமைவில் உன்னத நிலையில் இருந்ததைச் சொல்லமாட்டார்கள்.

கிறிஸ்தவர்களால் இந்தியாவில் கொடுக்கப்பட்ட கல்விதான் தாய் மொழிக் கல்விமீது நடத்தப்பட்ட மாபெரும் முதல் தாக்குதல். இந்துப் பள்ளிகள் ஒரு சில நூற்றாண்டுகள் கழித்து அதே பாதையில் வீர நடை போடத் தொடங்கியுள்ளன என்றாலும் தாய் மொழிக் கல்வியின் நெஞ்சில் கத்தியைச் செருகியது கிறிஸ்தவ மடாயலங்கள்தான் என்பதைச் சொல்லவேமாட்டார்கள்.

அந்த கிறிஸ்தவ மடாலயங்கள் கற்றுத் தந்த கல்வி என்பது பெரும்பாலும் நவீன சமூகத்து வேலை ஒன்றை இலக்காகக் கொண்டு கற்றுத் தரப்படுவது. அங்கு வேறு தர்மங்களுக்கு எந்த முக்கியத்துவமும் கிடையாது. குலவழிக் கல்வி தரப்பட்ட காலத்தில் ஒரு பிராமண மருத்துவர் தலித்துக்கு மருத்துவம் பார்த்திருக்கவில்லைதான். ஆனால், தலித்களுக்கு திறமை வாய்ந்த தலித் மருத்துவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதைச் சொல்லமாட்டார்கள். அதுமட்டுமல்லாமல் பிராமண மருத்துவர், பிராமணர்களுக்கு அவர் நேர்மையான மருத்துவ சிகிச்சையையே தந்திருக்கிறார். இன்றைய அலோபதி மருத்துவர்கள்போல் வாங்கிப் போட்ட மிஷின்களின் பணத்தை கறந்தாகவேண்டுமென்றும் கட்டி வைத்திருக்கும் மருத்துவமனைக்கான வட்டிக்காக நோயாளியின் உடம்பில் கத்தியைப் பாய்ச்சியாகவேண்டும் என்றும் அவர்கள் நடந்துகொள்ளவில்லை.

இதற்கு முக்கிய காரணம் அன்றைய குல வழிக் கல்வி தர்மத்துக்கு உட்படதாக மதச் செல்லாக்குக்கு உட்பட்டதாக இருந்தது. என்றைக்கு கல்வியில் இருந்து மத நீக்கம் செய்யப்பட்டதோ அன்றே அது தனி நபரின் தர்ம நம்பிக்கைக்கு உட்பட்டதாக ஆகிவிட்டது. பெரும்பாலான இன்றைய மருத்துவர்கள் சுய நலமிகளாகிவிட்டிருப்பதற்கு நவீனக் கல்வியின் மத நீக்கமே காரணம். நவீன மருத்துவர்களின் தவறுக்கு நவீன மருத்துவமோ அறிவியலோ காரணமல்ல. ஆனால், பாரம்பரிய மனிதர்களின் தவறுகளுக்கு மட்டும் பாரம்பரிய மதமே காரணம் என்பதுதான் ஆதாயம் தரும் உண்மை என்பதால் அதுவே ஆறத் தழுவிக்கொள்ளப்படுகிறது.

முந்தைய காலகட்டத்தில் குல வழித் தொழில் உலகம் முழுவதும் இருந்தபோது ஒவ்வொரு குலத்தைச் சேர்ந்தவரும் தத்தமது குல முன்னோர்களிடமிருந்து கண்டும், கேட்டும், கைகளால் செய்து கற்றுக் கொண்டதைக் கல்வி என்று சொல்ல முடியாதா என்ன? இன்றைய நவீனக் கல்வியைவிட வேலைக்கான உத்தரவாதத்தை அது மிக தெளிவாக அழுத்தமாக 100 சதம் உறுதி செய்திருந்தது. இன்று நவீன கல்வி பெற்று வேலையில்லாமல் இருப்பதுபோல் அன்று யாரும் நடுத்தெருவில் விடப்பட்டிருக்கவில்லை.

பீ அள்ளுவது ஒரு வேலையா... குலவழித் தொழிலாக அதைச் செய்ய நேர்ந்ததற்கு இந்து சாதி அமைப்புதானே காரணம். பிரிட்டிஷார் அறிமுகப்படுத்திய அனைத்து ஜாதியினருக்கும் கல்வி என்பதுதானே அவர்களை அந்த இழிவான தொழிலில் இருந்து மீட்டது என்ற வாதத்துக்கு மூன்று பதில்கள் சொல்ல முடியும்.

ஒன்று அந்தத் தொழில் வெகு பிந்தைய காலத்தில் தோன்றியது.

இரண்டாவதாக சிந்து சரஸ்வதி காலகட்ட நகரம் என்பது தெளிவான கழிப்பறைக் கால்வாய் வசதியுடன் அமைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது அனைவருக்கும் கல்வி கொடுக்காததால்தான் ஒரு சாதி மலம் அள்ளும் வேலையில் முடங்கிவிட்டது என்று சொல்வதை ஏற்கவே முடியாது.

மூன்றாவதாக, ஏராளமான சீர்திருத்தச் செம்மல்களும் நவீன அறிவியல் மேதைகளும் கார்ப்பரேட் கொம்பன்களும் உருவாகிவிட்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் கூட சாக்கடை வேலைகள் மனிதர்களாலேயே செய்யப்பட்டும் வருகின்றன. நவீன கல்வியும் நவீன காலகட்டமும் ஏற்படுத்தியிருக்கும் இந்த இழிநிலையைவிட இத்தகைய வசதி வாய்ப்புகள் இருந்திராத பாரம்பரிய காலகட்டத்தில் இருந்த இழிநிலைமையைக் கொஞ்சம் நிதானமாகவே விமர்சிக்கலாம். நேற்றைய ”பின்னடைவை’ விமர்சிப்பதன் மூலம் இன்றைய இழிவின் பொறுப்பில் இருந்து தப்பித்துக்கொள்ளும் சாதுரியம் மிகவும் கேவலமானது.

பத்து பதினைந்து வருடங்கள் ஒரு பாடக் கல்வியைப் பெற்றுவிட்டு வேறொரு துறையில் பணிபுரியும் அபத்தமோ, படித்த பாடத்தில் பத்து சதவிகிதம் மட்டுமே பயன்படக்கூடிய வேலையைச் செய்து வரும் அசட்டுத்தனம் பற்றியோ யாரும் சொல்லமாட்டார்கள் (ஒரு லிட்டர் பால் பாத்திரத்தில் 10 லிட்டர் பாலை ஊற்றும் மடத்தனம் இது).

ஒருவர் எவ்வளவுக்கு எவ்வளவு அறிவை வெளிப்படுத்துகிறாரோ அவ்வளவுக்கு அவ்வளவு அவர் அறிவற்றவர் என்பது புலனாகும் வகையில் பேசுவதே பலருக்கு வாய்த்திருக்கிறது. அதிலும் இந்து மதத்தை விமர்சிக்கும் வாக்கியங்கள் என்றால் மூளையைக் கழற்றிவிட்டுப் பேசுவதே இடதுசாரி அடையாளமாக இருக்கிறது.  

Thursday 13 July 2017

சைவ மாமிசம்



(மாமிசம் போன்ற மாமிசம்)


மனிதர் சைவரா... அசைவரா?

மனிதரின் மூதாதை இனமான குரங்குகள் சைவ உணவை உண்பவையே. அவற்றிலிருந்து கிளைத்த ஆதி மனிதரும் சைவ உணவைத்தான் பல ஆயிரம் ஆண்டுகள் உண்டும் வந்திருப்பான். எப்போது காட்டுத் தீயில் வெந்த விலங்குகளின் உணவை மனித இனம் ருசித்துப் பார்த்ததோ அதன் பிறகுதான் தீயைக் கண்டுபிடிக்கவும் (உருவாக்கவும்) அதில் இறைச்சியை வாட்டவும் கற்றுகொண்டு அதன் பிறகே அசைவ உணவுக்கு மனித இனம் பழகியிருக்கும். மனிதருடைய உடம்புக்கு பச்சை மாமிசத்தை ஜீரணம் செய்யும் வலிமையோ கூர்மையான நகங்களோ கோரைப் பற்களோ கிடையாது என்பதால் மனித இனம் இயற்கையால் சைவ பட்சிணியாகவே படைக்கப்பட்டிருக்கிறது என்பது தெளிவு. ஆனால், தீயில் வாட்டி உண்ணக் கற்றுக்கொண்டதும் மனித இனம் வேட்டையாடத் தொடங்கிவிட்டது. ஒருவேளை குரங்கில் இருந்து வந்த மனிதர் அப்படியே நேராக விவசாயம் செய்யக் கற்றுக்கொண்டிருந்தால் மனித இனம் சைவ பட்சிணியாகவே பரிணாமம் அடைந்திருக்கும். தீயால் மனித இனம் தீய திசை திரும்பிவிட்டது.

ஒருவர் எதைச் சாப்பிடவேண்டும் என்பதை அவரும் அவருடைய உடம்பும்தான் தீர்மானிக்கவேண்டும் என்பது உண்மைதான். ஆனால், இந்த உலகில் எந்த உயிர்கள் வாழவேண்டும் எவையெல்லாம் கொல்லப்படலாம் என்பதைச் சொல்லும் ஹிட்லரிய சுதந்தரத்தை யாருக்கும் தரமுடியாது. ஓர் உயிர் வாழ இன்னோர் உயிரைக் கொல்வது தவறு என்ற அடிப்படை நாகரிக மனோபாவம் வேட்டை சமூகத்திலேயே தோன்றியிருக்கும் என்றே தோன்றுகிறது. பழங்கள், காய்கள், கிழங்குகள் போன்றவற்றைத் தொடர்ந்து உண்டுவந்ததன் மூலம் வெறுமனே புலியைப் போலவோ சிங்கத்தைப் போலவோ முழு அசைவராக மனித இனம் பரிணமித்திருக்கவில்லையே. இதனால் வேட்டை மனிதர்க்கு(ம்) உயிர்க் கொலைமேல் ஒருவித ஒவ்வாமை இருந்திருக்கிறது என்று யூகிக்கலாம்.

புத்தர், மகாவீரர், திருவள்ளுவர், இயேசு போன்ற வழிகாட்டிகள் அனைவருமே உயிர்க்கொலையைக் கடுமையாகக் கண்டிப்பவர்களே. இவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் நபர்களும் இவர்கள் ”காட்டிய’ வழியைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுபவர்களும் அசைவ உணவு விஷயத்தில் தமது வழிகாட்டிகளையும் அவர்களுடைய போதனைகளையும் குப்பைக்கூடையில் எறியத் தயங்குவதில்லை. சமணம் நீங்கலாகப் பிற எந்த மதமும் இந்த விஷயத்தில் பெரிதாக எந்த நல்லுணர்வையும் தொடர்ந்து வலியுறுத்தவில்லை. மத்திய கால ஐரோப்பாவில் லென்ட் போன்ற விழாக்களின்போது அசைவ உணவைத் தவிர்ப்பது பழக்கமாக இருந்திருக்கிறது. ஆனால், இன்றோ கிறிஸ்தவ விழா என்றால் நல் மேய்ப்பன் கையில் இருக்கும் இளம் வெள்ளாட்டுக் குட்டியை (அவர் இதைச் சாப்பிடு என்றுதான் கையில் எடுத்துக் காட்டுகிறார் என்றுகூடச் சொல்வார்கள்... Thou shall not KILL என்பதைக்கூட Thou shall not MURDER என்று விளக்குபவர்கள்தானே) வெட்டிக்கொன்று தின்றுதான் கொண்டாடவேண்டும் என்ற அளவுக்கு ஆகிவிட்டிருக்கிறது. இஸ்லாத்தைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்... பிரியாணியைத் தின்பதற்காகத்தான் அமைதி மார்க்கத்தில் இணைந்திருக்கிறார்களோ என்று அஞ்சும் அளவுக்கு அது மட்டன் பிரியாணியில் ஆரம்பித்து மட்டன் பிரியாணியில் முடியும் மதமாகவே இருக்கிறது. உயிர்கள் மீதான அவர்களுடைய பெருங் கருணை என்பது விழா நாளில் வெட்டிக் கொல்வதற்காக வளர்க்கப்படும் ஆடுகளின் கொழுத்த சதை மீது காட்டும் பேரன்பே. இந்து மதத்தைப் பொறுத்தவரையில் நாட்டார் வழிபாட்டு முறையில் அசைவப் படையல் உண்டு என்றாலும் செவ்வாய், வெள்ளி, சனி போன்ற நாட்களில் அவற்றை அறவே தவிர்ப்பது, வீடுகளில் செய்யப்படும் பூஜைகளில் சைவப் படையல் மட்டுமே தருவது என ஓரளவுக்கு மிதமாக இருக்கிறது. ஆனால், இந்துக்களில் பெரும்பான்மையினர் அசைவர்கள் என்பதால் அவர்களையும் அப்படியொன்றும் விலங்குகளின் மீது அன்பு கொண்டவர்கள் என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. உயிர்க்கொலைக்குப் பூரண மத அங்கீகாரம் இல்லை என்று மட்டுமே சொல்லமுடியும்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் குறிப்பாக தமிழகத்தில் சைவ உணவுக்கு ஒருவர் ஆதரவாகப் பேசுகிறார் என்றால் அவர் நிச்சயம் சாதி வெறி பிடித்த பிராமணராகத்தான் இருக்கவேண்டும் என்று சொல்லும் அளவுக்கு அரசியல் மூடத்தனமும் வெறுப்பும் ஊறிக்கிடக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் சைவ உணவு ஆதரவாளர்களாக பிராமணர்களைப் பழிப்பவர்களில் பலர் புத்தரைத் தமது ஆதர்ச சீர்திருத்தவாதியாக வேறு சொல்லிக்கொள்வார்கள். சேகுவேரா படம் பொறித்த டீ சர்ட் அணிவதன் மூலமே புரட்சியாளராகிவிடும் போராளிகள் நிறைந்த உலகில் பல்லிடுக்கில் சிக்கிய சிக்கன் துண்டை எடுத்தபடியே அல்லது நல்லி எலும்பைக் கடித்தபடியே புத்தரைப் புகழ்வதும் சகஜம்தானே.

ஆனால், இந்த உலகில் தனது தொண்டர்களிடம் உண்மையான தாக்கத்தை செலுத்திய சீர்திருத்தவாதி என்று புத்தரையும் மகாவீரரையும் மட்டுமே சொல்ல முடியும். சீனாவுக்கு புத்த மதம் சென்றபோது அது ஒரு சிறிய சமரசத்தை முன்னெடுத்தது. இந்தியாவில் இருந்தவரை பவுத்தமும் சமணமும் அசைவத்தைக் கடுமையாக ஒடுக்கவே செய்தன. இன்றும் சமணர்கள் மட்டுமே அசைவ உணவை அறவே தவிர்ப்பவர்களாக இருக்கிறார்கள். ஆனால், பவுத்தம் சீனாவில் ஒரு சொட்டு ரத்தம் சிந்தாமல் பரவியபோது உள்ளூர் மக்களின் வாழ்க்கை மதிப்பீடுகளுக்கு மதிப்பு கொடுக்கத் தீர்மானித்தது. உண்மையில் புத்தர் மூலமாகவே பவுத்தம் உலகம் முழுவதும் பரவியிருந்தால் அவர் அசைவ விலக்கத்தை துணிந்து நிலை நிறுத்தியிருப்பார் பவுத்த துறவிகளுக்கு அவர் அளவுக்கு வசீகரமும் அர்ப்பண உணர்வும் கிடையாததால் அந்தப் பகுதி மக்களுக்காக அசைவத்தை அனுமதிக்க முடிவு செய்தார்கள். அதே நேரம் புத்தர் செலுத்திய தாக்கம் அதிகம் என்பதால் ஒரு மூன்றாம் வழியைக் கண்டுபிடிக்க முயன்றார்கள். அதுதான் சைவ மாமிசம்! மாமிசம் போலவே இருக்கும்; ஆனால், சைவப் பொருட்களால் செய்யப்பட்டிருக்கும்.

சமணர்களும் இந்திய பவுத்தர்களும் இந்த விஷயத்தில் மிகவும் கறாராக உன்னத நிலையிலேயே இருந்துவிட்டிருக்கிறார்கள். இந்தியாவிலும் அசைவ விரும்பிகள் உண்டு. என்றாலும் நீ பவுத்தராக வேண்டுமென்றால் அசைவத்தைத் தவிர்த்துத்தான் ஆகவேண்டும். நீ சமணர் என்றால் அசைவத்தைத் தொடவே கூடாது என்றே சொல்லியிருக்கிறார்கள். அசைவம் போல் இருக்கும் சைவம் என்ற சிந்தனைகூட அவர்களுக்கு அதிர்ச்சியையும் வேதனையையும் தோற்றுவித்திருக்கிறது.. எனவே, பவுத்தமும் சமணமும் உருவாகிய இந்தியாவில் சைவ மாமிசம் என்ற கருத்தாக்கம் உருவாகியிருக்கவே இல்லை. சீனாவில் அது தேவையாக இருந்ததாக பவுத்த துறவிகள் நினைத்தார்கள். எனவே, டோஃபு என்ற மாமிசம் போன்ற மாமிசம் உருவாக்கப்பட்டது. அன்றிலிருந்து அவ்வகையிலான ஏராளமான மாமிச மாற்று உணவுகள் தொடர்ந்து உருவாக்கப்பட்டுவருகின்றன.ஒருவகையில் டோபு தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்ட உணவுதான்; தயிர் பயன்படுத்திய கீழைத்தேயர்களின் வருகையைத் தொடர்ந்து சோயா பாலில் உப்பு சேர்க்கப்பட்டு தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், பவுத்தம் பரவிய நாடுகளில் எல்லாம் பவுத்தத்தின் வருகைக்குப் பின்னரே டோஃபு அறிமுகமாகியிருப்பதிலிருந்து அசைவ மாற்றாக அது முன்னெடுக்கப்பட்டிருக்கும் என்று எண்ண இடமிருக்கிறது. அதிலும் பாம்பு, பல்லி, நாய், பூனை, கழுதை, குரங்கு என சதை உள்ள எல்லாவற்றையும் தின்னும் பழக்கம் கொண்ட சீனாவில் டோஃபு கண்டுபிடிக்கப்பட நிச்சயம் பவுத்தமே காரணமாக இருந்திருக்கும் என்று துணிந்து சொல்லலாம்.

சூரிய ஒளியைப் பயன்படுத்தி தாவரங்கள் கார்ப்போஹைட்ரேட், புரதங்கள், ஃப்ரக்டோஸ் போன்றவற்றை உருவாக்குகின்றன. சில விலங்குகள் தாவரங்களைச் சாப்பிட்டு அவற்றைக் கொழுப்பாக உடம்பில் சேர்த்துவைக்கின்றன. கார்போஹைட்ரேட், ஃப்ரக்டோஸ் போன்றவற்றில் இருந்து க்ளுகோஸ் தயாரித்துக்கொள்ளும் உயிரினங்கள் தாவரங்களையும் கொழுப்பில் இருந்து உடலுக்கான சக்தியைத் தயாரித்துக்கொள்ளும் உயிரினங்கள் விலங்குகளையும் உண்டு வாழ்கின்றன. மனிதர்கள் தாவரங்களையும் விலங்குகளையும் ஒரு சேர உண்ண முடிந்தவர்களாகப் பிழையான பரிணாம வளர்ச்சி பெற்றவர்களாக இருப்பதால் விலங்குகளை அவர்களிடமிருந்து காப்பது மிகவும் அவசியமான செயலாகவே இருக்கிறது. ஆனால், மதம் சார்ந்த காரணங்கள், நாகரிக வளர்ச்சி போன்றவற்றால் விலங்குகளுக்கு அப்படியொன்றும் நன்மை எதையும் உருவாக்கிடமுடியவில்லை. நவீன காலகட்டத்தில் உயிர்க்கொலைத் தொழிலானது பிரமாண்ட அளவில் விஞ்ஞானத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பூதாகரமாக நடந்துவருகிறது. கேவலம் அற்ப மனிதனின் சுவை நரம்புகளைத் திருப்திப்படுத்த நாளொன்றுக்கு கோடிக்கணக்கில் கோழிகளும் குஞ்சுகளும் ஆடுகளும் மாடுகளும் பன்றிகளும் கன்றுகளும் மீன்களும் கொன்று குவிக்கப்படுகின்றன. எந்தத் தொழில்நுட்பம் இதைச் சாதித்துவிட்டிருக்கிறதோ அதே அறிவியல் தொழில்நுட்பமே இன்று அதற்கான பரிகாரத்தையும் முன்னெடுக்கத் தொடங்கியிருக்கிறது.



மார்க் போஸ்ட் போன்ற நவீன விஞ்ஞானிகள்/பேராசிரியர்கள் கல்ச்சர்ட் மீட், க்ளீன் மீட் என செயற்கை மாமிசத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். விலங்குகளிடமிருந்து முதிர் நிலை ஸ்டெம் செல்கள் வலிக்காமல் எடுக்கப்பட்டு விலங்குகளின் உடம்புக்கு வெளியே மாமிசம் தயாரிக்கும் புதிய தொழில்நுட்பம். யூத மதத்திலும் அசைவ உணவு மீதான விலகல் உண்டு என்பதால் அந்நாட்டு நிறுவனங்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. இன்று இது செவ்வாய் கிரகத்துக்குச் செல்லும் பயணம் போல் அதிகச் செலவு பிடிக்கும் விஷயமாகவே இருக்கிறது. ஆனால், இந்த ஆராய்ச்சிகள் வெற்றி பெற்று வர்த்தகப் பயன்பாட்டுக்குத் தயாராகிவிட்டால் சைவ மாமிசத்தின் விலை கணிசமாகக் குறைந்துவிடும். இந்திய பவுத்த சமண இந்து மதங்கள் இதில் கூடுதல் அக்கறை செலுத்தவேண்டும். மாமிசம் போன்ற மாமிசம் என்ற எண்ணம் கொஞ்சம் கீழானதுதான். என்றாலும் உயிர்க்கொலையைத் தடுக்க அது பெரிதும் உதவும் என்றநிலையில் சமண வணிக ஜாம்பவான்கள் இந்த ஆராய்சியில் நிச்சயம் இறங்கவேண்டும். அதிலும் மேற்குலகில் இந்த ஆராய்ச்சியில் ஈடுபடும் நிறுவனங்கள் அந்தத் தயாரிப்பு முறைக்கும் தொழில்நுட்பத்துக்கும் காப்புரிமை பெறுவதில் குறியாக இருக்கிறார்கள். அந்த ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிகளுக்கு அப்படியான வணிக எண்ணம் கிடையாது என்றாலும் அவர்களால் அவர்களுடைய எஜமானர்களை மீறி எதுவும் செய்துவிட முடியாது. எனவே இந்திய சமண வணிக சக்கரவர்த்திகள் இந்த விஷயத்தில் எளிய உயிர்களின் மீதான கருணையுடன் ஈடுபட்டாகவேண்டும்.

சைவ மாமிசம் மூலம் கிடைக்கவிருக்கும் பயன்கள் ஏராளம்:

முதலாவதாக விலங்குகள் எதுவுமே கொல்லப்படத் தேவையில்லை.

இரண்டாவதாக இன்று விலங்குகளை வளர்க்கப் பயன்படுத்தும் நிலம், நீராதாரம், எரிசக்திகளில் பத்து சதவிகிதம் இருந்தாலே போதுமானது.

அடுத்ததாக இந்தச் செயற்கை மாமிசமானது சோதனைச்சாலையில் தயாரிக்கப்படும் என்பதால் சுத்தத்தை முழுவதுமாக பராமரிக்க முடியும். பாக்டீரியா போன்ற பிரச்னைகளில் இருந்து பாதுகாப்பு பெற முடியும்.

தேவையான சத்துகளை அதில் எளிதில் சேர்க்கவும் முடியும். உதாரணமாக மீன் மாமிசத்தில் இருக்கும் ஒமேகா ஃபேட்டி அமிலத்தை இதில் எளிதாக அனைத்து மாமிசங்களிலும் சேர்த்து உற்பத்தி செய்யமுடியும்.

இது லாபம் கொழிக்கும் தொழிலும் கூட.

இவையெல்லாம் இன்னும் பத்து இருபது ஆண்டுகளில் நடந்துவிடும் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். எம் உலகில் விலங்குகள் தாமாகவே உயிர் துறக்கும் என்று நெஞ்சு நிமிர்த்திச் சொல்லும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கவிருக்கிறது.

உலகம் சைவத்துக்குத் திரும்பத் தயாராகிக் கொண்டிருக்கிறது.

நீங்கள் தயாரா..?

கடைசியாக..

ஜல்லிக்கட்டு விளையாட்டைத் தடை செய்து தமிழர்களின் கலாசாரத்தை அழிக்க முற்படுவதாகக் குற்றம்சாட்டப்பட்ட பீட்டாவைப் பார்த்து பலரும் அரட்டை அரங்க உற்சாகத்துடன் கேட்ட கேள்வி... ஆடு மாடுகள் தினம் தினம் கொல்லப்படுகிறதே... அதற்கு என்ன வழி..? அதைத் தடுக்க நீ ஏதேனும் செய்திருக்கிறாயா..?

இந்தக் கேள்விக்கு பீட்டாவிடம் பதில் இருக்கத்தான் செய்தது. அதைக் கேட்க அன்று யாரும் தயாராக இருந்திருக்கவில்லை. அனைத்துவகை மாமிசங்களுக்கும் மாற்று உணவை (அதே நிறம், சுவை, மணம் கொண்டது) பரிந்துரைத்து வருகிறது. பழங்கால இந்து சமயத்தில் தெய்வங்களுக்கு விலங்குகள் பலி கொடுக்கப்பட்டுவந்த மரபு பூசணிக்காயில் அல்லது எலுமிச்சம் பழத்தில் குங்குமம் கலந்து வெட்டி பலிகொடுக்கும் கலாசாரமாக பவுத்த/சமணத் தாக்கத்தினால் மாற்றம் பெற்றதுபோல் ஒரு எளிய வழிமுறையாக அசைவ மாற்று உணவுகளை அதே ருசியுடன் தயாரித்துத் தருகிறது. பீட்டா சைவ மாமிசம் தயாரிக்கும் விஞ்ஞானிக்கு (விஞ்ஞானியர் குழுவுக்கு) கோடிக்கணக்கில் ரூபாய் பரிசு என்று அறிவித்திருக்கிறது. சைவ மாமிசம் தயாரிக்கும் ஆராய்ச்சிக்கு ஏராளமான நிதியை அது தந்தும் வருகிறது. இதற்காகவே சைவ மாமிசத்தை எதிர்க்கவேண்டும் என்று சொல்லக்கூடியவர்கள் இருக்கக்கூடும். அவர்கள் சக மனிதரின் சதையும் சுவையானது என்று கொன்று தின்று கொழுத்து வந்த கானிபல் கூட்டத்தின் வாரிசாகவே இருப்பார்கள்.

இயற்கையே...

பல்கிப் பெருகப் போகும் விலங்குகளை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்.



விலங்கினும் கீழானவற்றை நீ கவனித்துக்கொள்(ல்).

Tuesday 4 July 2017

அமைதி மார்க்கம்

அமைதி மார்க்கம்

அமைதி மார்க்கத்தின் அளவற்ற அருளாளன்

அமைதி மார்க்கத்தின் தூதுவருக்கு (மட்டுமே)

அமைதி மார்க்கத்தின் வழிகளைப் போதித்தார்

போதனை பெரிதாக ஒன்றுமில்லை - அமைதி... பேரமைதி... மயான அமைதி.

அதுவே அவர் சொன்ன ஒற்றைத் தத்துவம்.



அமைதி மார்க்கிகள்

அரேபியாவின் பாலை மண்ணில் அமைதியைக் கொண்டுவர முயன்றார்கள்

முதலில் அமைதி மார்க்கத்தை அவர்கள் அமைதியாக போதித்தபோது யாரும் செவிமடுக்கவில்லை.

எனவே, அளவற்ற அருளாளனின் ஆணைக்கு ஏற்ப அமைதியைக் கொண்டுவர

மக்களை முதலில் அடிமையாக ஆக்கினார்கள்

சாட்டையால் அடித்தார்கள்

அப்போதும் சத்தம் வரவே வாள் கொண்டு வெட்டினார்கள்.

அமைதி வந்தது.



பாலைவனக் குளிர் காற்று வாளால் வெட்டப்பட்டவர்களின் உடலை ஊடுருவியபோது எழுந்த கூக்குரலை

தமது தொழுகைக்கால மந்திரமாக எடுத்துக்கொண்டு உலகை வலம் வரத் தொடங்கினார்கள்.

குதிரைகளில் ஏறி உலகம் முழுவதும் புழுதி பரப்பியபடி வாள் கொண்டு அமைதியைப் பரப்பினார்கள்



நீண்ட வாள் கொண்டு மட்டுமே அமைதியை நிலைநாட்டவேண்டும் என்றும்

குறூவாள் கொண்டு அமைதியை நிலைநாட்டவேண்டும் என்றும் சொன்னவர்களுக்கு இடையே கூட

வெட்டும் குத்தும் தொடர்ந்தன

மிகப் பெரிய இறைவன் சொன்ன அமைதியைக் கொண்டுவரத்தான் எல்லாமும்



வாள் அதன் பங்குக்கான ரத்தத்தை அமைதியாகப் பெருக்கெடுக்கச் செய்த பிறகு மெள்ள உறைக்குத் திரும்பியது.

நவீன காலத்தில்

நவீன ஆயுதங்கள் கொண்டு அமைதியைப் பரப்பலாம் என்பது விரைவிலேயே கண்டுகொள்ளப்பட்டது

(சொல்லப்பட்ட முக்கிய காரணம் வாளால் மிக மெதுவாகத்தான் அமைதியைக் கொண்டுவர முடியும்)

எனினும் வாளை அவர்கள் முழுவதுமாகக் கைவிட்டுவிடவில்லை.



அமைதியைக் கொண்டுவர வகுத்திருக்கும் வழிமுறையில்

அவர் எவ்வளவு பெருங்கருணையாளன் என்பது புலப்படுவதாகவே இருக்கிறது.

பயன்படுத்தும் வாள் மிகக் கூராக இருக்கவேண்டும் (இல்லையெனில் அறுக்கப்படும் உயிருக்கு வலிக்கும் அல்லவா)

வேகமாக

தொண்டைப் பக்கம் அறுக்கவேண்டும்

முழு ரத்தமும் வடியும் வரை பொறுமை காக்கவேண்டும்

தானாக இறந்தவற்றை உண்ணுவது ஹராம்!

கழுத்தை நெரித்தோ, மயக்கமடையச் செய்தோ அடித்தோ அமைதியடையச் செய்யக்கூடாது

இவையெல்லாவற்றையும்விட

அமைதிப்படுத்தும்போது பிஸ்மில்லா என்று ஓதியபடியேதான் அறுக்கவேண்டும் என்ற வழிகாட்டுதல்

அமைதியின் ஏக இறைவனாக எந்தப் போட்டியுமின்றி அவரை முன்னிறுத்தவும் செய்கிறது.



ஆடுகளை அமைதிப்படுத்த ஹலால் செய்து அறுக்கவேண்டும் என்று

அளவற்ற அருளாளன் சொல்லியிருப்பதாலும்

மனிதர்களில் அமைதி மார்க்கத்தைப் பின்பற்றாதவர்கள் விலங்குகளுக்கு சமமே என்பதாலும்

கூட்டம் கூட்டமாகச் செவ்வுடை அணிவித்து ஹலால் ஓதி அறுத்தும் வருகிறார்கள்.

வரிசையாகப் படுக்க வைத்து காது மடலில் சுட்டு அமைதியைக் கொண்டுவருகிறார்கள்.

அதிகம் சத்தம் போடும் பச்சிளம் குழந்தைகளை

கூண்டோடு நீரில் அமிழ்த்தியும்

தீயில் இட்டும் அமைதியைக் கொண்டுவருகிறார்கள்

அமைதி மார்க்கத்தின் வருடாந்தர விழா நாட்களில்

கூடுதல் அமைதியைக் கொண்டுவர உலகம் முழுவதும் வெடிகுண்டுகளை வெடிக்கிறார்கள்.

பிற மதத்தவர்களின் திருவிழாக் கூச்சல்களை மட்டுப்படுத்தி அங்கு அமைதியைக் கொண்டுவர

கூட்டத்துக்குள் டிரக்குகளை ஓட்டுகிறார்கள்.



அமைதி மார்க்கத்தின் பர்தா போன்ற கரு மேகங்கள்

உலகம் முழுவதிலும் தன் கரிய நிழலைப் பரப்பிவருகின்றன

அமைதி மார்க்கிகளால் அமைதியடைபவர்களின் ரத்தம் மெள்ள உலக வரைபடம் முழுவதும் பரவுகிறது

அமைதி மார்க்கத்தின் நிலங்களில் ஒட்டகங்களும் சாகின்றன

மன்னிக்கவும்

கொல்லப்படுகின்றன.

பசும் புல்வெளிகளில் மேயும் ஆவினங்கள் (குறிப்பாகப் பசு) எழுப்பும் சத்தம்

அமைதி மார்க்கத்தின் புத்திரர்களை பெரிதும் சஞ்சலமடையச் செய்கிறது.

சமாதானப் புறாக்களின் க்க்..க்க்.. சத்தம்

அமைதி மார்க்கத்தின் புத்திரர்களை ஆத்திரமடையச் செய்கிறது

மயில்களின் காலடிச் சத்தமும் அகல் விளக்குகளின் சுடரின் அசைவு எழுப்பும் சத்தம் கூட

அமைதி மார்க்கத்தின் புத்திரர்களை ஆவேசப்படுத்துகிறது

அவர்களின் ஆண்டவர் அமைதியை பேரமைதியை மயான அமைதியை

உலகம் முழுவதும் உருவாக்கும் புனிதக் கடமையைத் தந்திருக்கிறார்



அமைதி மார்க்கத்தின் புத்திரர்கள் உலகம் முழுவதும் பரவியிருக்கிறார்கள்

சிலர் ஐந்து நேரம் தொழுகிறார்கள் (நெற்றியில் தழும்பு விழும் அளவுக்கு)

சிலர் ஊடகங்களில் வேலை செய்கிறார்கள்.

சிலர் ’கவிதைகள்’ படைக்கிறார்கள்

சிலர் திரைப்படம் எடுக்கிறார்கள்

சிலர் செண்ட், செல்போன், சிடிக்கள் விற்கிறார்கள்

சாம்பல் பூத்த நெருப்பு போல் சாதுவாக இருந்துவருகிறார்கள்

பெருங்கருணையாளனின் அழைப்பு வரும்போது உடல் மழித்து அல்லது மழிக்காமல்

அமைதியை நிலைநாட்டப் புறப்படுவார்கள்

அளவற்ற அருளாளன் 

அமைதி... பேரமைதி... மயான அமைதி என்றே 

அவர்களுக்கு போதித்திருக்கிறார்